Skip to main content

மோட்டார் வாகன சட்டத்திருத்தங்கள் இன்று முதல் அமல்...

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

new motor vehicle rules for digital documents

 

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தங்கள் இன்று முதல் அமலாகின்றது. 

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின்படி, வாகன ஓட்டிகள் தங்களது ஆர்.சி.புக் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை டிஜிட்டல் முறையில் வைத்திருப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. இந்த புதிய விதிமுறை காரணமாக அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி.புக் காகித ஆவணங்களை, வாகன ஓட்டிகள் வைத்திருக்கத் தேவையில்லை எனவும், அதற்கு பதிலாக டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட்போன்களில் வைத்திருக்கும் ஆவணங்களே வாகனத் தணிக்கையின்போது செல்லுபடி ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற டிஜிட்டல் ஆவணங்கள் வைத்திருக்கும்போது, காகிதத்தால் ஆன ஆவணங்களை மட்டுமே, வாகன ஓட்டிகள் காண்பிக்க தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''அந்த பைக்கை எரியுங்கள்... சேனலை முடக்குங்கள்''- டிடிஎஃப்க்கு குட்டு மேல் குட்டு வைத்த நீதிமன்றம்

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

 "Burn that bike...shut down the channel"-Court slams TDF

 

மூன்றாவது முறையாக டிடிஎஃப் வாசன் தொடர்ந்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

 

அண்மையில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் பிரபல பைக் ரேஸ் யுடியூபர் டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி சென்றபோது வாகனத்தில் முன் சக்கரத்தைத் தூக்கி சாகசம் செய்ய முயற்சி செய்தார். அப்பொழுது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டது. இதில் காயமடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 

இதனைத் தொடர்ந்து டி.டி.எஃப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

இரண்டு முறையும் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் 'நான் அப்பாவி. எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறேன்' என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  டிடிஎஃப் வாசனை பின் தொடரும் 45 லட்சம் சிறார்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதிலும், அதற்காக பலர் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர் என போலீசார் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன், 'விளம்பரத்திற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடும் டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும். டிடிஎஃப் வாசனின் பைக்கை எரித்து விட வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததோடு, சிறையிலேயே அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பித்தார்.

 

 

 

 

Next Story

நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்களின் படங்கள்; அதிக அபராதம் விதிக்க நீதிமன்றம் உத்தரவு

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

Pictures of political leaders on number plates; Court orders higher penalty

 

வாகன நம்பர் பிளேட்டுகளில் அரசியல் தலைவர்களின் படங்களை இடம்பெறச் செய்வது விதிமீறல் இல்லையா? என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

 

மோட்டார் வாகன சட்டத்தை மீறி வாகன நம்பர் பிளேட்டுகளில் விதி மீறில் செய்வதை தடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாகன நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டுவதை போக்குவரத்து காவலர்கள் எவ்வாறு அனுமதிக்கின்றனர்? அரசியல் தலைவர்களின் படங்களை நம்பர் பிளேட்டில் இடம்பெற அனுமதிப்பது விதிமீறல் இல்லையா? மண்டல போக்குவரத்துத் துறை அலுவலர்கள் இதனை ஆய்வு செய்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். வாகனங்களை பறிமுதல் செய்வதோடு மட்டுமல்லாமல் அதிக அபராதங்கள் விதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.