Skip to main content

பெற்ற 16 வயது மகளை கட்டாய பாலியல் தொழிலுக்கு தள்ளிய தாய் கைது!!

Published on 27/07/2018 | Edited on 27/07/2018

 

child

 

 

 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் தனது 16 வயது சொந்த மகளை  பெற்ற தாய் பாலியல் தொழிலுக்கு தள்ளிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்வப இடத்திற்கு சென்று பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளப்பட்ட சிறுமியை மீட்டனர் மேலும் அதற்கு காரணமாக இருந்த அவரது தாய் ஜிஜின், ராஜேஷ், ராபர்ட் என மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

மேலும் அவரது தாயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 6 மாதமாக சொந்த மகளை தாய் கட்டாயப்படுத்தி  தனது  பாலியல் தொழிலில் தள்ளியது தெரியவந்துள்ளது. மேலும்  தாய் ஜிஜின் தனது ஆண் நண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ள மகளை வற்புறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது. 

 

கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்