Skip to main content

திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மாணிக் சாஹா தேர்வு! 

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

Manik Saha elected new Chief Minister of Tripura

 

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் மாநில முதலமைச்சராக இருந்த பிப்லப் குமார் தேவ் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஆளுநரிடம் வழங்கினார். 

 

சர்ச்சை பேச்சு, சர்ச்சைக்குரிய முடிவுகள் என பிப்லப் குமார் தேவ் மீது பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருந்ததாகவும், இதைத் தொடர்ந்து கட்சி மேலிடம் அளித்த அறிவுறுத்தல்களின் படி, அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது.

 

ஜிம் பயிற்சியாளராக இருந்த பிப்லப் குமார் தேவ், பா.ஜ.க.வில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார், திரிபுரா மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்ட பிப்லப் குமார் தேவ், சில ஆண்டுகள் டெல்லியில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ராஜினாமாவைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்-ஐ மேலிடப் பார்வையாளராக திரிபுராவுக்கு அனுப்பிய கட்சித் தலைமை உடனடியாக, புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. 

 

இதையடுத்து, திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்கான பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (14/05/2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய முதலமைச்சராக பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மாணிக் சாஹா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிப்லப் குமார் தேவ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனார். 

 

அதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு செல்லும் டாக்டர் மாணிக் சாஹா அம்மாநில ஆளுநரை நேரில் சந்தித்து, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமைக் கோருகிறார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.