Skip to main content

தேசியக்கொடி அவமதிப்பு; வைரலாகும் வீடியோ

Published on 08/09/2022 | Edited on 08/09/2022

 

Indian national flag to wipe the vehicle..

 

டெல்லியில் தனது இருசக்கர வாகனத்தை இந்திய தேசியக் கொடியால் ஒருவர் துடைத்து சுத்தம் செய்யும் வீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனையொட்டி பெருமளவு மக்கள் தேசியக்கொடிகளை வாங்கி தங்கள் வீடுகளில் ஏற்றி வைத்தனர். மொத்தம் 30 கோடிக்கும் அதிகமான தேசியக்கொடிகள் விற்று தீர்ந்ததாக ஆய்வுகள் தெரிவித்தன.

 

ஆனால் தற்போது டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியில்  50 வயது மதிக்கத்தக்க நபர் தனது இருசக்கர வாகனத்தை மடித்து வைக்கப்பட்ட தேசியக்கொடியை வைத்து துடைத்து சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் அந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் தான் வேண்டும் என்றே அவ்வாறு செய்யவில்லை எனவும் தவறுதலாக நடந்துவிட்டது எனவும் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடராஜர் கோவில் கோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி

Published on 15/08/2023 | Edited on 15/08/2023

 

நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அனைத்து இடங்களிலும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களில் கொடியேற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய இரு தினங்களில் கோவிலின் கிழக்கு கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம். இந்த நிலையில் 77 ஆவது சுதந்திர தின நாளில் காலையில் தேசியக்கொடிக்குக் கோவில் தீட்சிதர்கள் கோவில் கருவறையில் பூஜை செய்து மேளதாளம் முழங்க வெள்ளி தாம்பூலத்தில் எடுத்து வந்து 152 அடி உயரமுள்ள கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்கள். இதனைத் தொடர்ந்து அனைவரும் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்த பட்டொளி வீசி பறந்தது கோடி.

 

 

Next Story

கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 15/08/2023 | Edited on 15/08/2023

 

Chief Minister M. K. Stalin hoisted the national flag on the fort

 

நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இதையொட்டி இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் மோடி  நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

 

இந்நிலையில் திறந்தவெளி ஜீப்பில் கோட்டைக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை கொடுத்தனர். அதனை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை 3வது முறையாக ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்ட அரசு  உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது மக்களிடம் உரையாற்றி வருகிறார்.