Published on 11/02/2020 | Edited on 11/02/2020
கடந்த எட்டாம் தேதி டெல்லியில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. நடைபெற்ற வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை 21 மையங்களில் தொடங்கியுள்ளது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
![Delhi vote turnout ... Aam aadmi is leading in many places !!](http://image.nakkheeran.in/cdn/farfuture/hjusi_rSyj7vT3BWd74jdMopsS72mnkM6WmNLiJYRWI/1581389745/sites/default/files/inline-images/dsfgfgfgff_0.jpg)
முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்பொழுது வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், டெல்லியில் பல இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்று வருகிறது. காலை 8.27 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 53 தொகுதிகளிலும், பாஜக 16 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்க தேவையான 36 இடங்களை விட அதிக தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.