Skip to main content

இதுக்காகவா திருமணத்தை நிறுத்துவாங்க! மணப்பெண் கூறிய காரணத்தை கேட்டு அதிர்ந்த உறவினர்கள்!!

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

jlk

 

உத்தரப் பிரதேசத்தில் திருமணத்தை நிறுத்த மணப்பெண் கூறிய காரணத்தைக் கேட்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

 

இந்தியாவில் சில வருடங்களாக மணமக்கள் திருமண மேடைக்கு வந்த பிறகும் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து திருமணங்களை நிறுத்துவது அவ்வப்போது நடந்து வருகிறது. மதுப் பழக்கம்,  குட்கா பயன்படுத்துதல், காதல் போன்ற பல்வேறு காரணங்களால் திருமணங்கள் பாதியில் நின்று போனது தொடர்பாக பல செய்திகள் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் இந்த மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. அந்த வகையில் உ.பி மாநிலம் மங்கல்பூர் பகுதியில் இன்று நடைபெறுவதாக இருந்த திருமணத்தை மணப்பெண் திடீரென நிறுத்தியதும், அதற்கு அந்த பெண் கூறிய காரணமும் அங்கிருந்த உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

 

உ.பி மாநிலம் மங்கல்பூரில் இன்று நடைபெறவிருந்த தனது திருமணத்தை மணமேடையில் இருக்கும்போது நிறுத்தியுள்ளார் இளம்பெண் ஒருவர். இதுதொடர்பாக அந்த பெண்ணிடம் அங்கிருந்த உறவினர்கள் விசாரித்த போது, அந்த பெண், " இந்த திருமணம் என் வாழ்வில் மிக முக்கியமான ஒரு தருணம். ஆனால் மணமகன் வீட்டில் இந்த நிகழ்ச்சியைப் புகைப்படம் எடுக்க ஒரு புகைப்பட கலைஞர்களையும் அழைக்கவில்லை. இதுவே செய்ய முடியாத ஒரு நபருடன் நான் இனி வரும் காலத்தை எப்படி வாழ்வேன். இவருடன் வாழ எனக்கு விருப்பமில்லை. அதனால் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினேன்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து, திருமணம் நின்றுபோவது உறுதியானதை தொடர்ந்து, காவல் நிலையம் சென்ற இரு குடும்பத்தாரும் தங்களுக்கான திருமண செலவைப் பிரித்து பங்கு போட்டுக்கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.