Skip to main content

பிரதமருடன் காலை உணவு; வான்கடே நோக்கி பிரம்மாண்ட பேரணி

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Breakfast with the Prime Minister; A grand rally towards Wankhede

13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்று வாகை சூடியுள்ளது. இந்திய திரும்பியுள்ள இந்திய வீரர்கள்  மாபெரும் பேரணி ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர்.

இந்திய நேரப்படி நேற்று சரியாக 1:30 மணிக்கு புறப்பட்ட இந்திய வீரர்கள் காலை 7 மணிக்கு டெல்லி வந்தடைந்தனர். இன்று அவர்கள் தங்கியுள்ள ஐடிசி தனியார் விடுதிக்கு பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் நிலையில் ,10:00 மணிக்கு மேலாக விடுதியில் இருந்து புறப்பட்டு பிரதமரை நேரில் சந்திக்க  இருக்கின்றனர். அவருடன் காலை உணவு அருந்திய பின்பு புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வாழ்த்துக்கள் பகிரப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து மதியம் 4 மணி அளவில் டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்டு மாலை 5 மணிக்கு வெற்றிப் பேரணி நடைபெற இருக்கிறது. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற பொழுது தோனி தலைமையிலான கிரிக்கெட் வீரர்கள் கோப்பை எடுத்துச் சென்று வான்கடே மைதானத்தில் வெற்றிவிழா கொண்டாடினார்களோ அதேபோன்று பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்து மணிக்கு மும்பையில் இருக்கும் மரைன் பகுதியிலிருந்து தொடங்கும் இந்த பேரணி வான்கடே மைதானம் வரை கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு வான்கடே மைதானத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில் ஏற்கனவே அறிவித்தபடி இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 125 கோடி ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு விழாவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“சொந்த மாநிலத்தில் மோடியை தோற்கடிப்போம்” - ராகுல் காந்தி பேச்சு

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Rahul Gandhi speech they will defeat Modi in our own state

கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி முதல் முறையாக உரையாற்றினார். அப்போது, ராகுல்காந்தி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு, அக்னி வீரர் திட்டம், பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ராகுல்காந்தி பாஜகவுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். 

குறிப்பாக அவர், “பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பு, வன்மம் ஆகியவற்றை தூண்ட மாட்டார்கள். ஆனால், பாஜகவினர் வெறுப்பை விதைக்கிறார்கள். 24 மணி நேரமும் பாஜகவினர் வெறுப்பை விதைத்து வருகின்றனர். பாஜகவும், பிரதமர் மோடியும் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல' என பல்வேறு குற்றச்சாட்டுகளை சாரம்சமாக வைத்து ராகுல் காந்தி உரையாற்றியிருந்தார். அதேநேரம் இந்துக்கள் குறித்த பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்திய பாஜக எம்.பிக்கள், ராகுலின் கேள்விகளுக்கு பதிலளித்ததோடு கண்டனங்களையும் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ராகுல் காந்தி பேசியதன் எதிரொலியாக குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தினர். அப்போது, பா.ஜ.க இடையே காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால், ஐந்து காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அகமதாபாத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்து பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினர். அப்போது அவர், “நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து குஜராத்தில் அவர்களை தோற்கடிக்கப் போகிறோம். நரேந்திர மோடியையும் பா.ஜ.கவையும் அயோத்தியில் தோற்கடித்தது போல் குஜராத்தில் தோற்கடிப்போம். 

விமான நிலையம் கட்டப்பட்டபோது அயோத்தி விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்தனர். ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அயோத்தியில் இருந்து யாரையும் அழைக்காததால் அயோத்தி மக்கள் கொந்தளித்தனர். அயோத்தியை மையமாக கொண்டு அத்வானி தொடங்கிய இயக்கம், அயோத்தியில் அந்த இயக்கத்தை இந்தியா கூட்டணி தோற்கடித்துள்ளது.

நமது அலுவலகத்தை அவர்கள் உடைத்த விதத்தில், நாம் அவர்களின் ஆட்சியை உடைக்கப் போகிறோம். ஆனால், குஜராத் காங்கிரசில் குறைபாடுகள் உள்ளன. கடந்த தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்து சரியாக போட்டியிடவில்லை. 2017ஆம் ஆண்டில் 3 மாதங்கள் கடுமையாக உழைத்து நல்ல பலன் கிடைத்தது. இப்போது நமக்கு 3 வருடங்கள் உள்ளன, இறுதிக்கட்டத்தை பின்தள்ளுவோம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் ஆட்சி அமைக்கப் போகிறீர்கள். கட்சித் தலைமை, நான், என் சகோதரி உட்பட அனைவரும் உங்களுடன் நிற்கப் போகிறோம்” எனக் காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசினார்.

Next Story

இந்திய கிரிக்கெட் அணிக்கு மகாராஷ்டிரா அரசு சார்பில் பரிசு அறிவிப்பு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Announcement of prize for the Indian cricket team on behalf of Maharashtra govt

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று (04.07.2024)  டெல்லி வந்தனர். அப்போது டெல்லி விமான நிலையத்தின் வெளியே திரளாகக் காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு காலை 11 மணியளவில் பிரதமர் மோடி காலை உணவளித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு டெல்லியிலிருந்து புறப்பட்டு மும்பை  வந்தடைந்தனர். அப்போது இந்திய அணியினர் வந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் (WATER SALUTE) அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தனது வெற்றி அணிவகுப்பை மும்பையில் தொடங்கினர். இந்திய கிரிக்கெட் அணியின் வருகைக்காக மும்பை மரைன் டிரைவில் பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்திய அணியின் வெற்றி அணிவகுப்பு மரைன் டிரைவிலிருந்து வான்கடே மைதானம் வரை நடைபெற்றது. இதனையடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கொண்ட நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய்க்கான காசோலையை பிசிசிஐ அதிகாரிகள் வழங்கினர். இதற்கிடையே இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை மும்பை கிரிக்கெட் சங்க (எம்.சி.ஏ.) அதிகாரிகள் சிறப்பாக வரவேற்பளித்தனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டார். இதனையடுத்து டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசுத் தொகையை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. முன்னதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “நான் நேற்று இந்திய அணியை வரவேற்றேன். இன்று ரோஹித் சர்மா இங்கு வந்தார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் உலகக் கோப்பையை வென்ற வீரர் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும் அவர் மும்பையைச் சேர்ந்தவர். எங்கள் வீரர்கள் அனைவரும் நேற்று மும்பையில் இருந்த போது நான் வரவேற்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.