Skip to main content

காளையை சாய்த்த கரடி; பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பலத்த அடி!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

The bear leaning over the bull; Strike for stock market investors!

 

இந்திய பங்குச்சந்தையில் டிச. 13 - 17 வாரப்பகுதி, முதலீட்டாளர்களை தொடர்ந்து கொதி நிலையிலேயே வைத்துவிட்டு முடிந்திருக்கிறது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை (டிச. 17) சென்செக்ஸ் தடாலடியாக 889.40 (1.54%) புள்ளிகளும், நிப்டி 263.20 (1.53%) புள்ளிகளும் வீழ்ச்சியுடன் முடிவடைந்துள்ளன. பங்குச்சந்தை முதலீட்டாளர்களை பொருத்தவரை இது ஒரு கருப்பு வெள்ளியாகவே பார்க்கப்படுகிறது. 

 

ஒமிக்ரான் வைரஸ் பரவல் மீதான அச்சம், மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் அதிகரிப்பு, அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தது உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

 

குறிப்பாக, அமெரிக்காவின் பெடரல் வங்கியின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்கத் தொடங்கினர். அதன் தாக்கம், இந்திய பங்குச்சந்தையில் பெரிய அளவில் எதிரொலித்தது.

 

தேசிய பங்குச்சந்தையான நிப்டி வரலாற்றில் முதன்முறையாக கடந்த அக். 19ம் தேதி 18604 புள்ளிகள் வரை எகிறியது. அடுத்த ஒரே மாதத்தில் 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, தற்போது 16782 புள்ளிகள் ஆக சரிவடைந்துள்ளது. 

 

கடந்த வாரம் 17516 புள்ளிகளாக அதாவது 3.5 சதவீதம் வரை உயர்ந்த நிப்டி, நடப்பு வாரம் அதே வேகத்தில் 17000 புள்ளிகளாக (3 சதவீதம்) சரிந்தது. வாரத்தின் கடைசி வர்த்தக தினமான டிச. 17ம் தேதி, தேசிய பங்குச்சந்தை நிப்டி 263.20 புள்ளிகள் சரிந்து 16985.20 புள்ளிகளிலும், மும்பை பங்குச்சந்தை  சென்செக்ஸ் 889.40 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 57011.74 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 

 

''பெடரல் வங்கி நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு, பணப்புழக்கத்தை மேலும் இறுக்குவதும், வரும் ஆண்டில் வட்டி விகிதங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழலாம் என்ற தகவலும்தான் சந்தைகளில் ஏற்பட்ட சரிருக்கு முககிய காரணங்கள்,'' என்கிறார் ஜோசப் தாமஸ். இவர், எம்கே வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவன ஆராய்ச்சிப் பிரிரின் தலைவர். 

 

மேலும் அவர் கூறுகையில், ''ஒமிக்ரான் வைரஸ் தொற்று பிரச்னை உருவானதில் இருந்தே சந்தையில் சரிவும், அவ்வப்போது ஏற்ற இறக்கங்களும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கொரோனா முதல் அலையின்போதும் இதே போன்ற எதிர்மறை தாக்கம் இருந்தது. எனினும், மத்திய பட்ஜெட்டில் நல்ல அம்சங்கள் இடம்பெறக்கூடும் என்ற தகவல்கள் வரும் வரை சந்தையில் இப்போதுள்ள நிலையற்றத் தன்மை தொடரும்,'' என்றும் கூறுகிறார் ஜோசப் தாமஸ். 

 

டிச. 10ம் தேதி அன்று 267.68 லட்சம் கோடியாக இருந்த மும்பை பங்குச்சந்தை மூலதனம் டிசம்பர் 17ம் தேதியன்று, 259.4 லட்சம் கோடியாக சரிந்ததால், முதலீட்டாளர்கள் சொத்து டிச. 13 & 17 வாரத்தில் 8.30 லட்சம் கோடி சரிந்துள்ளது. நடப்பு வாரத்தில் ஐந்து வர்த்தக நாள்களிலுமே காளையை தொடர்ந்து கரடி பதம் பார்த்தது என்றே குறிப்பிடலாம்.

 

கடந்த இரண்டு மாதங்களில், இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு 15.30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பிஎஸ்இ சந்தை மூலதனம் அதிகபட்சமாக டிச. 18ம் தேதியன்று 274.69 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு காலாண்டு முடிவுகள் வரத்தொடங்கும் காலம் வரை, அதாவது டிசம்பர் இறுதி வரை சந்தைகளில் ஏற்ற, இறக்கம் இருக்கும் என்பதோடு, எதிர்மறையான சார்பு நிலைகள் தொடரும் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள். 

 

''உலகளவில் மத்திய வங்கிகள் தங்கள் பணக்கொள்கையை கடுமையாக்குவதால் சந்தைகள் சரிவைக் கண்டன. வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸின் தாக்கம் குறித்த நிச்சயமற்ற தன்மைகள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். 

 

மேலும், சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான புவிசார் அரசியல் பதற்றங்கள் மீண்டும் விரிவடையத் தொடங்கியிருப்பதும் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை விளைவிக்கும்,'' என்கிறார் மோதிலால் ஆஸ்வால் நிதிச்சேவை நிறுவன சில்லரை விற்பனை ஆராய்ச்சிப்பிரிவுத் தலைவர் சித்தார்த்தா கெம்கா. 

 

''கரோனா மூன்றாவது அலை, உள்நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள், எதிர்கால தேவை போக்கு, உள்ளீட்டு செலவு மற்றும் பணவீக்கத்தின் விகிதம் ஆகியவை பங்குச்சந்தைகளின் போக்கை தீர்மானிக்கலாம். மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை, வரும் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் ஆகியவற்றின் போக்குகளும் சந்தை நிலவரத்தை நகர்த்தும் முக்கிய காரணிகளாக இருக்கும்,'' என்கிறார் கோட்டக் மஹிந்திரா அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பங்கு ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் ஷிபானி குரியன். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதி எச்சரிக்கை.... சல்மான் கானுக்கு நிழல் உலக தாதா மிரட்டல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Dada threat to Salman Khan

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே அமைந்துள்ளது பாந்த்ரா. இப்பகுதியின் கேலக்சி என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். அவருடன் குடும்பத்தினர் ஒன்றாக குடியிருந்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கான் வீடு அருகே ஹெல்மட் அணிந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்டுள்ளனர். திடீரென அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சல்மான் கான் வீட்டை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிரல நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் குற்றாவாளிகளைத் தேடிவந்தனர். முதற்கட்டமாக போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய பைக்கை, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கண்டெடுத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விக்கி ப்தா மற்றும் சாகர் பால் என்ற இரண்டு பேரை மும்பை குற்றப்பிரிவு போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி சூடு நடைபெற்ற பிறகு தனது வீட்டில் இருந்து ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரை நடிகர் சல்மான் கான் எதுவும் வெளிப்படையாக பேசாத நிலையில், “எங்கள் குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தின் மூலம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்” என சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை நடிகர் சல்மான் கான், தனது தந்தை சலீம் கானுடன் சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் எதுகுறித்து பேசினார்கள் என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார். அவர் வெளிப்படையாக தனது முகநூல் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். அதில், இது டிரைலர்தான் என்றும், இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், குற்ற சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள அன்மோல் பிஷ்னோய் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு வரை சென்று இருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது அன்மோல் பிஷ்னோய் ஆக இருந்தாலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டது அவரது சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் என்கின்றது மும்பை போலீஸ் வட்டாரம். லாரன்ஸ் பிஷ்னோயிக்கும் சல்மான் கானுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த வித விரோதமும் கிடையாது. ஆனால், சல்மான் கான், மான் வேட்டையாடியதாக கூறும் விவகாரம்தான் இருவருக்கும் பகையை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் கான் வேட்டையாடிய மான்கள, பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இதனால் சல்மான் கான் மான் வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை வைத்தார். மன்னிப்பு கேட்கவில்லையெனில் சல்மான் கானை ஜெய்ப்பூரில் கொலை செய்வோம் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018 ஆம் ஆண்டு கோர்ட்டிற்கு வெளியில் மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு சிறைக்குச் சென்றாலும் தொடர்ந்து தனக்கு என்று ஒரு படையைக் கட்டமைத்துக் கொண்டு லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். பிரபல கேங்ஸ்டராக அறியப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. சிறையில் இருந்தாலும், அவர் கொடுத்த டாஸ்க்காகத்தான் இந்தழ் சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தேசிய புலனாய்வு முகமையின் தரவுப்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கொல்லத்துடிக்கும் 10 பேர் கொண்ட முக்கியஸ்தர்கள் பட்டியலில் சல்மான் கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சல்மான் கானுக்கு 11 பேர் அடங்கிய Y+ பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.