Skip to main content

பெற்றோரை கைவிடும் அரசு ஊழியர்களுக்கு தண்டனை... 

Published on 30/07/2018 | Edited on 30/07/2018

 

assam

 

 

 

 

அரசு ஊழியர்கள், தங்களின் பெற்றோர்களையும் அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் உரிய முறையில் பராமரிக்கவில்லை என்றால், அவர்களின் சம்பளத்திலிருந்து 25% வரை பிடித்தம் செய்யப்படும் சட்டத்தை அஸாம் மாநில பாஜக அரசு அமலுக்கு கொண்டுவர இருக்கிறது.  

 

பெற்றோரை பராமரிக்காமல் கைவிடும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பிடித்தம் செய்துகொண்டு, அந்த தொகையை பெற்றோர்களுக்கு வழங்க அச்சட்டத்தில் வழிவகுக்கப் பட்டுள்ளது. அதுபோலவே மாற்றுத்திறனாளி குழந்தைகளை பராமரிக்காமல் கைவிடும் பெற்றோர்களின் சம்பளத்தில் 15சதவீதம் பிடித்தம் செய்யப்பட சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

 

 

வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. நாட்டிலேயே முதன்முறையாக அசாம் மாநில அரசு இந்த சட்டத்தை கொண்டுவர உள்ளது குறிப்பிடத்க்கது.  

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மிதக்கும் வடகிழக்கு மாநிலங்கள்; மீட்புப்பணிகள் தீவிரம்!

Published on 30/05/2024 | Edited on 30/05/2024
Floating Northeast States; Intensive rescue work

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ரிமால் எனப் பெயரிடப்பட்டது. இது வங்காள தேசம் மற்றும் அதையொட்டிய மேற்குவங்க மாநில கடற்கரை இடையே கடந்த 26 ஆம் தேதி (26.05.2024) நள்ளிரவில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் மிசோரம் போன்ற மாநிலங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மேம்பாலங்கள் உடைந்தன. விளைநிலங்கள் வெள்ளத்தில் மிதந்தன.

இதனையடுத்து ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மழை வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களைப் பத்திரமாக வெளியேற்றுவதற்கும், உதவி பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் தற்காலிக சாலைகள், பாலங்கள் அமைத்து வருகின்றனர். அந்த வகையில் மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் ரிமால் புயலின் போது பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் போன்ற சூழ்நிலையில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் விரிவான நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

Floating Northeast States; Intensive rescue work

இந்த மழை வெள்ள பாதிப்பு குறித்து ராணுவ அதிகாரி அதிகாரிகள் கூறுகையில், ‘மணிப்பூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இன்று (30.05.2024) வரை 1500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 800 குழந்தைகள் உட்பட மொத்தம் 4000க்கும் மேற்பட்ட நபர்களை மீட்புப் படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். மீட்புப் பணிகளின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அவசர மற்றும் அத்தியாவசியத் தேவையை நிவர்த்தி செய்ய ஏராளமான வீடுகளுக்குச் சுத்தமான குடிநீரும் வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தனர். 

Next Story

ராகுல் கையில் இருப்பது எந்த நாட்டின் அரசியலமைப்பு புத்தகம்?; அசாம் முதல்வர் விமர்சனம்

Published on 18/05/2024 | Edited on 18/05/2024
Assam Chief Minister criticizes  Rahul holds Chinese Constitution book

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி பல்வேறு இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஐந்தாம் கட்டத் தேர்தல் மே 20ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று (18-05-24) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. இதனையடுத்து, அடுத்தக்கட்டத் தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சிவப்பு நிற அட்டை கொண்டு அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தை வைத்து பல்வேறு இடங்களுக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். மேலும் அவர், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என்றும், அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான இது தான் கடைசி தேர்தல் என்றும் பேசி வருகிறார். ராகுல் காந்தி வைத்திருக்கும் சிவப்பு நிற அட்டை கொண்டு அரசியலமைப்பு சட்டப் புத்தகம் குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தனது கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்களிடம் சிவப்பு சீன அரசியல் சாசனத்தை ராகுல் காட்டுகிறார். 

நமது அரசியலமைப்பு, நீல நிறத்தில், மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகள் என்று அழைக்கப்படும் ஒரு அத்தியாயத்தை உள்ளடக்கியது. நீல நிறம் கொண்ட நமது அரசியலமைப்பு புத்தக்கத்தில், பொது சிவில் சட்டத்தை இயற்றுவதை ஒரு புனிதமான கடமையாக ஆக்குகிறது. இதற்கு ராகுல் தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனால்தான் அவர் கையில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் சீனச் சட்டமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.