Skip to main content

திருச்சி கலெக்டர், எஸ்.பி பணியிடமாற்றம்! - தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

திருச்சி கலெக்டர், எஸ்.பி பணியிடமாற்றம்! - தேர்தல் ஆணையம் அதிரடி!

 

 

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் மற்றும் திருவரங்கம் சார் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

சமீபத்தில், திருச்சியில் ஒரு கோடி ரூபாய் பணம் பிடிபட்ட விவகாரத்தை அடுத்து, தற்போது திருச்சி ஆட்சியர், திருவரங்கம் சார் ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில், திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக திவ்யதர்ஷினி, திருவரங்கம் சார் ஆட்சியராக விசு மகாஜன் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளராக மயில்வாகனன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்