Published on 05/09/2020 | Edited on 05/09/2020

சென்னை தலைமைச் செயலகத்தில் செப்டம்பர் 8- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில், அதற்கேற்ப மருத்துவ வசதிகளை அதிகரிப்பது குறித்தும், தளர்வுகளால் கரோனா அதிகரித்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.