Skip to main content

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை பற்றி முன்கூட்டியே நீரவ் மோடிக்கு தெரியுமா?

Published on 26/02/2018 | Edited on 26/02/2018

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11ஆயிரம் கோடிக்கு மேல் பண மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டிற்கு தப்பியோடியவர் நீரவ் மோடி. இவர் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பை மோடி வெளியிடுவதற்கு முன்பாக ரூ.90 கோடியை வங்கியில் டெபாசிட் செய்ததாக தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஜீத் மேனன் தெரிவித்துள்ளார்.

 

Nirav

 

இதுகுறித்து விரிவாக பேசியுள்ள தேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மூத்த குற்றவியல் வழக்கறிஞருமான மஜீத் மேனன், ‘கடந்த நவம்பர் 8, 2016 அன்று பிரதமர் மோடி பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை அறிவித்தார். அதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு, பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஒரு கிளையில் நீரவ் மோடி ரூ.90 கோடியை டெபாசிட் செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தப் பணத்திற்குப் பதிலாக அவர் தங்கத்தை மாற்றியிருக்கலாம் என தெரிகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் உள்நோக்கம் இருப்பதாகவே நினைக்கிறேன். பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை என்ன நோக்கத்திற்காக மேற்கொண்டார்கள்? நம்மிடம் இருக்கும் தகவல்களின்படி, வங்கிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் இருந்துள்ளன. இதன்மூலம் தொடர்ந்து பெருநிறுவனங்களும், பெரும்பணக்காரர்களும் கடன் பெற்றுள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

 

Nirav

 

பிரதமர் மோடி பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை மேற்கொண்டபோது, ஏராளமான பொதுமக்கள் பாதிப்படைந்தனர். கிட்டத்தட்ட 200 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மூலம் பல பெருமுதலாளிகளின் வங்கிக்கடன்கள் ரைட் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக அப்போதே டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டினார். பல மாநில முதல்வர்களும் அந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தனர்.

 

சமீபத்தில் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பஞ்சாப் நேஷனல் வங்கி பண மோசடியைச் செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடினார் நீரவ் மோடி. அதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பொருளாதார விழாவில் பிரதமர் மோடியுடன் சந்தித்ததற்கான புகைப்படங்கள் வெளியாகின. எனவே, பணமதிப்பு இழப்பு நடவடிக்கை நீரவ் மோடிக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டதோ? என்ற கேள்வியை பலர் பொதுத்தளத்தில் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.