Published on 16/12/2018 | Edited on 16/12/2018

உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பிவி சிந்து, நொசோமி ஒகுஹாரா ஆகியோர் முன்னேறினார்கள். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிவி சிந்து 21-19, 21-17 என ஒகுஹாராவை வீழ்த்தி முதன்முறையாக உலக பேட்மிண்டன் பைனல்ஸ் கோப்பையை கைப்பற்றினார்.