Skip to main content

தொடரும் வருமான வரி சோதனை! - பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகான மிகப்பெரிய பண பறிமுதல்!

Published on 18/07/2018 | Edited on 18/07/2018

 


 

 

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்குச் சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் 174 கோடி ரூபாய் பணம் 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகான மிகப்பெரிய பண பறிமுதல் என கூறப்படுகிறது.

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். செய்யாத்துரையின் வீடு, அலுவலகம் மட்டுமின்றி அவரது துணை நிறுவனங்கள், ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள், உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் என 50 இடங்களில் சோதனை செய்யப்பட்டது.

2 நாட்களாக நடைபெற்று வந்த சோதனையில் 174 கோடி ரூபாய் பணம் மற்றும் 105 கிலோ தங்கம், ஆவணங்கள், முக்கிய தகவல்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்குகள் ஆகியவற்றை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத்தை எண்ணி சரிபார்த்து கட்டுகளாக கட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட காட்சி வெளியாகியுள்ளது. செய்யாத்துரையிடம் கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகள், ரூபாய் கட்டுகள் குறித்த படமும் வெளியாகியுள்ளது.
  Cash


இந்நிலையில் அருப்புக்கோட்டையில் வருமான வரித்துறையினரின் சோதனை இன்று 3-வது நாளாக நீடித்து வருகிறது. சென்னை, மதுரை ஆகிய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் செய்யாத்துரையிடம், வருமான வரித்துறையினர் விசாரித்து வருகிறார்கள். செய்யாத்துரை மற்றும் அவரது மகன்களின் 15-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

வங்கிகள் மூலம் நடைபெற்றுள்ள பண பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் இருந்து வருமான வரித்துறையினர் பெற்றுள்ளனர். இந்த விசாரணையின் அடிப்படையில் அரசியல் பிரமுகர்கள் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

என்.ஐ.ஏ. அதிரடி சோதனை; தஞ்சையில் இருவர் கைது!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
NIA Action Test Two arrested in Tanjore

தமிழகத்தில் சென்னை, கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ‘ஹிஸ்புத் உத் தஹீரிர்’ என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் வீடுகளில் சோதனை நடைபெற்றதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டையில் மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள்சேர்ப்பு மற்றும் உதவி புரிதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு வெளிவரும் எனத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதே போன்று சென்னையில் தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூர் பகுதியில் உள்ள ஹமீத் அக்பர் அகமது என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்றது. மேலும் ஈரோட்டில் நடைபெற்ற சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த நபரை ஒப்படைத்துவிட்டு கொளத்தூர் பகுதிக்கு விசாரணைக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த சோதனைகளில் பென்டிரைவ், செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் பலரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. 

NIA Action Test Two arrested in Tanjore

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் குழந்தை அம்மாள் நகரில் என்.ஐ.ஏ. அமைப்பின் டி.எஸ்.பி. ராஜன் தலைமையில் ஒரு குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். மானாந்துறையில் உள்ள ஷேக் அலாவுதீன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அமைப்பின் ஆய்வாளர் அருண் மகேஷ் தலைமையில் மற்றொரு குழுவினர் சோதனை நடத்தினர். அதே போன்று சாலியமங்கலத்தில் முஜிபூர் ரகுமான், அப்துல் காதர் இருவரின் வீட்டில் என்.ஐ.ஏ. அமைப்பின் ஏ.டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் மொத்தம் நான்கு குழுவினர் நான்கு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இன்று (30.06.2024) காலை 6:00 மணி முதல் 11 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் பென்டிரைவ், லேப்டாப், செல்போன், சிம்கார்டுகள் உட்பட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து முஜிபூர் ரகுமான் அப்துல் ரகுமான் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் உத் தஹீரிர் இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததாகக் கூறி 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

பிரபல தனியார் கல்விக் குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை!

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
Income tax officials raid the famous private women education group

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள எளையம்பாளையம் பகுதியில் பிரபல தனியார் மகளிர் கல்விக் குழுமம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி, செவிலியர் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்தக் கல்வி நிறுவனத்தில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் இந்த கல்வி நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இந்தக் கல்வி நிறுவனத்தில் நேற்று (16.05.2024) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கல்லூரியின் தாளாளர் கருணாநிதி இல்லத்திலும், அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், கல்வி நிறுவனத்தில் இரண்டாவது நாளாக இன்று (17.05.2024) 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் திருச்செங்கோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் நாடாளுமன்றம் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் இந்த கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளதும், கல்லூரி தாளாளர் கருணாநிதி, அதிமுக முன்னாள் எம்.பி. தம்பிதுரையின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே சமயம் நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியின் தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி என்பவர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.