Skip to main content

"என்னத்த ஜெயிச்சு, என்னத்த பண்ண" என புலம்பும் திமுக!விசாரிக்கும் ஸ்டாலின்!

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் என்றாலும், ஒரு இடைத் தேர்தலுக்குரிய அத்தனை வித்தை களுடனும் விறுவிறுப்புடனும் நடந்து முடிந்திருக்கிறது வேலூர் எம்.பி. தொகுதியின் தேர்தல். மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் எடப்பாடி ஆட்சி என இரண்டு ஆளும் கட்சிகளின் அதிகார பலத்தையும் மீறி, பெரும்பாடுபட்டு 8,146 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியிருக்கிறார் தி.மு.க. வேட்பாளரான கதிர் ஆனந்த்.

 

admk



மே மாதம் நடந்த எம்.பி. தேர்தலில் 22 தொகுதிகளில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றியை அறுவடை செய்திருந்தது தி.மு.க. அதே போல் இப்போது வேலூர் தொகுதியிலும் வெற்றி பெறலாம் என நினைத்திருந்தது. அது நடக் காததால், "என்னத்த ஜெயிச்சு, என்னத்த பண்ண' என கதிர் ஆனந்தின் அப்பாவும் தி.மு.க.வின் பொரு ளாளருமான துரைமுருகனை புலம்ப வைத்துவிட்டது. வேலூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பலரிட மும் இதுபற்றிக் கேட்டோம். தி.மு.க. ஆதரவு ஓட்டு கள்“முழுசா விழலைன்னுதான் சொல்லணும். அதுக்குக் காரணம் துரைருகன்தான். கலைஞர் இருந்த போதும் சரி, இப்போது தளபதி தலைவராக இருக் கும்போதும் சரி, நிர்வாகிகளும் தொண்டர்களும் தலைமைக்கு கொடுக்கும் மரியாதை மொத்தமும் தனக்குத் தான்னு நினைச்சு நிர்வாகிகளையும் தொண்டர்களையும் மதிக்கவே மாட்டாரு துரைமுருகன்.

 

acs



பாக்கெட்ல இருந்து பத்து பைசாவை எடுத்து கட்சிக்காரங்களுக்குச் செலவு பண்ண ணும்னா துரைமுருகனுக்கு வேப்பங்காயா கசக்கும். எல்லா மாவட்டத்திலிருந்தும் நிர்வாகிகள் வந்து வேலூரில் தங்கி, சொந்தக் காசை செலவழித்து வேலை பார்த்தார்கள். அவர்கள் எங்கே தங்கியிருக்காங்க, சாப்பாடு வசதியெல்லாம் எப்படின்னு என்னைக்காவது கேட்டிருப்பாரா? இந்த மாவட்ட நிர்வாகிகளின் நிலைமை அதைவிட மோசம். சீட்டு கேட்பவர்களிடம் அறிவாலயத்தில் நேர்காணல் நடக்கும் போது, "சீட்டு கேக்குறியே எவ்வளவு செலவு செய்வே'ன்னு இவர்தான் கேட்பார். பணம் இல்லைன்னு சொன்னா... "அப்புறம் எதுக்குய்யா சீட்டு கேட்குறே'ன்னு நக்கலடிப்பார். இப்ப அவரு மகனை நிப்பாட்டிட்டு காசு கொடுக்கமாட்டேன்னா என்ன அர்த்தம்'' என ரொம்பவே கொந்தளித்தார்கள்.

 

dmk



இன்னும் சில நிர்வாகிகளோ வேறொரு கோணத்தில் பேசினார்கள்.  சென்னை இராயப் பேட்டையில் நடந்த தலைவர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது "மன்னன் ராஜராஜ சோழன் அரண்மனையையும் கட்டினான், பெருவுடையார் கோவி லையும் கட்டினான். காலப்போக்கில் அரண்மனை அழிந்துவிட்டது, பெருவுடையார் கோவில் இன்றும் நிலைத்திருக்கிறது. காரணம் அரண்மனை என்பது தனிச் சொத்து, கோவில் என்பது மக்கள் சொத்து. எனவே தளபதி அவர்களே தி.மு.க. என்பது மக்கள் இயக்கம், இதை தொண்டர்கள் கட்டிக் காப்பாற்றுவார்கள்' என்றார். அதைப்போல்தான் தொண்டர்கள் எப் போதும் கட்சியின் மீது மாறாத பற்றும் பாசமும் வைத்திருக்கிறார்கள். ஆனால் துரைமுருகன் போன்ற ராஜ நினைப்புக்காரர்களுக்கு இப்படித் தான் பதில் சொல்வார்கள். பொன்முடியும் இதே நினைப்பில்தான் இருப்பார். ஆனால் மகனுக்கு எம்.பி.சீட் கிடைத்ததும் நிர்வாகிகளின் தோளில் கைபோட்டார், கைக்காசை தாராளமாக வாரி இறைத்தார்'' என்கிறார்கள்.


துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் தரப்பில் நாம் விசாரித்த போது, ""சொந்த மாவட்ட நிர்வாகிகளே சாதிப் பாசத்தில் ஏ.சி.எஸ்.சுக்கு வேலை பார்த்தார்கள். "இஸ்லாமிய வாக்குகளும் தலித் வாக்குகளும் கை கொடுக்கலேன்னா நிலைமை மோசமாகியிருக்கும்' என புலம்பிக் கொண்டிருக்கிறார் துரைமுருகன்'' என்கிறார்கள். அதே நேரத்தில் ஏ.சி. எஸ். தரப்பிலோ விரக்தி அதிகமாகவே தெரிகிறது. மே மாதம் தேர்தல் ரத்தான போது 130, இப்போது சுமார் 70 என "சி'க்களில் செலவழித்தும் அ.தி.மு.க.வின் ஒரு தரப்பு துரோகத்தால் குறைந்த ஓட்டில் தோற்றுவிட்டோமே என ரொம்பவே வேதனைப்படுகிறாராம் ஏ.சி.எஸ். ஓட்டு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் லீடிங் என்றதும் உற்சாகமானார் ஏ.சி.எஸ். ஆனால் நிலைமை மாறியதும் ராணிப்பேட்டையில், தான் தங்கியிருந்த ஓட்டலிலிருந்து கிளம்பி சென்னைக்குப் போய்விட்டாராம்.

அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரோ, ஏ.சி.எஸ். தாராளமா செலவு பண்ணத்தான் செஞ்சாரு. ஆனால் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்துக் கிட்டு, மற்றவர்களை நெருங்கவிடல'' என்கிறார்கள். ஏ.சி.எஸ்.சுக்கு தேர்தல் பணியாற்றிய ரஜினி மக்கள் மன்றத்தினரும் அப்செட்டில் உள்ளனர். 18-ஆம் தேதி வாணியம்பாடியில் நடக்கவுள்ள நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசுகிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். அந்தக் கூட்டத்திற்கு முன்பாக வேலூர் தி.மு.க. நிர்வாகிகளிடம் விசாரணை இருக்கும் என்கிறார்கள். 

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.