Skip to main content

சின்னம்மா வரட்டும்... பல்லு பிடுங்கின பாம்பாயிருவாங்க... -கட்டம் கட்டவைத்த லூஸ்-டாக்!

Published on 25/07/2020 | Edited on 25/07/2020

 

sasikala admk

 

விருதுநகர் மாவட்டம்- சாத்தூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., எஸ்.ஜி.சுப்பிரமணியம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக, அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. தற்போது, கட்சியில் எந்தப் பொறுப்பும் வகிக்காத சுப்பிரமணியத்தை நீக்கும் அறிவிப்பில், ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வமும், எடப் பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டுள்ளனர்.

 

rajendra balaji -  rajavarman issue

 


ஏன் இந்த நடவடிக்கை?

 

சாத்தூர் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், தனது தீவிர ஆதரவாளராக இருந்ததால், 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சிபாரிசு செய்து, அவர் எம்.எல்.ஏ. ஆவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார், மா.செ.வாக இருந்த கே.டி. ராஜேந்திரபாலாஜி. அதன் பிறகு, இருவருக்குமிடையே ’உரசல்’ ஏற்பட்டு, டிடிவி தினகரனின் அமமுக-வுக்கு தாவி, தகுதியிழப்பு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரானார், சுப்பிரமணியம். ஆனாலும், விருதுநகர் அமமுக மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைத்தது. பிறகு, அமமுக கசந்துபோய், மீண்டும் கே.டி. ராஜேந்திரபாலாஜி மூலம், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

 

sasikala admk rajendra balaji

 

சுப்பிரமணியத்தை, ராஜேந்திரபாலாஜி மீண்டும் அதிமுகவுக்கு கொண்டுவந்ததே, தனக்கு வேண்டாதவர் ஆகிவிட்ட சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கு ‘டஃப்’ கொடுப்பதற்காகத்தான் என்று அப்போது பேச்சு எழுந்தது. ஆனால், சாதிப்பாசம் இழுக்க... எதிர்பாராத "ட்விஸ்ட்' ஆக, அமைச்சரை கை கழுவிவிட்டு, ராஜவர்மன் எம். எல்.ஏ.-வுக்கு நெருக்கமானார் சுப்பிரமணியம். "நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்றாகி விட்டதே' என ராஜேந்திரபாலாஜிக்கு கோபமோ, கோபம். இந்த நிலையில்தான், வெறும் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்த சுப்பிரமணியம், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பிர மணியத்தை தொடர்பு கொண்டோம். ""என்ன தவறு செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. அமைச்சருக்கும், எம்.எல். ஏ.வுக்குமான உரசலில், நான் பலிகடா ஆக்கப் பட்டுவிட்டேன். ஒரு சாதாரண தொண்டனாக, நான் அதிமுகவில் தொடர்வதை யாராலும் தடுக்க முடியாது'' என்றார் குமுறலோடு.

 

சுப்பிரமணியம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தற்கு என்னதான் காரண மாம்?’ அதிமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். ""நானும் டிரவுசர் போட்ட காலத்துல இருந்து கட்சியில இருக்கேன். சொல்லப் போனா... இப்ப பெரிய பெரிய பொறுப்புல இருக் கிறவங்கள காட்டிலும் நான் சீனியராக்கும். சின்னம்மா வெளில வரட்டும். ஆட்சியில இப்ப டாப்ல இருக்கிறவங்கள்லாம் பல்லு பிடுங்கின பாம்பாயிருவாங்கன்னு, பப்ளிக்கா லூஸ்-டாக் விட்டு கட்சிக் காரங்களுக்குள்ள பிரச் சனை ஆயிருச்சாம். அப்புறம்... அமைச்சர் ராஜேந் திரபாலாஜிக்கு எதிரா இருக்கிறவங்கள ஒருங் கிணைச்சு மேல வரைக்கும் புகார் வேற அனுப்பினாராம். இது போதாதா? ராஜேந்திரபாலாஜி கிட்ட ஒபீனியன் கேட்டு எடப்பாடியும், ஓ.பி. எஸ்.ஸூம் கட்சியில இருந்தே சுப்பிரமணியத்த தூக்கிட்டாங்க''’என்றார் சிரித்தபடி.

 

""வெள்ளந்தியான சுப்பிரமணியத்துக்கு இது போதாத காலம்...''’என்று "உச்' கொட்டுகிறார்கள், சாத்தூர் தொகுதியில்!


 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.