Skip to main content

“பிரபாகரனை விட ஆபத்தானவன் நான் என்று சிங்களவன் நினைக்கிறான்” -சீமான் பேச்சு

Published on 28/11/2020 | Edited on 28/11/2020
hjk

 

 

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த தின பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பிரபாகரன் குறித்து பேசினார். அவரின் பேச்சு வருமாறு,  

 

"குறிஞ்சி நிலத் தலைவன், தமிழின இறைவன் என்று முருகன் பெருமான் படத்தை மக்கள் மனதில் நான் நிருவி விட்டேன். எனவே நீங்கள் என்ன வேல் எடுத்துக்கொண்டு சுத்தினாலும் நாங்கள் கொண்டுவந்த படம்தான் ஓடும். எங்கள் ஞாபகம்தான் அவர்களுக்கு இருக்கும். அதுபோல தமிழ் பேரினத்தின் தலைவன் பிரபாகரன் என்று இந்த சீமான் ஏற்றுக்கொள்ள வைப்பேன். அது நடக்காமல் இருக்காது. இப்போது யாரும் தமிழினத்தின் தலைவர் கருணாநிதி என்று யாரும் சொல்வதில்லையே? யாரையாவது சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். கட்சிக்கு வேண்டுமானால் தலைவன் என்று சொல்லிக்கொண்டு சுத்துங்கள். ஆனால் இனத்தின் தலைவன் என்று யாரும் சொல்லிக்கொண்டு சுத்தக்கூடாது. 

 

தலைவன் என்றால் பெத்த பிள்ளைகளுக்கு பதவி கேட்டு அலையக்கூடாது, பிள்ளைகளையும் போர்களத்தில் பலியிட்ட தலைவனாக இருக்க வேண்டும். அவ்வாறு என் தலைவன் பிரபாகரன் இருக்கிறார். எனவே அவர் ஒருவரே தலைவன் என்ற சொல்லுக்கு தகுதியான நபராக இருக்க முடியும். என்னயே சிலர் கேட்கிறார்கள், சீமானிசம் என்று கூறுகிறீர்கள், ஆனால் பிரபாகரனிசம் என்று ஏன் வரவில்லை என்று கேட்கிறார்கள். பிரபாகரனிசம் ஏன் வரவில்லை என்று கேட்க வைத்ததே இந்த சீமானிசத்தின் வெற்றிதான். அதனால்தான் நாங்கள் பிரபாகரனின் பிள்ளை. நாங்கள் வைக்கிற புகைப்படத்தை எல்லாம் கிழிக்கிறார்கள். எங்கள் தம்பிகள் எங்களிடம் வந்து அண்ணன் புகைப்படத்தை முடக்குகிறார்கள் என்று புலம்புகிறார்கள்.

 

கொஞ்ச நாள்தான் தானே முடிக்குவார்கள், முடக்கட்டும். நீங்கள் மடக்கியும், ஒடுக்கியும் வைக்க நாங்கள் குடை இல்லை. மானத்தமிழர் படை என்பதை அவர்கள் விரைவில் உணர்வார்கள். என்னை நீ தடுக்கலாம், என்னை நீ முடக்கலாம், ஆனால் இந்த மண்ணில் நான் முன்வைத்த அரசியலை யாராலும் மறுக்க முடியாது. யாராலும் நினைக்க முடியாத மாற்று அரசியலை நாங்கள் முன்வைத்துள்ளோம். துணிவோடு இருங்கள், நம்பிக்கையை இழக்க தேவையில்லை. காலத்தை உருவாக்கிய தலைவனின் பிள்ளைகள் நாம். எனவே அச்சம் தேவையில்லாத ஒன்று. விரைவில் நமக்கான காலம் வரும். கையறு நிலையில் நம்மை விட்டுவிட்டு நம் தலைவன் செல்லவில்லை. நமக்கு தேவையானதை கற்பித்துவிட்டுத்தான் சென்றுள்ளார். 

 

அவர் விரல் நீட்டிய திசையில் நாம் பாய்வோம். நமக்கான விடுதலை நிச்சயம் இருக்கிறது. அதில் எள் முனையளவு கூட சந்தேகம் வேண்டாம். தமிழ்நாட்டின் முதல்வர் நாற்காலியில் நாம் அமர்ந்திடுவோம், அதன் பிறகு சிங்களவன் நிம்மதியாக தூங்கிடுவானா? அவனே சொல்கிறான். பிரபாகரனை விட ஆபத்தானவன் ஒருவன் வளர்ந்து வருகிறான் என்று. அனைத்தையும் விட்டுவிடுவோம். வருகிற தேர்தல் நமக்கு போர்க்களம், இறங்கி அடிப்போம். பயமா இருக்கா, முருகா, முருகா என்று சொல்லுங்கள். அதை பாஜக நபர்களும் சொல்கிறார்களா? சரி விடு, தனியாக அமர்ந்துகொள், பிரபாகரன், பிரபாகரன் என்று தனியாக அமர்ந்து சொல்லுங்கள், முருகனும், பிரபாகரனும் ஒன்றுதான். அதை கூறினால் நாடி நரம்பெல்லாம் முறுக்கேறிவிடும். எதையும் சாதிக்க வேண்டும் என்ற வெறி பிறக்கும். எனவே வரும் தேர்தல் நமக்கானது" என்றார்.

 

 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்