Skip to main content

"மனித உரிமைகள் சரிசமமானதாக இருக்க வேண்டும்" ஃபிஃபா பொதுச்செயலாளருக்கு மேத்யூ சாமுவேல் கடிதம்...

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பால் முடங்கியுள்ள சூழலில், கத்தாரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வைத்து 2022 ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக்கோப்பை நடைபெற உள்ள மைதான கட்டுமான பணிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த சூழலில், கட்டுமான தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி ஃபிஃபா பொதுச்செயலாளர் ஃபத்மா சமவ்ராவுக்கு பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

 

mathew samuel letter to fifa gs

 

 

அவரது அந்த கடிதத்தில், 

"முதலில் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன். நான் மேத்யூ சாமுவேல், புதுதில்லியில் வசிக்கும் இந்தியப் பத்திரிகையாளர். எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கு நாடுகளுள் ஒன்றான கத்தாரில் 2022ம் ஆண்டு நடைபெற உள்ள ஃபிஃபா உலகக்கோப்பையுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட சில விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டுகிறேன். கோவிட் -19 ஐ தொற்றுநோயாக WHO அறிவித்த பிறகும், இந்த வைரஸ் பரவும் வேகம், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றி அறிந்தும், அந்நாட்டு ஆட்சியாளர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து தோஹாவில் உலகக் கோப்பை மைதான கட்டுமானத்தை முடிக்க வலியுறுத்துகின்றனர் என்று எனக்கு சில நம்பகமான தகவல்கள் கிடைத்தன.

கரோனா வைரசால் அச்சத்தில் உள்ள அந்த தொழிலாளர்கள் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உலகளாவிய இந்த தொற்றுநோயால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கூட்ட நெரிசலான முகாம்களில் மக்களை ஒன்றாகக் குவிக்கும் கத்தார் அரசின் இந்த செயல்பாடு, வைரஸ் பரவுவதை வேகப்படுத்தும். தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து, அதுவும் குறிப்பாக இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தானிலிருந்து வந்த தொழிலாளர்கள் தான் அங்கு அதிகம்.

தொழிலாளர் முகாம்களுக்குள், தொழிலாளர்கள் பயம் மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலையுடன் வசித்து வருகின்றனர். கத்தார் ஒரு பிரபலமான இடமாகவும், முக்கிய போக்குவரத்து பகுதியாகவும் இருக்கிறது. "கத்தார் ஏர்வேஸ்" என்ற தேசிய வான்வழி போக்குவரத்துக்கு நிறுவனம் மூலம், உலகம் முழுவதையும் இணைக்கும் ஒரு நுழைவாயிலாக கத்தார் உள்ளது. எனவே, இந்த நாடு நிச்சயமாக கோவிட் 19 அச்சுறுத்தலில்தான் இருக்கிறது. இருப்பினும் அதிகாரிகள் இதனை ஏற்க மறுப்பதோடு, கத்தாரில் தொற்றுநோய்க்கான ஆபத்து மிகக் குறைவாகவே உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனக்குறைவால் கண்டும் காணாமல் உள்ளனர் என்பதே இதில் மிகவும் முரணான விஷயமாக உள்ளது. சரியான தரவுகளை வெளியே கூறுவதில் அவர்களுக்கு ஆர்வமில்லை என்பதை இதுவே தெளிவாகக் காட்டுகிறது. இந்த சூழலில், தயவுசெய்து இந்த விஷயத்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி நடவடிக்கை எடுக்க நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும் கத்தாரில் கரோனா பரவலின் தற்போதைய நிலை குறித்து அறிய, அதுவும் குறிப்பாகக் கால்பந்து மைதானத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் நிலை குறித்து அறிய மருத்துவ நிபுணர்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், தற்போதைய சூழ்நிலையின் தீவிரம் குறித்து அங்குள்ள அதிகாரிகளுக்கு எச்சரிக்க வேண்டும்.  

கோவிட் -19 வைரசைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் மனித உரிமைகள் சரிசமமானதாக இருப்பதை கத்தார் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாகுபாடு இன்றி நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். மைக்கேல் பிளாட்டினி அத்தியாயத்தை மறந்துவிடக் கூடாது என்பதை நான் தாழ்மையுடன் நினைவுபடுத்துகிறேன். பெரும் செல்வம் மற்றும் அதிகாரத்தின் உதவியோடு நிலைமையை அவர்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.