Skip to main content

உலகநாயகனின் அடங்காப்பசி; கமல்ஹாசனால் தமிழ் சினிமா கண்ட தொழில்நுட்ப புதுமைகள்

Published on 23/05/2022 | Edited on 07/11/2022

 

kamalhaasan introduced new technology tamil cinema

 

கமல்ஹாசன். அது வெறும் பெயர் அல்ல, சினிமா துறையில் சாதிக்க துடிக்கும் எண்ணிலடங்கா இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன். திரைத்துறையில் 4 அல்லது 5 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக நிலைத்து நிற்பதே கடினம். அப்படி இருக்கையில் 60 ஆண்டிற்கு மேல் தனது அசாத்திய திறமையால் திரையுலகை கட்டி ஆளும் கலையுலக நாயகன் கமல்ஹாசன். 6 வயதில் அரை கால்சட்டையுடன் தொடங்கிய இந்த அசாத்திய பயணம் 67 வயதை தாண்டியும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கமல்ஹாசன் எனும் மகா கலைஞனை  நடிப்பு எனும் சிறு வட்டத்திற்குள் மட்டும் சுருக்க முடியாது. நடிப்பை தாண்டி, இயக்கம், எழுத்து, தயாரிப்பு, பாடகர் என ஒவ்வொரு துறையிலும் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார். கலைப்பசியை போலவே கமல்ஹாசன் கொண்டிருந்த இன்னொரு அடங்காப்பசி தொழில்நுட்பம் மீதானது. நாம் சமகாலத்தில்  கொண்டாடும், பயன்படுத்தும், புரிந்துகொள்ள திணறும் பல தொழில்நுட்பங்களை பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் சினிமாவிற்கு அறிமுகபடுத்திய தீர்க்கதரிசி. அப்படிப்பட்ட இந்த ஆகச்சிறந்த கலைஞன் கமல்ஹாசன் சினிமா துறைக்கு அறிமுகப்படுத்திய சில தொழில்நுட்பங்களை பற்றி பார்ப்போம்...

 

விக்ரம் -  கம்பியூட்டரில் பாடல் பதிவு (computer song recording)

கடந்த 1986 ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் இந்திய சினிமாவில் முதல் முறையாக கம்யூட்டரில் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

 

குணா - ஸ்டெடி கேமரா (steady camera)

கடந்த 1990 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் குணா. இந்த படத்தில் வரும் காட்சிகள் பெரும்பாலும் காடுகள், மலைகளில் தான் படமாக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட காட்சிகளை எடுக்கும்போது, எல்லா இடத்திலும் கேமரா யூனிட்களை பயன்படுத்த முடியாது. இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், வேறு எவரின்  உதவியும் இல்லாமல் ஒளிப்பதிவாளர் மட்டுமே பயன்படுத்தும் ஸ்டெடி கேம் தமிழ் திரையுலகிற்கு இந்த படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது.

 

தேவர் மகன் - மேஜிக் சாப்ட்வேர் (movie magic software)

கடந்த 1992 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் - கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் மூவி மேஜிக் என்ற புதிய  சாப்ட்வேரை அறிமுகப்படுத்தினார் கமல். இந்த சாப்ட்வேரை பயன்படுத்திதான் தேவர் மகன் படத்திற்கு முழு திரைக்கதையும் எழுதப்பட்டது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக சாஃப்ட்வேரை பயன்படுத்தி திரைக்கதை எழுதப்பட்ட முதல் படம் தேவர் மகன்.

 

குருதிப்புனல் - டால்பி அட்மோஸ் Dolby atmos (sound system audio)

கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான குருதிப்புனல் படத்தில் நடிகர் கமல்ஹாசன் டால்பி அட்மோஸ் (Dolby atmos) என்ற சவுண்ட் டெக்னாலஜியை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் திரைப்படத்தின் ஆடியோவை தெளிவாக கேட்க முடியும். தமிழ் சினிமாவில் டால்பி அட்மோஸ் ஆடியோ சிஸ்டத்தை அறிமுகபடுத்தியதும் கமலே.

 

மகாநதி- ஆவிட் எடிட்டிங் சாப்ட்வேர் (avid editing software)

இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஆவிட் என்ற எடிட்டிங் சாஃப்ட்வேரை அறிமுகப்படுத்தியிருப்பார். இதற்கு முன்பு பிலிம் ரோலில் எடுக்கப்பட்ட காட்சிகளை வெட்டி ஒட்டி தான் படத்தை எடிட் செய்து வந்தனர். ஆனால் 'மகாநதி' படம் ஆவிட் என்ற சாஃப்ட்வேரை பயன்படுத்தி கம்ப்யூட்டரில் எடிட் செய்யப்பட்டது . அதன் பிறகு வந்த படங்கள் தொடங்கி தற்போது வரை இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி படம் அல்லது வீடியோக்களை எடிட் செய்து வருகின்றனர் நம்மவர்கள்.

 

மும்பை எக்ஸ்பிரஸ் - டிஜிட்டல்  கேமரா (digital camera )

2005 ஆம் ஆண்டு வெளியான 'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்தில் முதல் முறையாக டிஜிட்டல் கேமரா (Red camera) பயன்படுத்தப்பட்டது. முழுக்க முழுக்க இந்த புதிய ரக கேமராவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இந்திய  சினிமாவிலேயே முதல் டிஜிட்டல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.

 

விஸ்வரூபம் - ஆரோ 3டி (auro 3d)

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தில் ஆரோ 3டி (auro 3d) சவுண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தினார். உலகிலேயே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியான இரண்டாவது திரைப்படம் விஸ்வரூபம். இந்த சவுண்ட் சிஸ்டத்தின் மூலம் தெளிவான மற்றும் திரையரங்குகளில் படத்தை பார்க்கும் பொழுது ஒரு புதிய கேட்டல் அனுபவத்தை கொடுக்க முடியும். இந்த சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்ட முதல் திரைப்படம் ரெட் டைல்ஸ் (Red tails)  என்ற ஹாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.