டாக்டர்கோபுராஜ்ஒருநாள்என்னிடம்,ஒருகட்டுரைஎழுதச்சொன்னபோது,எதைப்பற்றிஎழுதுவது என்றசிந்தனைகூடஇல்லை. ஆனால்,தீடீரென்றுஎனக்குள்ஒருஉந்துதல்ஏற்பட்டது. “நாம்ஏன்ஸ்டான்லிமருத்துவமனையில்இருக்கும்இரைப்பை குடல் அறுவைச்சிகிச்சை டிபார்ட்மெண்ட்டைபற்றிஎழுதக்கூடாது”என்றுநினைத்தேன்.அப்படிஎழுதினால்காற்றில்உலவும் பல கட்டுக்கதைகளையும், தவறானகருத்துகளையும் போக்குவதற்குஉதவும் என்று நினைத்தேன். எனவே,சென்னைஸ்டான்லிமருத்துவமனையில்அந்தடிபார்ட்மெண்ட்எப்படிபிறந்ததுஎன்ற வியப்பூட்டும்நிகழ்வுகளைஎனதுஇதயத்தின்ஆழத்திலிருந்துஎழுதத்தயாரானேன்.இந்த உண்மைகளில்சிலவற்றைஸ்டான்லிமருத்துவமனையில் பணிபுரியும்என்நண்பர்களும்,மதுரைமருத்துவமனையில் பணிபுரியும்எனது நண்பர்கள்சிலரும்நேரில்அறிந்திருக்கிறார்கள்.

dr.surendhiran

டாக்டர் ஆர்.சுரேந்திரன்

1994ஆம்ஆண்டுஅக்டோபர்மாதம்எனக்குபுரமோஷன்கொடுத்துமதுரைமருத்துவகல்லூரியில் பணிநியமனம்கொடுத்தார்கள்.எனதுசீனியாரிட்டிக்குஅண்ணாநகரில்உள்ளபுறநோயாளிகள் மருத்துவப்பிரிவில்பணியமர்த்தப்பட்டிருக்கவேண்டும்.ஆனால்,சிறப்புமருத்துவப்பிரிவில் துறைத்தலைவராகநியமிக்கப்பட்டேன்.வயதில்இளையவனானஎன்னைசீனியர்பேராசிரியர்கள் பலர்விரும்பவில்லை.அன்றையடிஎம்இடாக்டர்செம்பொன்டேவிட்,டீன்டாக்டர்ராஜப்பா,சர்ஜரி டிபார்ட்மெண்ட்தலைவர்டாக்டர்சத்தியவான்,பெருங்குடல்அறுவைச்சிகிச்சைநிபுணர்டாக்டர் சிவலிங்கம்ஆகியோர்ஒரேவகுப்புமாணவர்கள்என்பதால்,புதியடிபார்ட்மெண்ட் உருவாக்கப்படுவதைஅனுமதிக்கக்கூடாதுஎன்பதில்உறுதியாகஇருந்தார்கள்.ஆனால், பேராசிரியர் வேங்கடசாமி,சங்கரநேத்ராலயாவின்டாக்டர்பத்ரிநாத் ஆகியோர்இந்தமுயற்சியை வரவேற்றார்கள்.நானும்என்னால்இயன்றபங்களிப்பை வழங்கதயாரானேன்.

Advertisment

நான்மதுரையில்இருந்த6மாதங்களில்ஒருநோயாளியைக்கூடபார்க்கவோ,அறுவைச்சிகிச்சை செய்யவோஅனுமதிக்கவில்லை.நான்சோர்வடைந்தேன்.ஒவ்வொருவாரமும்சென்னைக்குவந்து சுகாதாரத்துறைசெயலாளரைசந்திப்பதைவழக்கமாககொண்டிருந்தேன்.அவரும்இந்த பிரச்சனைக்குதீர்வுகாண்பதில்அக்கறைசெலுத்தவேஇல்லை.

மதுரைடிஆர்ஓஎன்னைமதுரைஅருகேஉள்ளதிருமோகூர்கோவிலுக்குசெல்லும்படி கூறினார்.நான்எனதுநண்பரும்இதயஅறுவைச்சிகிச்சைநிபுணருமானடாக்டர் சிவக்குமாருடன் சென்றேன்.அதன்பிறகுநான்சுகாதாரத்துறைசெயலாளரை சந்தித்தபோதுதிருநெல்வேலிக்கு மாற்றினால் போகிறீர்களா? என்றுகேட்டார். நான் சரி என்றேன். உடனேஅவர்,எதுஉங்கள் சொந்தஊருக்கு அருகில்இருக்கிற மருத்துவக்கல்லூரிஎன்று கேட்டார். சேலம் என்றேன். எந்தயோசனையும் செய்யாமல் எஸ்ஜிஇ டிபார்ட்மெண்ட்டையும், என்னையும் சேலத்துக்கு மாற்றினார்.

இந்தச்சமயத்தில்அண்ணாநகரில்உள்ளபுறநோயாளிகள்மருத்துவமனையில்இருந்த எனதுநண்பர் சேலம் செல்ல விரும்பினார். இதையடுத்து நான்மதுரை மருத்துவமனைக்கு சென்றேன்.அங்கு ரத்தவாந்தி எடுத்துசாகிறவர்களை பார்த்தேன்.முடிந்தால் அந்த சிக்கல்களுக்குதீர்வுகாண உறுதியேற்றேன். அண்ணாநகர் மருத்துவமனையில் நான்இருந்தது சிலகாலம்தான்.பிறகு1995ல் நான்ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன்.அங்கு, ஈரல் மாற்றுபிரிவைதொடங்க விரும்புவதை சொன்னபோது எனதுசகாக்கள் ஜோக்என்றே நினைத்தார்கள்.

Advertisment

இதற்குநிறையசெலவாகும்என்றார்கள்.அப்போதுவடசென்னைஎம்.பி.குப்புசாமியின் மனைவிக்குஉணவுக்குழாயில்ஏற்பட்டபுற்றுநோய்க்குஅறுவைச்சிகிச்சைசெய்தேன்.அவர், தனதுதொகுதிவளர்ச்சிநிதியைஈரல்மாற்றுதுறைக்குகொடுத்தார்.ஆனால்,அந்தநிதியும் எங்களிடமிருந்துபறிக்கப்பட்டது.நானும்எனது நண்பர்களும்ஒவ்வொருஇடமாகஓடியும் பலனில்லை.

stanley hospital

இதையடுத்துஅதிகமாகஉயிரிழப்புஏற்படும்இரைப்பைகுடல்இயல்பிரிவைதொடங்கி,அதில் ஈரல்மற்றும்கணையம்அறுவைச்சிகிச்சைகளைமேற்கொள்வதுஎன்றுமுடிவெடுத்தோம். அதிகமாக உபயோகப்படுத்தப்படாமல்இருக்கும்ஒருவார்டை சிரமப்பட்டுபெற்றோம். அந்தத்துறைக்கென்று நர்சுகள்இல்லை.அதற்குப்பதிலாகஒப்பந்தஅடிப்படையில் நர்சுகளைஎடுக்கும்படிகூறினார்.உடனே,நர்சுகள்சங்கம்எதிர்ப்புத்தெரிவித்து போராட்டத்தைதொடங்கியது.இதில்தனியார் மருத்துவமனைஆதரவாளர்களும் இருந்தார்கள்.

தமிழகம்முழுவதும்பரவியஇந்தஸ்டிரைக்ஒருவாரம்நீடித்தது.இந்தநிலையில் நர்சுகள்சங்கத்தின்தலைவருடையமருமகன்விமான நிலையத்தில்ரத்தவாந்தி எடுத்து,அபாயகட்டத்தில்மருத்துவமனைக்குகொண்டுவரப்பட்டார்.பழையசிகிச்சை முறைகள் அனைத்தும் முயற்சிக்கப்பட்டு தோற்றவுடன், நான் மதியம்2மணிக்கு வந்தேன்.அறுவைச் சிகிச்சை செய்தேன்.அவர்குணமடைந்தார்.நர்சுகள்சங்கத் தலைவர்என்னிடம்வந்தார். நன்றிசொல்லி அழுதார்.நான்,அவரிடம்சொன்னேன்… “சிஸ்டர், நீங்கள் உங்கள் மருமகனை பற்றி சிந்திக்கிறீர்கள்.நான்தமிழகத்தில்உள்ள ஆயிரக்கணக்கானமருமகன்களை பற்றிநினைக்கிறேன்.”

நர்சுகள்போராட்டம்முடிவுக்குவந்தது.அரசுவிருப்பப்படிஒப்பந்தநர்சுகளைவைத்து இரைப்பைகுடல்அறுவைச்சிகிச்சைபிரிவைதொடங்கினோம்.அறுவைச்சிகிச்சை செய்யும் நபர்களிடம்குறைந்தபட்சபராமரிப்புசெலவுக்குபணம் பெற்றுஅவர்களுக்கு சம்பளமாக கொடுத்தோம்.அதுநல்லபடியாகசெயல்பட்டது.பின்னர்சில ஆண்டுகளில்தமிழகத்தின்பிற மருத்துவமனைகளிலும்சிலமாறுதல்களுடன்இந்தப் பிரிவுதொடங்கப்பட்டது.

2000மாவதுஆண்டுஇந்தப் பிரிவுக்குஐஎஸ்ஓசான்றிதழ்கிடைத்தது.இந்தியாவிலேயே முதலாவதுஇது.அதன்பிறகுஇந்தகுறைபாடுகளால்இறப்பவர்கள்எண்ணிக்கை குறைந்தது. பலர் நன்றிசொன்னார்கள்.வருமானமும்உபரியாகியது. 80லட்சம் ரூபாய் கிடைத்தது. அதைக்கொண்டுநவீனஉபகரணங்களைவாங்கினோம். இந்தத் துறையில் பயிற்சிபெற மருத்துவர்கள்விரும்பினார்கள்.கூடுதல்நேரம்தங்கிகூடுதல்பங்களிப்புசெய்யத் தயாரானவர்கள்மட்டுமேசேர்க்கப்படுவார்கள்என்றுநிபந்தனைவிதித்தேன்.இதையடுத்து பலதிறமையானஇளம்டாக்டர்கள் கிடைத்தார்கள்.

ஒரு நாள் அப்போலோவுக்கு வரும்படிநிதித்துறைசெயலாளர் என்னிடம்கூறினார். நான்அவரை ஸ்டான்லிமருத்துவமனைக்குவரும்படிகூறினேன்.ஒருஅரசுவிடுமுறைநாளில்அவர்ஸ்டான்லி வந்தார். எங்கள்டிபார்ட்மெண்ட்டையும்வேலைபார்க்கும் விதத்தையும்பார்த்துஅசந்துபோனார். அதன்பிறகு தேவையான நிதியைஒதுக்கினார்.நாங்கள்கேட்டதைக்காட்டிலும் இருமடங்குநிதிகிடைத்தது.அதுமட்டுமின்றிபுதிய கட்டிடமும்கிடைத்தது.அந்தக்கட்டிடத்தை நவீனப்படுத்தவும்நிதிகிடைத்தது.

மருத்துவத்துறைகட்டிடத்தைதிறப்புவிழாவுக்குதயார்செய்யும்மும்முரத்தில் இருந்தோம்.புதிய டீன்ஒருவர்எங்களுடன்இணைந்தார்.ஆனால்நிதி விஷயத்திலேயேஆர்வமாக இருந்தார். எனினும்,நிதிநிர்வாகம் முழுவதும்தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் பொறுப்பில் மாற்றப்பட்டதை அறிந்ததும் அவர் விரக்தி அடைந்தார்.அதைத்தொடர்ந்து கட்டிடத்தை எங்களிடமிருந்து பறிக்க முயற்சித்தார். எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில் முதல்வர் கலைஞரின் இல்லத்துக்கு இரவு 8 மணிக்கு போன் செய்தேன். அடுத்த நாள் காலை நான் ஜப்பானுக்கு போகவேண்டும் என்பதால் அவசரமாக போன் செய்தேன். முதல்வரின் மனைவி போனை எடுத்தார். அடுத்தநாள் காலை முதல்வரை சந்திக்க வரும்படி கூறினார். செல்வாக்கு மிகுந்த அந்த புதிய டீன் மாற்றப்பட்டார். பல அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

திரு.சன்வத்ரம் ஐஏஎஸ் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவர்தான் தொடக்கத்தில் என்னை அப்போலோவுக்கு ஆலோசனை நடத்த வரும்படி அழைத்தவர். நான் மறுக்கவே ஸ்டான்லியில் வந்து சந்தித்து நிதி ஒதுக்கீடுக்கு உதவியவர். அரசியல் காரணங்களுக்காக அவர் பொறுப்பில்லாமல்இருந்தார். அவர் என்னை வந்து சந்தித்தார். சில நாட்களிலேயே அவர் இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். அவர் வந்தபிறகு கட்டிடத்தை வேகமாக சீரமைத்தோம். இந்தக் கட்டிடத்தை முதல்வர் கலைஞர் வந்து திறந்துவைத்தால் பெரிய அளவுக்கு ஒத்துழைப்புக் கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால், முதல்வரைச் சந்திக்க அனுமதி பெறமுடியவில்லை. கட்டிடத்தை விரைவாக திறக்க சுகாதாரத்துறை அமைச்சர் விரும்பினார். அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் திருப்பதி சென்றேன். கடவுள்தான் உதவவேண்டும் என்று நினைத்தேன். அடுத்தநாள் அப்போலோவுக்கு சென்று லிப்ட் அருகே காத்திருந்தேன். லிப்ட் வந்தது. உள்ளே இருந்து முதல்வர் கலைஞரும் அமைச்சர்களும் வந்தார்கள். முதல்வருக்கு வாழ்த்துச் சொன்னேன். இரண்டு மாதங்களாக அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றேன். உடனே அடுத்த நாள் காலை 9 மணிக்கு வந்து சந்திக்கும்படி கூறினார். போனேன். மருத்துவமனைக் கட்டிட திறப்புவிழாவுக்கு வரவேண்டும் என்று கேட்டேன்.

“பொதுவாக, பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளுக்காகத்தான் டாக்டர்கள் வருவார்கள். அதெல்லாம் உங்களுக்கு வேண்டாமா?” என்று நகைச்சுவையாக கேட்டார். உடனே நான், “ஸார், நீங்கள் இந்த கட்டிடத்தை திறந்துவைத்தால், அதுவே பாரத ரத்னா விருது பெற்ற மகிழ்ச்சியை எனக்கு கொடுக்கும்” என்றேன். பிறகு அவர் ஆலோசனை நடத்தி திறப்புவிழாவுக்கு வந்தார். திறந்துவைத்த பிறகு ஹிண்டு போட்டோகிராபரை அழைத்து அவருக்கு அருகில் நிற்கவைத்து போட்டோ எடுக்கச் சொன்னார். நான் உயரத்தில் பறப்பதுபோல உணர்ந்தேன்.

எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ஆனால், எப்போது ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சையை தொடங்கப்போகிறேன் என்று தெரியவில்லை. இதற்கிடையில் மாதத்துக்கு ஒரு முறை 50 சீனியர் டாக்டர்களுக்கு எங்களது டிபார்ட்மெண்ட் குறித்து விரிவுரை நிகழ்த்தும்படி பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்சும், ஷீலா பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்சும் கூறியிருந்தார்கள். ஒரு முறை விரிவுரை முடிந்ததும் 2009 ஜனவரி 28 ஆம் தேதி டாக்டர்களுடன் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு டாக்டர் கேட்டார்… “டிபார்ட்மெண்ட் நன்றாக வந்திருக்கிறது. ஆனால், எப்போது முதல் அறுவைச் சிகிச்சையை தொடங்குவீர்கள்?” என்று கேட்டார். அவர் வாயை மூடவில்லை. அதற்குள் எனது போன் ஒலித்தது. அரசு மருத்துவமனையிலிருந்து டாக்டர் பேசினார். தங்களிடம் மூளைச்சாவு அடைந்த ஒரு நோயாளி இருப்பதாகவும், அவரிடமிருந்து ஈரலை எடுத்துக்கொள்ள முடியுமா? என்று என்று கேட்டார்.

நானும் எனது சகாக்களும் ஆச்சரியமடைந்தோம். அன்று காலை 11 மணிக்கே அறுவைச் சிகிச்சையை தொடங்கினோம். அடுத்தநாள் மதியம் வரை இது நீடித்தது. எல்லோரும் சோர்வடைந்தோம். நோயாளி கண் விழிக்கும்வரை ஓய்வெடுத்தோம். அரசு மருத்துவமனை ஒன்றில் இந்தியாவிலேயே முதன்முதல் ஈரல் மாற்று சிகிச்சையை நடத்தியிருக்கிறோம். எனது அறைக்கு போகும்போது அங்கே ஒரு சாமியார் நின்றுகொண்டிருந்தார். கையில் ஒரு மாலையும், பிரசாதமும் வைத்திருந்தார். அவர் 6 மணிநேரம் காத்திருப்பதாக எனது செயலாளர் சொன்னார். எனக்கு மாலை அணிவித்து பிரசாதம் கொடுத்த அவர், உப்பிலியப்பன் கோவிலில் இருந்து வருவதாகவும், அந்த கோவிலின் கும்பாபிஷேகத்துக்கு என்னை அழைக்க வந்திருப்பதாகவும் கூறினார். அவரை இதற்கு முன்போ பின்போ பார்த்ததே இல்லை. எங்கள் முதல் அறுவைச்சிகிச்சை வெற்றிபெற்றது. 10 ஆண்டுகள் முடிந்த நிலையிலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29 ஆம் தேதி அந்தப் பெண் எனக்கு போன் செய்து, “நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் நன்றி” என்று கூறுகிறார்.

இனி, ஸ்டெம் செல் அல்லது குருத்தணு திட்டம் குறித்து கொஞ்சம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். 2007 ஆம் ஆண்டு, நான் ஒரு கூட்டத்துக்கு போயிருந்தேன். அங்குதான் ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பதிலாக ஸ்டெம் செல் சிகிச்சைக்கு மாறலாம் என்ற விவாதம் இடம்பெற்றது. எங்களுடைய முயற்சிகள் வீணாக நாங்கள் விரும்பவில்லை. ஸ்டெம் செல் ஆய்வுக்கூடங்கள் பலவற்றை ஆய்வு செய்தோம். பேராசிரியர் ரோஸி வெண்ணிலா ஆஸ்திரேலியாவுக்குச் சென்று சில ஆய்வுக்கூடங்களை பார்த்து வந்தார். அந்த அடிப்படையில் 20 கோடி ரூபாயில் ஒரு திட்டத்தை உருவாக்கி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பினோம். ஒரு பதிலும் வரவில்லை.

இந்தச் சமயத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்பழகனும், கனிமொழி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.யும் 5 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்தார்கள். ஆனால், அந்த நிதியை ஒதுக்க லகானி ஐ.ஏ.எஸ். மறுத்துவிட்டார். ஆனாலும், கருப்பையா பாண்டியனால் அந்த நிதியை நாங்கள் பெறமுடிந்தது. ஆனாலும், லேப் கட்டும் பணி நகரவே இல்லை. இந்த நிலையில்தான் நான் முதல்வர் கலைஞரை சந்தித்தேன். அவரிடம் விவரத்தை தெரிவித்தேன். அவர் உடனே அப்போதைய தலைமைச் செயலாளர் ஸ்ரீபதியை அழைத்து கவனிக்கச் சொன்னார். அவர், நான்கு மணிநேரம் ஆய்வு செய்தார். அந்தச் சமயத்தில் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. அதை ஏற்கும்படி என்னை முதல்வர் கலைஞர் கேட்டார். நான் அதில் விருப்பமில்லை என்றேன். ஸ்டான்லியிலேயே நிறைய வேலை பாக்கியிருக்கிறது என்றேன். உடனே அவர்… “வி.சி. போஸ்ட் வேண்டாம் என்கிறீர்கள். பத்மஸ்ரீ விருது வேண்டாம் என்கிறீர்கள். உங்களுக்கு என்னதான் வேண்டும்?” என்று கேட்டார்.

நான் அவரிடம், டெல்லி அரசு திட்டமிட்டுள்ள ஐஎல்பிஎஸ் திட்டம் குறித்து கூறினேன். 3 ஏக்கர் நிலத்தையும் 350 கோடி ரூபாயையும் அது ஒதுக்கியிருப்பதை குறிப்பிட்டேன். அதைக்கேட்ட முதல்வர், இடத்தை தேர்வு செய்துவிட்டு வாங்க, 450 கோடி ரூபாய் தருகிறேன் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி, அவருடைய உதவியாளர் சண்முகநாதனை அழைத்து, இரண்டு மணி நேரத்தில் நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களின் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார். நான் ஸ்டான்லி மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் பொதுப்பணித்துறை இடத்தை அடையாளம் காட்டினேன். அப்படித்தான் பழைய மத்திய சிறையின் 8 ஏக்கர் நிலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கிடைத்தது. ஆனால், முதல்வர் தருவதாக சொன்ன 450 கோடி ரூபாய் பல காரணங்களால் கிடைக்கவில்லை.

நான் பணி ஓய்வு பெறுவதற்கு சில மாதங்கள் முன் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வந்து ஸ்டான்லியிலேயே தொடர்ந்து பணிபுரியும்படி கேட்டார். நான் மறுத்தேன். எனக்கு பணி நீடிப்புக் கொடுத்தால் பலருடைய பொறாமைக்கு ஆளாவேன் என்றேன். துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினும் என்னை பணியில் நீடிக்கும்படி கேட்டார். நான் மீண்டும் மறுத்தேன். முதல்வர் சொன்னால் கேட்பீர்கள். நான் சொன்னால் கேட்கமாட்டீர்களா என்று கேட்டார். மற்றவர்களுடைய பொறாமைக்கு நடுவே நான் பதவி நீடிப்பு பெற விரும்பவில்லை என்பதைத் தவிர வேறு காரணம் எதுவுமில்லை. 36 ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சையையும், ஸ்டெம் செல் லேப் கட்டுமானப் பணியையும் மனநிறைவோடு செய்திருக்கிறேன். அதுபோதும் என்பதே எனது எண்ணமாக இருந்தது.

தமிழில் – ஆதனூர் சோழன்