Skip to main content

எடப்பாடி ஸ்டைல் தெரிந்த ஒரே நபர் இவர் தான்! இ.பி.எஸ் டூர் ரகசியம்!

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

எம்.ஜி.ஆருக்குப் பிறகு வெளிநாடு செல்லும் அ.தி.மு.க. முதல்வர் என்ற பெயரைப் பெறுகிறார் எடப்பாடி. ஜெ.வை சிகிச்சைக்காகக்கூட வெளிநாடு அழைத்துச் செல்லாத நிலையில், எடப்பாடியின் பயணம் எதிர்பார்ப்பையும் சர்ச்சையையும் சேர்த்தே உருவாக்கியுள்ளது.



28-ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் எடப்பாடி நேராக அமெரிக்கா போய் தமிழரும் கூகுள் நிறுவனத்தின் தலைவருமான சுந்தர் பிச்சையை சந்திக்கிறார். அதற்குப் பிறகு பஃபலோ ஸ்டேட் (எருமை மாடுகளின் மாநிலம்) என்கிற இடத்திற்கு செல்கிறார்.

eps

அங்கிருந்து நியூஜெர்ஸி மாநிலத்திற்கு செல்கிறார். அதன்பிறகு கிரேட் பிரிட்டன் எனப்படும் இங்கிலாந்து நாட்டிற்கு செல்கிறார். இதில் நியூஜெர்ஸி என்கிற இடத்தில் ஒரு உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையை பார்வையிடுகிறார். அமெரிக்காவில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார். செப்டம்பர் 9 காலையில் சென்னை திரும்புகிறார். இதுதான் அவரது பயணத்திட்டம் பற்றி அரசு வட்டாரங்களில் பரிமாறப்படும் தகவல்கள்.

 

admk



13 நாட்கள் சுற்றுப் பயணத்தின் மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. முதல்வருடன் பதினோரு பேர் கொண்ட குழு செல்கிறது. அதில் முதல்வரின் உதவியாளர் கிரிதரன், முதல்வரின் செயலாளர்களான விஜயகுமார் ஐ.ஏ.எஸ்., சாய்குமார் ஐ.ஏ.எஸ். ஆகியோருடன் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, அந்தந்த துறைகளின் செயலாளர்கள் இவர்களோடு மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ஆகியோர்தான் இந்த பதினோரு பேர் குழு. இவர்கள் ஒரே நேரத்தில் எடப்பாடியுடன் பயணிக்க மாட்டார்கள். எங்கே முதல்வருடன் சேர வேண்டும் என தனித்தனியாக நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்டுள்ளது. எடப்பாடியின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் அவருக்கு மிக நெருக்கமான அமைச்சர்கள் எனச் சொல்லப்படும் தங்கமணியும், வேலுமணியும் இடம்பெறாதது, கோட்டை வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரிதரன் மட்டுமே முழுமையாக இருப்பாராம். அதுதான் மேட்டர்'' என்கிறார்கள் மேல்மட்டத்தில்.

 

admk



ஜெ.வின் அமைச்சரவையில் எடப்பாடி முதன் முதலாக அமைச்சர் பதவி பெற்றபோது அவருடன் இணைந்தவர்தான் கடலூரைச் சேர்ந்த அரசு ஊழியரான கிரிதரன். கூவத்தூர் முகாமில் 32 எம்.எல்.ஏ.க்களை எடப்பாடி முழுவதுமாக கவனித்துக் கொண்டபோது, அதற்கான ஏற்பாடுகளை நிறைவாக செய்தவர் கிரிதரன்தான்'' என்கிறார்கள். மழைநீர் சேகரிப்பு விளம்பரத்தில் வேலுமணி தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில் எடப் பாடியுடன் முட்டல் மோதல் வெளிப்படையானது. தங்க மணி கடந்த ஒரு வாரமாக எடப்பாடி கலந்துகொள்ளும் எந்த விழாவிலும் தலைகாட்டாமல் தவிர்க்கிறார். எனவே இவர்கள் இருவரையும் வெளிநாட்டுப் பயணத்தில் எடப்பாடி புறக்கணித்து விட்டாலும் அவர்களுக்கிடையிலான நடைமுறை விவகாரங்கள் தொடர்கின்றன. அதுபற்றி நன்கறிந்த உதவியாளர் கிரிதரனையும் செயலாளர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ்.சையும் எடப்பாடி அழைத்துச் செல்கிறார். இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது'' என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

ஜெ. ஆட்சியில் நத்தம், ஓ.பி., வைத்திலிங்கம் ஆகியோர் கொடுத்த மாதாந்திர தவணையை, கார்டனில் ஜெ.விடம் கொடுக்கும் பொருளாளராக இருந்தார் எடப்பாடி. சசிகலா வெளியேற்றப்பட்ட நேரத்தில் நடந்த ஏற்பாட்டை மறுபடியும் சசிகலா கார்டனுக்கு வந்ததும் கண்டுபிடித்து விட்டார். அதில், ஜெ.விடம் தந்தது போக மீதமிருந்தவை கரூர் அன்புநாதன் மூலம் வெளிநாட்டில் முதலீடானது. இதனால், ஓ.பி., நத்தம், வைத்திலிங்கம் ஆகியோர் போயஸ் கார்டனில் விசாரிக்கப்பட்டார்கள். ஜெ. பாணி தண்டனைகளும் நிறைவேறின. எடப்பாடி இதில் சிக்கவில்லை. காரணம், அவர் அப்ரூவராகிவிட்டார். இதுதான், ஜெ. மரணத்திற்குப் பிறகு, ஓ.பி.எஸ்.ஸிடமிருந்த முதல்வர் பதவி, எடப்பாடி பக்கம் வந்ததற்கும் காரணம். சசிகலாவுக்கு சிறைத் தண்டனை கிடைத்த நிலையில், கூவத்தூர் முகாமில் எடப்பாடி கச்சிதமாக காய் நகர்த்தியும், ஜெ. ஆட்சிக்கால சேமிப்புகளை இறக்கியும் சசிகலாவின் நம்பிக்கையைப் பெற்று முதல்வர் பதவியை அடைந்தார். இதுதான் எடப்பாடி ஸ்டைல் இதையெல்லாம் தெரிந்த ஒரே ஜீவன் அவரது உதவியாளர் கிரிதரன்தான்.


எடப்பாடி முதல்வர் ஆனதும் அந்த கிரிதரன் மூலமாகவே வேலுமணியையும் தங்கமணியையும் டீல் செய்தார். சேலத்தை சேர்ந்த திரிவேணி எர்த் மூவர்ஸ் மூலம் பா.ஜ.க.வை சமாதானப்படுத்தியதும் சசிகலாவை தூக்கி எறிந்தார் எடப்பாடி. அதன்பிறகு எடப்பாடிக்கு எல்லாமாக இருந்த வேலுமணி, தங்கமணியுடனும் தற்போது விவகாரமாகியுள்ளது. அதை சரி செய்யத்தான் கிரிதரன் துணையுடன் எடப்பாடி பாரின் விசிட்டிற்கு செல்கிறார்'' என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்க மானவர்கள். தங்கமணி, வேலுமணி, எடப்பாடி மூவரும் ஒரு வகையில் உறவினர்கள் மூவரும் கிரிதரன் வீட்டு திருமணத்திற்கு லம்ப்பாக உதவியிருக்கிறார்கள்.


இந்நிலையில், ""திரிவேணி எர்த் மூவர்சை சேர்ந்த நிர்வாகிகளான கார்த்திகேயனும் பிரபாகரனும் முன்கூட்டியே அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் சென்று எடப்பாடிக்காக காத்திருக்கிறார்கள். இது எடப்பாடியின் பயணத்தில் உள்ள ரகசிய விவகாரங்களை வெளிப்படுத்துகிறது'' என்கிறார்கள் கோட்டை வட்டாரத் தினர். பயண நோக்கத்திற்கான ஏஜெண்ட்டுகளாக இவர்கள் முன்கூட்டியே சென்றிருப்பதாகத் தெரிவிக் கிறார்கள். இதைப் பற்றி கிரிதரனிடம் அவரது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டோம். நாம் அவர் மீது எழும் குற்றச்சாட்டுகளை சொன்னபோது பலமாக சத்தம் போட்டு சிரித்தார். அவர் எந்த பதிலையும் சொல்ல மறுத்து விட்டார்.

 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.