Skip to main content

முதல்வர் வீட்டருகே இருக்கும் டீ கடைக்காரருக்கு கரோனா... ஈஷா மையத்தை விட்டது ஏன்? வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020


இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் சமூகத் தொற்று என்கிற மூன்றாவது நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.இப்பொழுது யார் மூலமாக யாருக்கு கரோனா வைரஸ் பரவியது எனத் தெரிந்துகொள்ள முடியாத நிலைக்கு இந்தியா சென்று கொண்டிருக்கிறது.மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டுக்குப் பக்கத்தில் டீக்கடை நடத்துபவருக்கு கரோனா நோய் வந்திருக்கிறது.அவருக்கு யார் மூலம் வந்தது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் முதல்வரின் பாதுகாவல் படையில் இருக்கக்கூடிய நூற்றுக் கணக்கானோரை கரோனா பரிசோதனைக்கு மகாராஷ்டிரா அரசு உள்ளாக்கியுள்ளது.

 

isha



அதேபோல் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டது என ஒரு முதியவர் அட்மிட் ஆகி இறந்தார்.அவர் இறந்த பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதனால் அந்த மருத்துவமனையில் வேலை பார்த்த செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் பல பேருக்கு கரோனா நோய் பரவியுள்ளது. இப்படி யாரிடம் இருந்து கரோனா நோய் எப்படி பரவும் எனக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்தியா முழுவதும் மாநில அரசுகள் கரோனா நோய் பாதிப்பு என சந்தேகப்படும் இடங்களில் மருத்துவப் பரிசோதனைகள் செய்து வருகின்றன.

 

corona



கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆலப்பாடு என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது மாதா அமிர்தானந்தமயி மடம்.பெரும்பாலும் வெளிநாட்டினர் வந்து போகும் இந்த மடத்தில் நிரந்தரமாக 600 வெளிநாட்டவர்கள் எப்பொழுதும் தங்கியிருப்பார்கள்.கரோனா நோய் பாதிப்பு பற்றிய மத்திய அரசு அறிவிப்பு வருதற்கு முன்பே மாதா அமிர்தானந்தமயி வெளிநாட்டு பக்தர்களைச் சந்திப்பதை நிறுத்திவிட்டார்.ஆனாலும் அந்த மடத்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர்கள் தங்கியிருக்கிறார்கள் என்கிற தகவல் கேரள அரசுக்கு கிடைத்தது.கேரள அரசு உடனடியாகக் கொல்லம் மாவட்ட கலெக்டர் அப்துல் நாசரை அந்த ஆசிரமத்திற்குள் அனுப்பியது.
 

http://onelink.to/nknapp


பொதுவாக அந்த ஆசிரமத்திற்குள் எந்த நாட்டில் இருந்து யார் வருகிறார்கள் என ஆசிரம நிர்வாகம் அரசிடம் தெரிவிப்பதில்லை.ஆசிரமத்திற்குள் கேரள அரசு உத்தரவுப்படி அதிரடியாக நுழைந்த கொல்லம் மாவட்ட கலெக்டர் அப்துல் நாசர் ஆசிரம ரிக்கார்டுகளை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தர விட்டார்.முதலில் மறுத்த மாதா அமிர்தானந்த மயி பிறகு ஒத்துக்கொண்டார்.

அதன்படி கணக்கு எடுத்ததில் மொத்தம் 68 வெளிநாட்டினர்கள், உலகெங்கும் கொரோனா பாதித்த பிப்ரவரி மாதம்,மாதா அமிர்தானந்தமயி அலுவலகத்திற்கு வந்தார்கள் எனக் கண்டுபிடித்தது.அதில் 25 பேருக்கு இருமல், சளி போன்ற கரோனா அறிகுறிகள் இருந்ததால் அவர்களை அங்கிருந்து அகற்றி அரசாங்க ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் கரோனா சோதனை முழுமையாகச் செய்து முடித்தார்கள்.இதையெல்லாம் முறையாக அறிக்கையாக எழுதி,கொல்லம் மாவட்ட கலெக்டர் அப்துல் நாசர் கேரள மாநிலத் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.அதன்பிறகு கேரள அரசு மாதா அமிர்தானந்தமயி மடத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தது.

 

bjp



அதேபோல் லண்டனில் உள்ள இந்து மதம் சார்ந்த 'இஸ்கான்' கோவிலில் இருந்த பல்வேறு நாட்டைச் சேர்ந்த பக்தர்களில் 21 பேருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருப்பதை பிரிட்டிஷ் அரசு கண்டுபிடித்தது.அந்த அமைப்பைச் சார்ந்த தலைவர் ஒருவர் இறந்து போகிறார்.அவரது இறுதி ஊர்வலத்திற்கும் நினைவு அஞ்சலி கூட்டத்திற்கும் சென்ற பக்தர்கள் ஆயிரம் பேரை அந்நாட்டு அரசு தனிமைப்படுத்தி சோதனை செய்தது.அவர்களில் ஐந்து பேர் கரோனா நோய் பாதிப்பில் இறந்து போனார்கள்.

தென்கொரியாவில் கிறிஸ்தவ மதக் கூட்டங்களில் பங்கெடுத்தவர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு இறந்து போனார்கள்.

தமிழகத்தில் ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கக்கூடிய 153 வெளிநாட்டவர்கள் விஷயத்தில் மாதா அமிர்தானந்தமயி ஆசிரமம் போலவோ, இஸ்கான் கோவில் போலவோ பரிசோதனை- பாதுகாப்பு- மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
 

கேரள மாநில மாதா அமிர்தானந்தமயி மடத்தில் கொல்லம் மாவட்ட கலெக்டர் அப்துல் நாசர் நுழைந்தது போல்,யாரும் ஈஷா மையத்திற்குள் செல்லவில்லை. அமிர்தானந்தமயி மடத்தில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் கரோனா இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டது போல் ஈஷா யோகா மையத்தில் சோதனை நடத்தப் படவில்லை.கேரள அரசு அமிர்தானந்தமயி மடத்தில் யார் தங்கியிருக்கிறார்கள்,அவர்களது பெயர், விவரம் அவருக்கு கரோனா நோய் இருக்கிறதா என்கிற சோதனைகள் நடத்தப்பட்ட பட்டியலை வைத்திருக்கிறது.அதைத் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேரளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பெற்றிருக்கிறார்கள்.அதுபோல எந்த ஆவணத்தையும் ஈஷா யோகா மையமோ, தமிழக அரசோ அதனை கேட்டு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களுக்கு வழங்கவில்லை.

ஈஷா யோகா மையத்தில் அமிர்தானந்தமயி மடத்தில் நடப்பது போன்ற வெளிப்படையான தன்மையை ஏன் கடைபிடிக்கவில்லை என கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.ஈஷா மையத்தில் வசிப்பவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது எனத் தமிழக அரசு சொல்கிறது.பொதுவாக, எந்தெந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எந்தெந்த மருத்துவமனைகளில் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதை அரசு தனது செய்திக்குறிப்பின் மூலம் உறுதிப் படுத்தப்படுகிறது.ஆனால், ஈஷா மையத்தில் உள்ளவர்களை எந்த மருத்துவர் சோதனை செய்தார்.எந்த மருத்துவமனையில் அந்தச் சோதனை உறுதிப்படுத்துகிறது என்பதற்கான எந்தத் தகவலும் அரசு வெளியிடவில்லை.
 

http://onelink.to/nknapp


ஈஷா யோகா மையத்திற்கு உள்ளேயே ஒரு சுடுகாடு இயங்குகிறது.அதில் இறந்தவர்கள் எரிக்கப்படலாம் என்ற குற்றச்சாட்டைச் சமூக ஆர்வலர்கள் வைக்கிறார்கள்.கோவிட்-19 வந்த பிப்ரவரி காலக்கட்டத்தில் இருந்து இன்று வரை எத்தனை பேர் அந்த மையத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டார்கள் என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் தமிழக அரசு மலைவாழ் கிராமங்களில் கட்டப்படும் கட்டிடங்களில் விதிமுறை மீறல்கள் இருக்குமானால் அதை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை மலைப்பகுதி அபிவிருத்தி கவுன்சில் என்கிற அமைப்பிடம் இருந்து பறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ளது.அதற்காக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ள கிராமமான போலாம்பட்டி இடம் பெறவில்லை.ஆனால் ஈஷா யோகா மையம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆதிவாசிகளிடம் வாங்கி குவித்துள்ள மலை கிராமங்கள் இடம் பெற்றுள்ளன என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்,இது ஈஷாவின் எதிர்கால நலன்களுக்காக,கரோனா நோய் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.கரோனா விஷயத்தில் உலகமெங்கும் உள்ள மத அமைப்புகள் அந்தந்த நாட்டு அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையால் சோதனைக் குள்ளாக்கப்பட்டு வருகின்றன.ஆனால் ஈஷா மையத்தில் உள்ளவர்கள் எந்த சோதனைக்கும் உள்ளாக்கப்படவில்லை.அதற்கு காரணம் ஈஷா மையம் பாஜகவின் ஊதுகுழலாகச் செயல்படுகிறது.இந்தியாவின் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு,மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றதால்,அவரிடம் உள்ள செல்வாக்கின் மூலம்,ஈஷா மையத்தில் எந்தச் சோதனையும் நடத்த வேண்டாம் எனப் பிறப்பித்த தடை உத்தரவின் காரணமாகவே மத்திய அரசும்,மாநில அரசும் ஈஷா பக்கமே தலைவைத்து படுக்கவில்லை என்கிறது மத்திய அரசு வட்டாரம்.


- சிவா

 

 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.