Skip to main content

2022ஆம் ஆண்டு: பரபரப்பை ஏற்படுத்திய பேரறிவாளன்… பில்கிஸ் பானோ தீர்ப்புகள்!

Published on 31/12/2022 | Edited on 31/12/2022

 

Year 2022: Sensational Perarivalan… Bilgis Bano Verdicts!

 

2022 ஆம் ஆண்டில் மக்களுக்கான நீதியை வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் நீதிமன்றங்களின் செயல்பாடுகளில் இரண்டு வழக்குகள் தொடர்பான விடுதலை முடிவுகள் பெருத்த விவாதத்தை நாடு முழுக்க ஏற்படுத்தின.

 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 30 ஆண்டுகளாக சிறைவாசத்தை அனுபவித்து வந்த தமிழர்கள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக கவர்னர் முடிவெடுக்கலாம் என்று 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே உச்சநீதிமன்றம் தெரிவித்த நிலையில், தமிழக அமைச்சரவையும் உடனடியாக 7 தமிழர்களையும் விடுதலை செய்யலாமென தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியது. ஆனால், கவர்னர் அந்த தீர்மானத்தைக் கிடப்பில் போட்டார்.

 

இந்நிலையில், பேரறிவாளன் மீண்டும் தனது விடுதலைக்காக உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட, இம்முறை, அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை விடுதலை செய்வதாக மே மாதம் 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கவர்னர் முடிவெடுக்கக் காலதாமதம் செய்ததையும், பேரறிவாளனின் உடல் நலம், நன்னடத்தை ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு விடுதலை செய்வதாக உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது. பேரறிவாளனின் விடுதலைக்கு தமிழக முதல்வர், வைகோ, மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். காங்கிரஸ் கட்சி எதிர்ப்பைப் பதிவு செய்தது.

 

பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, நவம்பர் 11 ஆம் தேதி நளினி, சாந்தன் உள்ளிட்ட 6 தமிழர்களையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த விடுதலையின்போதும் ஆளுநர் முடிவெடுக்கக் காலதாமதம் செய்ததை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. இதன் மூலம் ஆளுநரின் செயல்பாடு கடும் விமர்சனத்துக்குள்ளானது.

 

Year 2022: Sensational Perarivalan… Bilgis Bano Verdicts!

 

இதேபோல் குஜராத் மாநிலத்தில், 2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற கலவரத்தால் 2000 பேர் வரை கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் போது, ராதிக்பூர் கிராமத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானோ என்ற பெண்மணி, அவரது மூன்றரை வயது மகள் சலேஹா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் மீது வன்முறையாளர்கள் கொடூரமான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் என்னவானார்களென்றே தெரியவில்லை. பில்கிஸ் பானோ, அவரது தாயார் மற்றும் மூன்று பெண்களையும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்களைக் கொடூரமாகத் தாக்கியதில் மற்றவர்கள் இறந்துவிட பில்கிஸ் பானோ மயக்கமடைந்ததால் அவரும் அவரது குழந்தையும் மட்டும் உயிர்பிழைத்தனர்.

 

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பில்கிஸ் பானோ, பல்வேறு அச்சுறுத்தல்களுக்கிடையே தொடர்ச்சியாக சட்டப்போராட்டம் நடத்தி, கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. 15 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்து வந்த 11 பேரையும் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுதலை செய்தது நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் மனம் குமுறிய பில்கிஸ் பானோ மேல்முறையீடு செய்ய, அதில் நீதிமன்றத்துக்குப் பதிலளித்த குஜராத் அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின் பேரில்தான் குற்றவாளிகளை விடுதலை செய்தோமென்று தெரிவித்தது. இந்த விடுதலைக்கெதிராக ஓவைஸி, ராகுல் காந்தி உள்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். பெண்களுக்கு ஆதரவான சமூக அமைப்புகளும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.

- தெ.சு.கவுதமன்

 

 

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

'என்னாது எண்ணி முடிக்க இவ்வளவு நாள் ஆகுமா?' -நீதிமன்றம் சொன்ன பதில்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதி வருடத்திற்கு கொண்டு வந்த பொழுது, அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்படுகிறது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது.

nn

இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், 'இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 என்ற தொகுதிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது' என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்' என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.