Skip to main content

கைதிகளே தயாரித்த 3 லட்சம் மாஸ்க்குகள் தேக்கம்! சிறைத்துறை அதிருப்தி!!

Published on 21/04/2020 | Edited on 21/04/2020


தமிழகத்தில் கைதிகளே தயாரித்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் வாங்க ஆளின்றி தேங்கிக் கிடப்பதால், சிறைத்துறை நிர்வாகம் அதிருப்தி அடைந்துள்ளது.


கரோனா வைரஸ் தொற்று அபாயம் உள்ளதால் கடந்த மார்ச் 24-ம் தேதி மாலை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சேலத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று, முகக்கவசம் அணியாமல் வெளியே நடமாடினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.
 

 

 

mask


இதனால் ஒருபுறம் முகக்கவசத்திற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், தமிழகச் சிறைகளில் உள்ள கைதிகள் மூலம் முகக்கவசங்கள் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, கடலூர், வேலூர் உள்ளிட்ட மத்தியச் சிறைகளில் உள்ள கைதிகள் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். அவர்கள் தயாரித்த முகக்கவசங்களைக் காவல்துறையினர் நேரடியாகக் கொள்முதல் செய்து வந்தனர். 


தற்போது சாதாரணப் பனியன் துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் 5 ரூபாய் முதல் மருந்துக் கடைகளிலேயே கிடைக்கின்றன. பொது வெளியிலும் சிலர் கூவிக்கூவி விற்பனை செய்கின்றனர். இதனால் ஆரம்பத்தில் நிலவிய தட்டுப்பாடு, தற்போது நீங்கியுள்ளது. 
 

http://onelink.to/nknapp


சந்தையில் தேவை குறைந்ததால், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் நீல நிறத்தினாலான கைதிகள் தயாரித்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் சிறைச்சாலைகளிலேயே தேங்கிக் கிடக்கின்றன. காவல்துறையினரும் ஏனோ சிறை நிர்வாகத்திடம் இருந்து முகக்கவசங்களை கொள்முதல் செய்வதைத் திடீரென்று நிறுத்திக் கொண்டனர்.


இதுகுறித்து சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ''கரோனா வைரஸ் தொற்று அபாயத்தால் முதன்முதலில் ஊரடங்கு அமலுக்கு வந்தபோது முகக்கவசங்களுக்கு அதிக தேவை இருந்தது. அதனால் தண்டனை கைதிகள் மூலம் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டன. 


மேலும், காவல்துறையினருக்கு பல தன்னார்வ அமைப்புகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் தேவையான முகக்கவசங்களை ஸ்பான்சர் செய்து விடுவதால், காவல்துறையினர் சிறை நிர்வாகத்திடம் முகக்கவசம் வாங்குவதை முன்னறிவிப்பின்றி நிறுத்தி விட்டனர். இதனால்தான் சிறை கைதிகள் தயாரித்த 3 லட்சம் முகக்கவசங்கள் தேங்கியுள்ளன,'' என்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.