Skip to main content

சென்னை - தேவாலய வளாகத்தில் அனுமதி பெறாத கல்லறை! சடலத்தை கைப்பற்றிய போலீசார்!

Published on 27/12/2018 | Edited on 27/12/2018
pozhichalur chennai




சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் அமைந்துள்ள தேவாலயத்தில் அனுமதி இல்லாமல் சிமெண்டரி பதப்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது என்று இந்து மக்கள் கட்சி சார்பில் பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

 

இந்த புகாரையடுத்து அந்த தேவாலயத்தில் வட்டாட்சியர் ஹேமலதா, வருவாய் கோட்டாட்சியர், கிராம வருவாய் அலுவலர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அங்கு தரைதலத்தின் ஒரு பகுதியில் சுவரில் அடுக்கடுக்காக பெட்டி வடிவத்தில் சிறு சிறு கல்லறைகள் கட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு கல்லறைக்கு மட்டும் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. 


 

இதனால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். பின்னர் அதனை உடைத்து பார்த்தனர். அப்போது உள்ளே சடலம் ஒன்று இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். கல்லறைக்குள் இருந்த சடலம் பம்மல் பகுதியைச் சேர்ந்த நோனப்பன் என்பவருடையது என தெரிய வந்தது. 

 

இதனைத்தொடர்ந்து உடல் வெளியே எடுக்கப்பட்டு வழக்கமாக கிறிஸ்துவர்கள் அடக்கம் செய்யும் கல்லறையில் புதைக்கப்பட்டது. உரிய அனுமதி இல்லாமல்அடுக்கு கல்லறைகள் அமைத்து உடல்களை புதைக்க கூடாது என வருவாய் துறையினர் எச்சரித்தனர்.



 

pozhichalur chennai




இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவாலயத்தின் முன்னாள் தலைவர் மேத்யூ, பின்னால் பஞ்சாயத்து சுடுகாடு உள்ளது. அதனோடு சேர்ந்துதான் இந்த கல்லறை கட்டப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு அனுமதி கேட்டோம் இன்னும் கிடைக்கவில்லை. அதற்குள் இறந்துபோனவரின் மனைவி தனது கணவனுக்கு பூஜை நடத்த வேண்டும் என்று கேட்டதால் அனுமதிக்கப்பட்டார். இறந்துபோனவருக்கு 75 வயது இருக்கும். முதல் முதலாக இந்த ஒரு சடலம் மட்டுமே கல்லறையில் வைக்கப்பட்டது என்று கூறினார். 

 

கல்லறைக்கு அனுமதி கிடைக்காதபோது ஏன் அங்கு சடலம் வைக்கப்பட்டது? என்று தேவாலய நிர்வாகிகளிடமும் நோனப்பனின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.