Skip to main content

புகழ்பெற்ற கோவிலில் மான்கறி மது சாப்பிடும் கோவில் ஊழியர்... அதிர்ச்சியில் பக்தர்கள்... 

Published on 16/08/2020 | Edited on 17/08/2020
Temple Employee

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகில் உள்ளது மணவாளநல்லூல். இங்கு பிபலமான கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இவரின் ஏவல் தெய்வமான முனியப்பரின் சன்னதி முன்பு தங்கள் வீடுகளில் களவு போன பொருட்களை திரும்ப மீட்டு தரவும் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகள் தீர்த்து வைக்கவும், தீராது சீட்டு கட்டும் வழக்கம் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல அயல்நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

 

அப்படிப்பட்ட புனிதமான இக்கோயிலில் மாமிசம், மது சாப்பிட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் கோயில்களில் வழக்கமான பூஜை பணிகள், தூய்மை பணிகளை மேற்கொள்ள அறநிலைய துறை ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு இக்கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் அங்குள்ள நந்தவனத்தில் மது அருந்துவதும், மாமிசம் சாப்பிடுவது, போதை தலைக்கேறிய நிலையில் புகைப்பிடிப்பது, கோயில் வளாகத்திலேயே இயற்கை உபாதையை கழிக்கின்றனர்.

 

அங்குள்ள ஒரு ஊழியர் கோயில் அதிகாரி தோரணையில் தன்னுடன் இருக்கும் ஒரு நபர் இதோ மான் கறி சாப்பிடுங்கள் என்று கூறும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக சுமார் நான்கு மாதங்களாக கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில் கோயில் ஊழியர்களின் அருவருப்பான இப்படிப்பட்ட செயல்பாடுகள் பக்தர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

இக்கோயில் வளாகத்தில் பசுமாடுகள், மான்கள், மயில்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. 20க்கும் மேற்பட்ட மான்கள் இருந்தன. தற்போது 10 மான்ங்கள் மட்டுமே உள்ளன. மற்றவை இறந்து போனதாக கோயில் நிர்வாகம் கூறுகின்றது. மான்கள் உண்மையிலேயே இறந்ததா? அல்லது அடித்து கொன்று கறி சமைத்து சாப்பிட்டார்களா? என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது. 

 

இக்கோயிலில் என்ன நடக்கிறது? உண்மை நிலவரம் என்ன? என்பதை அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வெளிப்படுத்தவேண்டும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல் சமீபத்தில் பழனி முருகன் கோவிலில் மது அருந்திய காவலர்கள் இருவரை அறநிலையத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதேபோன்று விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் வளாகத்தில் அநாகரீகமான முறையில் கொளஞ்சியப்பரை அவமதிப்பது போன்ற செயலில் ஈடுபட்டது பக்தர்கள் மனதை நோகடிக்கும் வகையில் நடந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.