Published on 08/12/2020 | Edited on 08/12/2020

தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி தேர்வில், 20 சதவீத இடஒதுக்கீட்டிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வந்த கோரிக்கைக்கு, தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. எனவே, இனி வரும் அரசுத் தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு, 20 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்.