Skip to main content

மரங்களில் நோய் தாக்குதல்;வாழ்விழக்கும் முருங்கை விவசாயிகள்!!

Published on 14/07/2019 | Edited on 14/07/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு ஒன்றிய கிராமப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட முருங்கை மரங்களை நோய் தாக்குதல் காரணமாக  வெட்டி நிலங்களில் போட்டு வருகின்றனர்

நடகோட்டை, விருவீடு, வலையபட்டி, ராஜதானி கோட்டை, சந்தையூர், விராலிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வரப்படுகிறது. கடந்த ஆண்டு கடும் வறட்சி அதனைத் தொடர்ந்து வந்த கஜா புயலினாலும் இப்பகுதியில் ஏராளமான முருங்கை மரங்கள் காய்ந்தும்,பலத்த காற்றுக்கு வேரோடு சாய்ந்தம் போயின.

 Farmers cut and thrown the trees

தற்போது போதிய விலையும் கிடைக்காத நிலையில் எஞ்சிய மரங்களை விவசாயிகள் வளர்த்து வந்தனர். இந்நிலையில் திடீரென முருங்கை மரங்களை இலை சுருட்டல் எனும் பெயர் தெரியாத நோய் தாக்கியது. இந்த நோய்க்கு எந்த மருந்து அடித்து நோயை கட்டுப்படுத்துவது  என தெரியாமல் விவசாயிகள் திண்டாடினர்.  இலைகள் காய்ந்து காய்களும் கருத்து காய தொடங்கின. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் வேறுவழியில்லாமல் மரங்களை வெட்டி விளைநிலங்களில் போட்டுவிட்டு செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

 

 Farmers cut and thrown the trees


இது குறித்து கூறும் விவசாயிகள் விருவீடு பகுதியிலிருந்து நாளொன்றுக்கு ஒரு டன் முதல் 5 டன் வரை முருங்கை காய்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும் ஆனால் தற்போது கடும் வறட்சி, புயல் அதோடு சேர்ந்து விலை கிடைக்காததால் விவசாயிகள் முருங்கை மரங்களை  பராமரிக்க முடியாமல் மிகவும் கஷ்டம்  அடைந்ததாகவும் 15 நாட்களுக்கு ஒரு முறை புதிய மருந்து அடிக்காவிட்டால் முருங்கை மரம் வாடி விடும் என்பதால் பொருளாதார ரீதியாகவும் முருங்கை மரங்களை காப்பாற்ற முடியாமல் பல விவசாயிகள் தவித்ததாகவும் கூறுகின்றனர். மேலும் முருங்கை இலையை தாக்குவது எந்த வகையான நோய் என்பது கூட தெரியாமல் நாங்கள் தவித்த வேளையில் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் யாரும்  எட்டிக்கூட பார்க்கவில்லை என  வத்தலகுண்டு விவசாயி ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டுகின்றார்.

 Farmers cut and thrown the trees


மேலும்  அவர் கூறும்போது, இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான முருங்கை பவுடர் தொழிற்சாலையை கண்டிப்பாக கொண்டு வருவேன் என உறுதி ஏற்று கூறிச் செல்லும்  இரண்டு முறை ஜெயித்த தேன்மொழி உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இதுவரை தொழிற்சாலை கொண்டு வருவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் முற்றிலும் ஏமாற்றம் அடைந்துள்ள விவசாயிகள் இனியும் இந்த அரசை நம்பி பயனில்லை என்பதற்காக தங்கள் பாடுபட்டு வளர்த்த மரங்களை தாங்களே வெட்டி விளைநிலங்களில் போட்டு வருகின்றனர் என்றார். இதனால் பெரிய அளவு நஷ்டத்தை சந்தித்து உள்ள விவசாயிகள் அரசு உதவினால் மட்டுமே தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்று கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.