Skip to main content

“கரோனா, சைனஸ், டெங்கு... அனைத்திற்கும் மூல காரணம் இதுதான்...” காவல்துறையினருக்கு முனைவர் ராஜேந்திரன் கூறிய தகவல்!

Published on 23/09/2020 | Edited on 24/09/2020

 

Corona Awareness Discussion in Madurai

 

ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட கரோனா விழிப்புணர்வு கலந்துரையாடல், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மனோதத்துவ நிபுணர். ராஜேந்திரன் அதுகுறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அவர் பகிர்ந்த தகவல்கள்...

 

கடந்த ஞாயிறு அன்று இந்தக் கூட்டம் நடைபெற்றது. சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், அசிஸ்டன்ட் கமிஷனர் எனப் பெரிய பொறுப்புகளில் உள்ளவர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 70 பேர் வரை பங்கெடுத்தனர். கரோனா விழிப்புணர்வு, நோயிலிருந்து விடுபடுவது ஆகிய தலைப்புகளின்கீழ் கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, அனைத்து நோய்த் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளுதல் பற்றியும், நோய்த் தாக்குதலுக்கு உட்பட்டால் அதிலிருந்து விடுபடுதல் குறித்தும் அறிவுரை கூறினார்.

 

Corona Awareness Discussion in Madurai

 

கரோனா, சைனஸ், டெங்கு என அனைத்திற்கும் சளி தான் மூலக்காரணம். சளி ஏன் அதிகம் பிடிக்கிறது என்றால் யாரும் சரியாக மலம் கழிப்பதில்லை. வேலைக்குச் செல்லும் அவசரகதியில் அனைவரும் இன்று ஓடிக்கொண்டு இருக்கிறோம். குளியல் முறையும் மாறிவிட்டது. காலை உணவையும் பெரும்பாலானவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிட்டது.

 

மருத்துவம் தவிர்த்து, சில வாழ்க்கை பாடங்களும் கற்றுக் கொடுத்தேன். பிரார்த்தனை செய்யுங்கள், மற்றவர்களிடம் வாழ்த்துப் பெறுங்கள் எனக் கூறினேன். அதேபோல நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பதற்கான வழிகளையும் கூறினார். இந்த பயிற்சியில் கலந்து கொண்ட மூத்த அதிகாரிகள், கீழ்நிலை அதிகாரிகளுக்கு இதுகுறித்து வழிகாட்ட இருக்கிறார்கள்.

 

Corona Awareness Discussion in Madurai

 

நோய் வருவது இயல்பானது. அதுகுறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. நோய் வருவதற்கான மூலக் காரணம் என்ன என்பதை அறிந்து, அதன்படி நடந்துகொள்ள வேண்டும். மலச்சிக்கல் தான் அனைத்திற்குமான சிக்கல் என்பார்கள். அடிவயிற்றில் மலம் தேங்கும் போது, அது நஞ்சாக மாறி நோயை ஏற்படுத்துகின்றது. அதனால்தான், தினமும் சரியாக மலம் கழிக்க வேண்டும் என்று முன்னரே கூறினார்.

 

Ad

 

அதேபோல உறவுகளிடத்தில் அன்பு நிறைந்திருக்க வேண்டும். குறிப்பாக கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான அன்பு சரியாக இருக்க வேண்டும். பாலியல் தேவை நிறைவேறாத போது மனஅழுத்தம், கோபம் போன்றவை ஏற்படுகின்றன. எனவே பாலியல் ஆற்றாமையும் பல நோய்களுக்குக் காரணமாக அமைகின்றன. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.