andrea about pahalgam incident

ஜம்மு காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

இந்த தாக்குதலையடுத்து பஹல்காம் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழகர்களை பாதுகாக்கும் முகமாக புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தக்குதலுக்கு எதிராக இந்திய அரசியல் தலைவர்கள் அல்லாது உலக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்த சூழலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து இரங்கல்களையும் சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் திரைப்பிரபலங்களும் தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். நடிகை ஆண்ட்ரியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஒரு காலத்தில் பஹல்காமில் நானும் சுற்றுலா பயணியாக சென்றிருக்கிறேன். பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நினைத்து என் இதயம் துடிக்கிறது. ஆனால் இந்த சம்பவத்திற்குப் பிறகு இன்னும் அதிகமான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் காஷ்மீர் மக்களுக்காகவும் என் மனம் உடைகிறது.

நமது நாட்டில் பிரிவினை அதிகரித்து வரும் இந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதோ சமூகத்தின் மீதோ பரப்பப்படும் வெறுப்பு பிரச்சாரத்திற்கு ஆளாகாமல் இருப்பது குடிமக்களாகிய நமது கடமை. நான் அடிக்கடி என் கருத்தை சொல்வதில்லை. ஆனால் இப்போது சொல்ல வேண்டும் என நினைத்தேன். இங்கே வெறுப்புக்கு இடமில்லை. என் கமெண்ட் செக்‌ஷனிலும் என் உலகத்திலும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment