Skip to main content

சட்ட அமைச்சர் சண்முகத்தின் பரபரப்பு அரசியல் 

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

 

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு அதிமுக மந்திரியும் மா.செ.வுமான சண்முகம் மாவட்ட அளவில் கட்சி பதவிகள் கொடுப்பதில் தன் கட்டுப்பாட்டில் இப்போது கொண்டு வந்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று காட்ட வேண்டும், அப்போதுதான் கட்சித் தலைமையில் தான் ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவாக முடியும் என்பதை நிரூபிக்க தயாராகிவிட்டாராம் மந்திரி சண்முகம்.

 

cv shanmugam



 

அதன் எதிரொலியாக அவரது வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஒன்றிய அளவில் கட்சியினர் பதவிகளை சிலரிடமிருந்து பறித்துள்ளார். பலருக்கு புதிய பதவிகள் கொடுத்துள்ளார். ஒவ்வொரு ஒன்றியத்தையும் இரண்டாகப் பிரித்து புது முகங்களுக்கு ஒ.செ. பதவியை கொடுத்து தன் விசுவாசிகளை மிக வேகமாக வளர்த்து வருகிறார். 
 

ஏற்கனவே அமைச்சர் சண்முகத்திடம் இருந்த மா.செ. பதவியை பறித்து விழுப்புரம் டாக்டர் லட்சுமணன் அவர்களிடம் ஜெ. இருக்கும்போது வழங்கப்பட்டது. சசிகலா, ஓபிஎஸ் மூலம் கட்சிக்கு உள்ளே நுழைந்த டாக்டர் லட்சுமணன் மா.செ. பதவி,  ராஜ்யசபா எம்பி பதவி என பதவிகள் பெற்று அதிரடி அரசியல் செய்தார். அப்போது மந்திரி சண்முகத்தின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் லட்சுமணனை நோக்கி படையெடுத்தனர்.
 

இந்த நிலையில் ஜெ. மறைவையடுத்து சசிகலா சிறைக்கு சென்றார். அந்த நேரத்தில் லட்சுமணனிடமிருந்து மா.செ பதவியை மீண்டும் மந்திரி சண்முகத்திடம் வந்து சேர்ந்தது. இதையடுத்து  லட்சுமணனை நோக்கி ஓடியவர்கள் எல்லாம் மீண்டும் சண்முகத்தை நாடி ஓடி வந்தனர். இதனால் அமைச்சர் சண்முகம் தற்போது மாவட்ட அளவில் கட்சிப் பதவிகளில் தன் விருப்பப்படி மாற்றம் செய்துள்ளார். இதனால் கட்சிக்குள்  முணுமுணுப்புகள் இருந்தாலும்கூட கட்சி ஆட்சியில் இருப்பதால்  அமைச்சரிடம் விசுவாசமாக இருப்பது போல பலர் காட்டி கொள்கிறார்கள்.
 

மாவட்ட அரசியலிலும் சரி, மாநில அரசியலும் சரி அமைச்சர் சண்முகத்திற்கு அரசியல் நெளிவு சுளிவுகளை மிகச்சரியாக சொல்லிக்கொடுத்து அவரை வழிநடத்தி வருகிறார் அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன். விழுப்புரம் தெற்கு மா.செ.வாக உள்ளவர் எம்எல்ஏ குமரகுரு. இவர் முதல்வர் எடப்பாடியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளவர். ஆனால் மந்திரி சண்முகம் ஓபிஎஸ் - இபிஎஸ் என யாருடைய விசுவாசியும் இல்லாமல் தனித்தன்மையோடு தன் அரசியலை நடத்திக் காட்டி வருகிறார்.


 

அதை மேலும் பலப்படுத்த தனது ஆதரவாளர்களுக்கு கட்சிப் பதவிகளை கொடுத்து அதன்மூலம் வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் மாவட்டத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்று கட்சி மேலிடத்தில் தான் ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபிக்க தயாராகி வருகிறாராம் மந்திரி சண்முகம்.
 

ஏற்கனவே திமுகவில் இதுபோன்று ஒன்றிய அளவில் கட்சி பதவிகள் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் அதிமுகவின் கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் அளவிற்கு ஈடுகொடுத்து கட்சிப் பணி செய்வதில் திமுகவினர் மத்தியில் இன்னும் கூடுதல் வேகம் தேவை என்கிறார்கள் திமுகவினர். மாவட்டத்தில் மூன்று மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். செஞ்சி மஸ்தான், எக்ஸ் மந்திரி பொன்முடி, எக்ஸ் எம்எல்ஏ அங்கயற்கண்ணி என மூவர் இருந்தும் திமுக தரப்பில் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இன்னும் வேகம் காட்ட வேண்டும் என்கிறார்கள் திமுக தொண்டர்கள். வரும் தேர்தல்களில் மாவட்டத்தில் யார் கை ஓங்கும் திமுகவா? அதிமுகவா? என்ற பரபரப்பான டாக் ஓடிக்கொண்டிருக்கிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.