Skip to main content

கேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டத்தை வழங்குகிறார் போப் பிரான்சிஸ்!

Published on 13/10/2019 | Edited on 13/10/2019

வாடிகனில் இன்று (13/10/2019) நடைபெறும் நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ், கேரள மாநிலத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி மரியாவுக்கு புனித பட்டம் வழங்குகிறார். 
 

கேரள மாநிலம் திருச்சூரில் 1876 ஆம் ஆண்டு பிறந்தவர் மரியம் திரேசியா. கன்னியாஸ்திரியான, இவர் 1914- ஆம் ஆண்டு புனித குடும்பத்தின் சகோதரிகள் என்ற பெயரில் சபை ஒன்றை நிறுவினார் இதன் மூலம் ஏழை எளியோருக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வந்தார். தொடர்ந்து சமூகப்பணியாற்றி வந்த மரியம் திரேசியா, கடந்த 1926- ஆம் ஆண்டு மரணமடைந்தார். 
 

VATICAN CITY POP FRANCIS KERALA WOMEN THERESIYA


கடந்த 2000ம் ஆண்டு அப்போதைய போப் 2ம் ஜான்பால் முக்திப் பேறு அடைந்தவர் என்ற பட்டத்தை மரியாவுக்கு வழங்கினார். அதை தொடர்ந்து இன்று வாடிகனில் நடைபெறும் நிகழ்ச்சியில் மரியம் திரேசியாவை புனிதராக போப் பிரான்சிஸ் அறிவிக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் தலைமையிலான குழு வாடிகன் சென்றுள்ளது. 



 

சார்ந்த செய்திகள்

Next Story

“இவர்கள் எப்போது போர்க் கதைகளை முடிப்பார்கள்” - போப் பிரான்சிஸ் வேதனை

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Pope Francis laments Israel-Palestine conflict

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 25 நாட்களுக்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. 

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை அழித்து உலகத்தில் இருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 8,900 அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஐ.நா ஊழியர்கள் 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும். அதில் 70 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 

 

இந்த நிலையில் போப் பிரான்சிஸ், புனித பூமியில் நடக்கும் போர் என்னை பயமுறுத்துகிறது. இவர்கள் எப்போது போர் கதைகளை முடிப்பார்கள் என்று காத்துக்கொண்டிருக்கிறேன். இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் ஒன்றாக வாழ வேண்டிய இரு நாட்டு மக்கள். பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதன் மூலமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஜெருசேலம் நகரை ஐ.நா நிர்வகிக்கும் வகையில் சிறப்பு அந்தஸ்து கொண்டு வரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஒஸ்லோ ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே சமாதானத்தை முன்னெடுப்பதையும், மேற்குக் கரையின் பெரும்பகுதியை பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதை நோக்கமாகவும் கொண்டு போடப்பட்ட ஒப்பந்தம் தான் ஒஸ்லோ ஒப்பந்தம். இதில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ஆனால் இரு தரப்புக்கு இடையேயான அமைதி, சில ஆண்டுகள் மட்டுமே நீடித்த நிலையில், மீண்டும் வன்முறை கோரத் தாண்டவம் ஆடத்தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது! 

Published on 15/05/2022 | Edited on 15/05/2022


தமிழகத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் நடைபெற்ற நிகழ்வில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. 

 

வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு போப் பிரான்ஸிஸ் புனிதர் பட்டத்தை வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 

 

இந்த நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மனோ தங்கராஜ், தமிழக சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

 

முன்னதாக, புனிதர் பட்டம் வழங்குவது தொடர்பான அறிமுக நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்துப் பாடப்பட்டதை அமைச்சர் மனோ.தங்கராஜ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.