Skip to main content

“ராஜஸ்தான் அமைச்சரை அரபிக் கடலில் வீச வேண்டும்” - மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்!

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

 Union Minister Gajendra Singh says Rajasthan Minister should be thrown into the Arabian Sea

 

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சரான தரிவால், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டமன்றத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ ராஜஸ்தான் மாநிலம் ஆண்கள் மாநிலமாக உள்ளது. இங்கு ஆண்கள் அதிகமாக உள்ளதால் பெண்களுக்கு எதிரான அதிக பாலியல் வன்கொடுமை நடக்கிறது” என்று கூறினார். அப்போது, சட்டமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பிறகு, “நான் கூறியதற்கு மிகவும் வருந்துகிறேன், நான் பெண்களை மதிக்கிறேன்” என்று அமைச்சர் தரிவால் கூறினார். பெண்களுக்கு எதிரான கருத்துகளை அமைச்சர் பேசியதற்காக அவரை பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க.வினர் வலியுறுத்தி வருகின்றனர். 

 

இந்த நிலையில்,  மத்திய அமைச்சரும், மூத்த பா.ஜ.க தலைவருமான கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிகானரில் நடைபெற்ற பா.ஜ.க.வின் பரிவர்தன் சங்கல்ப் யாத்திரையில் பங்கேற்றனர். அதன் பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கஜேந்திர சிங், “  நிச்சயமாக ராஜஸ்தான் ஆண்களின் மாநிலம் தான். ராஜஸ்தானின் ஆண்மையால் தான், இந்து மதமும், சனாதன தர்மமும் இன்னும் இந்தியாவில் உயிர்ப்புடன் இருக்கிறது. பிருத்விரஜ் சவுகான், பாப்பா ராவல், ராணா சங்கா, வீர் துர்காதாஸ், ராவ் சந்திர சென் ஆகியோர் ராஜஸ்தானில் பிறக்காமல் இருந்திருந்தால், இன்று நம் பெயர் வேறு எதாவது இருந்திருக்கும்.

 

மேலும், ராஜஸ்தான் ஆண்களில் மாநிலம் என்பதால் ராஜஸ்தானில் அதிக பாலியல் வன்கொடுமை நடக்கின்றன என்று அமைச்சர் தரிவால் கூறிய அன்றே ராஜஸ்தான் மாநிலம் அவமதிக்கப்பட்டுள்ளது. அவர் இன்னும் அமைச்சர் பதவியில் இடம்பெற்றிருப்பது பெரும் துரதிஷ்டவசமானது. அவர் தூக்கி எறியப்பட வேண்டும். இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால் அவர் அரபிக்கடலில் தூக்கி எறியப்பட வேண்டும்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை சம்பவம்; தனிப்படை போலீசார் அதிரடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
avadi jewelry incident police in action

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு கடந்த 15 ஆம் தேதி (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

avadi jewelry incident police in action

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களை ஆந்திரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை போலீசார் கண்டுபிடித்திருந்தனர். 

avadi jewelry incident police in action

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறி தினேஷ் குமார் மற்றும் சேட்டன்ராம் ஆகியஇருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது சென்னையில் தங்கி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

Next Story

ஆவடியில் இரட்டைக் கொலை; போலீசாரிடம் சிக்கிய செல்போன்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
aavadi siddha doctor and his wife incident Cell phone caught by the police

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள மிட்டனமல்லியில் சித்த மருத்துவர் சிவன் நாயர் என்பவரும், அவரது மனைவி பிரசன்னகுமாரி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இத்தகைய சூழலில் அவரது இல்லத்திற்கு சிகிச்சைக்கு வருவதுபோல் நேற்று (28.04.2024) இரவு வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அதன்பின்னர் சித்த மருத்துவர் சிவன் நாயரையும் அவரது மனைவி பிரசன்னகுமாரியையும் மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டனர். அப்போது இந்த இரட்டைக் கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு கொலையான மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொலையாளிகள் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.