Skip to main content

நோயாளிகள் ரத்ததானம் பெறுவதை எளிமையாக்க புதிய செயலி அறிமுகம்...

Published on 25/06/2020 | Edited on 25/06/2020

 

harshvardhan launches ebloodservices app in india

 

அவசரமாக ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் செஞ்சிலுவைச் சங்கத்தின் 'eBloodServices App' என்ற செயலியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று அறிமுகம் செய்துவைத்தார். 

 

விபத்து, உறுப்புமாற்று அறுவைசிகிச்சை உள்ளிட்ட அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குச் சிலசமயங்களில் தேவைப்படும் ரத்தம் கிடைக்காததால் பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன. இந்நிலையில், நோயாளிகளுக்குத் தேவையான ரத்தத்தைப் பெறுவதற்காகச் செஞ்சிலுவைச் சங்கம் உருவாக்கியுள்ள புதிய செயலி ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று அறிமுகம் செய்துவைத்தார்.

 

இந்த அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், "அவசரமாக ரத்தம் தேவைப்படுபவர்கள் இந்தச் செயலியில் தங்களது தேவையைக் குறிப்பிட்டுப் பதிவுசெய்து கொள்ளலாம். இந்தச் செயலி மூலம் அவர்களுக்கு ரத்தம் எங்கிருந்து கிடைக்கும் என்பதை உடனடியாக அறிந்து கொள்ள முடியும். மேலும், ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு 4 யூனிட் ரத்தம் வரை இந்தச் செயலியின் மூலம் பதிவுசெய்து பெற்றுக்கொள்ள முடியும். இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்தின் இரத்த வங்கிகள் அவர்களுக்காக 12 மணி நேரம் வரை காத்திருக்கும். தன்னார்வ இரத்த தானம் செய்பவர்கள் இந்தக் காலகட்டத்தில் தொடர்ந்து நன்கொடை அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ரத்தம் தேவைப்படுவோர் அணுக உதவி எண்"- கமல்ஹாசன் அறிவிப்பு! 

Published on 15/06/2022 | Edited on 15/06/2022

 

"Helpline number for those in need of blood" - Kamal Haasan announcement!

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று (15/06/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "எமது ரசிகர் மன்றங்கள், நற்பணி இயக்கங்களாக மாற்றப்பட்டு நாற்பதாண்டுகள் ஆகின்றன. 

 

எங்கள் நற்பணி நாயகர்கள் தொடர்ந்து, பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக, கடந்த நான்கு தசாப்தங்களில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் ரத்தம் தானமாக வழங்கி, எண்ணற்ற உயிர்களைக் காத்துள்ளனர். 

 

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்க நண்பர்களை தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணைத்து, உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் 'Kamal's Blood Commune' உருவாக்கியுள்ளோம். தமிழில் 'கமல் குருதிக்கொடை குழு'. 

 

இதன் மூலம் ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்கத்தினர் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். 9150208889 எனும் பிரத்யேக எண்ணுக்கு அழைத்தால், அந்ததந்தப் பகுதிகளில் இருக்கும் எங்கள் கொடையாளிகள் மூலம் ரத்தம் தேவைப்படுவோருக்குத் துரிதமாக உதவ முடியும். ரத்த தானம் செய்ய விரும்பும் சமூக சேவகர்களும், இந்த எண்ணை அழைத்து தங்களைப் பதிவு செய்துக் கொள்ளலாம். 

 

ரத்த தானம் செய்வதற்குரிய உடல் ஆரோக்யம் கொண்டர்வர்கள் இந்த அரும்பணியில் தங்களை இணைத்துக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். குருதிக் கொடையாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு குழுவைத் தொடங்கி ரத்த தானம் செய்வது பாராட்டுக்குரிய முன்னோடி முயற்சி. இதனை முன்னெடுத்த மக்கள் நீதி மய்யத்தினரை மனதாரப் பாராட்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

Next Story

மூதாட்டியின் உயிரைக் காத்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி... நம்பிக்கைத்தரும் மனிதம்..!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

Grandmother's life-saving vision-changing ability ...

 

‘இருக்கும் வரை ரத்த தானம்! இறந்த பின் கண் தானம்!’ இந்த வாசகங்களை அரசும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அவசரமாக ரத்தம் தேவை என்பதால் பல்வேறு தண்ணார்வ அமைப்புகள், இளைஞர்கள் மூலம் ரத்தம் கொடுத்து உயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.

 


புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அறந்தாங்கி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத மூதாட்டி சகுந்தலாவுக்கு அவசரமாக ரத்தம் தேவை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் இயங்கி வரும் ‘குருதிக்கூடு’ என்ற தன்னார்வ அமைப்பு, மூதாட்டிக்கான ரத்தம் கொடுக்க தயாரானபோது, தகவல் அறிந்து சிறிது நேரத்தில் செம்பாட்டூர் அரசுப் பள்ளி ஆசிரியரான பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சிவா, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு தனது நண்பரும் சக ஆசிரியருமான வீரமாமுனிவருடன் வந்து ரத்தம் கொடுத்தார். 

 

பார்வையற்ற மாற்றுத் திறனாளியான ஆசிரியர் சிவா, ரத்ததானம் செய்திருப்பதை கேள்விப்பட்ட மருத்துவக்கல்லூரி டீன் பூவதி மற்றும் சமூக ஆர்வலர்களும் அவரது உயிர் காக்கும் சேவையை பாராட்டினார்கள்.

 

இது குறித்து ஆசிரியர் சிவா, “பார்வையற்ற மாற்றுத் திறனாளியான எனக்கு முகம் தெரியாத பலரும் பல உதவிகளை செய்திருக்கிறார்கள். அதனால் நாமும் மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இன்று மூதாட்டியின் உயிரை காக்க என் ரத்தம் உதவியுள்ளது. தொடர்ந்து ரத்த தானம் செய்வேன். என்னைப் போல அனைவரும் மற்றவர்களின் உயிர் காக்க ரத்ததானம் செய்யலாம்” என்றார்.

 

 
குருதிக்கூடு ரத்த தான அமைப்பினர் கூறும் போது, ‘இந்த அமைப்பு தொடங்கி 3 மாதங்களில் 350 பேருக்கு ரத்த தனாம் செய்திருக்கிறோம். பல கர்ப்பிணிகளுக்கு நெகடிவ் குரூப் ரத்தங்கள் தேவைப்படும் அப்போது மாவட்டம் முழுவதும் உள்ள ரத்த தான அமைப்புகள் மூலம் பெற்று கர்ப்பிணிகளுக்கு கொடுத்து உயிர்களை காத்திருக்கிறோம். இப்போது ஆசிரியர் சிவா தானாக முன்வந்து ரத்தம் கொடுத்து மூதாட்டியின் உயிரை காப்பாற்றியிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதே போல எல்லாரும் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்’ என்றனர்.