Skip to main content

பப்புக்கு சென்ற 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... சிசிடிவி காட்சியால் சிக்கிய 6 மாணவர்கள்!

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

6 students caught by CCTV footage!

 

பப்புக்கு தோழிகளுடன் சென்ற 17 வயது மாணவி ஆறு மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த மே 28 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு பப்புக்கு 17 வயது சிறுமி ஒருவர் அவரது தோழிகளுடன் சென்றுள்ளார். உடன் வந்த தோழிகள் பப்பை விட்டு வெளியே சென்ற பிறகும் அங்கிருந்த மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்த 17 வயது சிறுமி, காரில் அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாக மாணவர்கள் கூறியதை நம்பி அவர்களுடன் பென்ஸ் காரில் சென்றுள்ளார். பள்ளி மாணவியை ஏற்றிக்கொண்டு மாணவர்களுடன் சென்ற அந்த கார் முதலில் ஒரு பேக்கரியில் நின்றதாகவும், அதன் பிறகு ஜூப்ளி ஹில்ஸ் பகுதிக்குச் சென்றதாகவும், அதன் பின்னர் காரில் இருந்த மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் பள்ளி மாணவியை ஒரு இடத்தில் இறக்கி விட்ட பின் கார் சென்றுள்ளது.

 

வீடு திரும்பிய மாணவி கழுத்தில் காயம் இருப்பதைக் கண்ட சிறுமியின் தந்தை இதுகுறித்து மகளிடம் விசாரித்துள்ளார். விசாரணையில் சிலர் தாக்கியதாகச் சிறுமி மழுப்பலாக பதில் கூற, சிறுமியின் தந்தை இது குறித்து ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து சிறுமியிடம் பெண் காவலர்கள் விசாரணை நடத்தியதில் அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதிப்படுத்தப்பட்டது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஈடுபட்டவர்களில் ஒருவர் சட்டமன்ற உறுப்பினரின் மகன் என்றும், அதேபோல் வக்ப் வாரியத் தலைவரின் மகன் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த பப்புக்கு வெளியே பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார், மாணவியுடன் வெளியே நடந்து செல்லும் அந்த மாணவர்கள் யார் யார் என்பது குறித்த அடையாளங்களை சேகரித்தனர். மொத்தம் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சாதுத்தீன் மாலிக் என்பவரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தெலுங்கானாவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க ரத்து செய்யும்” - மத்திய அமைச்சர் அமித்ஷா

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Union Minister Amit Shah says BJP will cancel reservation for Muslims

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இதனையடுத்து, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், “மஜ்லிஸுக்கு பயந்து காங்கிரசும், டி.ஆர்.எஸ் கட்சியும் தெலுங்கானா விடுதலை தினத்தைக் கொண்டாடுவதில்லை. மஜ்லிஸுக்கு பயப்படாததால் தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடுவோம் எனப் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாஜக வழங்கும்.

காங்கிரஸும், டி.ஆர்.எஸ்.ஸும் ராமர் கோயில் கட்டுவதை ஒருபோதும் விரும்பவில்லை. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்துவிட்டு, காஷ்மீரை என்றென்றும் இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார் நரேந்திர மோடி. மத்திய பாஜக தலைமையிலான அரசு, 10 ஆண்டுகளில், நீண்ட காலமாக நாட்டில் நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம், காஷ்மீரை நாட்டோடு என்றென்றும் ஒருங்கிணைத்துவிட்டார் மோடி. ரகுநந்தன் ராவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் மோடியை மீண்டும் பிரதமராக்க உதவும்” என்று கூறினார். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்