"ஹலோ தலைவரே, இந்தியாவின் ஒட்டுமொத்தப் பார்வையும் இப்ப தமிழகத்தின் பக்கம் திரும்பியிருக்கு.''”
"உண்மைதாம்பா, டெல்லிக்கு எதிராக தென்மாநிலங்களின் அரசியல் கட்சிகள் தமிழகத்தில் கூடுகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, ஒன்றிய அரசு அமல்படுத்தத் திட்டமிட்டிருக்கும் தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட்டியுள்ள கலந்தாய்வுக் கூட்டம், 22ஆம் தேதி சென்னை ஐ.டி.சி. சோழா ஓட்டலில் நடக்கிறது. இதில் 3 மாநில முதல்வர்கள் உட்பட தென்மாநிலங்களின் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சீனியர் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். ஒன்றிய அரசு திட்டமிடும், மறுசீரமைப்புத் திட்டத்தால் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு வரும் வெளிமாநில அரசியல் தலைவர்களை ஏர்போர்ட்டில் இருந்து வரவேற்று அழைத்துவரும் பொறுப்பு, தி.மு.க. அமைச்சர் களுக்கும் எம்.பி.க்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தை பிரமாண்டப்படுத்த தி.மு.க. அரசு முடிவு செய்திருக்கிறது. இதில் எடுக்கப்படும் முடிவுகள், ஒன்றிய அரசுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும் என்கிறார்கள் தி.மு.க. சீனியர்கள். அதனால் டெல்லியின் கண்களும் தமிழகத்தின் மீதே பதிந்திருக்கின்றன.''
"நடிகர் விஜயை தி.மு.க.வின் பி-டீம் என்று ஒருவர் விமர்சனம் செய்திருக்கிறாரே?''”
"பதவி ஊசலாட்டத்தில் இருக்கும் தமிழக பா.ஜ.க.வின் அந்த நிர்வாகிதான், நடிகர் விஜய் டீமை, தி.மு.க.வின் பி-டீம் என்று சொல்லியிருக்கிறார். அதன் சுவாரஸ்யமான பின்னணி இதுதான். டாஸ்மாக் விவகாரத்துக்கு எதிராக பா.ஜ.க. நடத்திய போராட்டத் தின்போது, அவரை அவர் வீட்டிலேயே கைது செய்துவிட்டது போலீஸ். அன்று மதியம் 3 மணிக்கு அவர் கொல்கத்தா செல்ல பிளைட் டிக்கெட் போட்டிருந்தார். அதற்குள் விடுவித்துவிடு வார்கள் என்று நினைத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் எடுத்த டிக்கெட்டை, 6 மணி பிளைட் டுக்கு மாற்றிக்கொண்டார். அதற்கான நேரமும் போலீஸ் பிடியிலேயே கழிந்தது. இதனால் அவர் ரொம்பவே டென்ஷனாகிவிட்டார். இரவு விடுவிக்கப்பட்ட நிலையில் அவரிடம் ஒரு தொலைக்காட்சி நிருபர்,’"அமலாக்கத்துறை... டாஸ்மாக் விவகாரத்தைச் சரியாகக் கையாளவில்லை என்று த.வெ.க. புஸ்ஸிஆனந்த் சொல்கிறாரே'’என்று கேட்டார். அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத அந்த பா.ஜ.க. நிர்வாகி புஸ்ஸி, கிஸ்ஸி எல்லாம் இப்படிப் பேசக்கூடாது. நடிகர் விஜய்யே தி.மு.க.வின் பி-டீம்தான்’என்று கமெண்ட் செய்துவிட்டார். இதையறிந்த பா.ஜ.க.வின் தேசிய மேலிடம், "விஜய்யை நம் கூட்டணிக்குக் கொண்டுவரலாம் என்று பார்த்தால், நீ வெண்ணெய் திரளும் நேரத்தில் தாழியை உடைக்கப் பார்க்கிறாயே'’என்று கடுமையாகக் கடிந்து கொண்டதாம். இது எப்படி இருக்கு?''”
"இப்படிப்பட்ட பா.ஜ.க. மாநில நிர்வாகிக்கு எதிராக, அந்தக் கட்சியிலேயே சூறாவளி வீசுகிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, சட்டமன்றப் பொதுத்தேர் தலை எதிர்நோக்கும் வகையில் பா.ஜ.க. மாநில நிர்வாகி, தங்கள் கூட்டணியை பலப்படுத்துவதற்கு பதிலாக பலவீனப் படுத்துகிறார் என்கிற குற்றச்சாட்டு சொந்தக் கட்சிக்காரர்கள் மத்தியிலேயே வலுத்திருக்கிறது. இந்த நிலையில் அண்மையில் டாஸ்மாக் விவகாரத்தைக் கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் பா.ஜ.க. நடத்திய போராட்டம் படுதோல்வியைச் சந்தித்தது. பல மாவட்டங்களில் போராட்டம் அறிவிக்கப் பட்ட இடங்களுக்கு ஆட்களே வரவில்லையாம். இதனால், ஒரு போராட்டத்தைக் கூட சரியாக ஆர்கனைஸ் செய்யமுடி யாத கட்சி என்கிற விமர்சனத்தை பா.ஜ.க. சந்தித்துவருகிறது. இதனால் எரிச்சலான பா.ஜ.க. நிர்வாகிகள் மாநில நிர்வாகி மீது புகார்களை தங்கள் டெல்லித் தலைமைக்கு அனுப்பிவரு கிறார்கள். இந்த நிலையில் தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்கும் அந்த பா.ஜ.க. நிர்வாகி, எனக்கு இல்லாவிட்டால் இந்தப் பதவியை கட்சியில் இருக்கும் தலித் பிரமுகரான பொன்.பாலகணபதிக்குக் கொடுக்கவேண்டும் என்று தேசியத் தலைமையிடம் கேட்டு வருகிறாராம். இதனால் தலைமைப் பதவியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நயினார் நாகேந்திரனும் வானதிசீனிவாசனும், அந்த மாநில நிர்வாகி மீது ஏகக்கடுப்பில் இருக்கிறார்களாம்.இப்படி சொந்தக் கட்சியிலேயே சூறாவளியை சந்தித்து வருகிறார் அந்த பா.ஜ.க. நிர்வாகி.''”
"அடப் பரிதாபமே. அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையில் சமாதானக் கொடி யைப் பறக்கவிட்டதும் பா.ஜ.க.தான் என்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க.வின் தேசியத் தலைமைதான் எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக் கும் இடையில் சமாதானம் ஏற்படக் காரணமாக இருந்திருக்கிறது. வேலுமணி மூலம் அழுத்தம் கொடுத்து இருவரையும் பேச வைத்ததாம். அப்போது செங்கோட்டையன், "என் தொகுதியில் எனக்கு ஒத்துவராத, வேட்டுவக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முன்னெடுக்கிறீர்களே... இது சரியா? என்று எடப்பாடியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு எடப்பாடி, "உங்களால் கட்சியின் சீனியர்களான முத்துசாமி, தோப்பு வெங்கடாசலம் உட்பட 10 பேர் கட்சியை விட்டுப் போய்விட்டார்கள். இருந்தும் உங்கள் பக்கம்தான் நான் இருந்தேன். அப்படியிருக்க, நான் அந்த நபரை முன்னெடுத்தது உங்களுக்குப் பிடிக்க வில்லை என்றால், என்னிடமே பேசி இருக்கலாமே. அதை விட்டுவிட்டு பகிரங்கமாக நீங்கள், எனக்கெதிராகக் காய் நகர்த்தலாமா?' என்று கேட்டிருக்கிறார். இப்படி இருவரும் மனம் விட்டுப் பேசியதன் பேரிலேயே சமாதானம் ஆகியிருக்கிறார்கள். இதன்பிறகு மனம் குளிர்ந்துபோன எடப்பாடி, "சட்டசபையில் கல்வித்துறை பற்றி அனுபவமுள்ள செங்கோட்டையன் பேசவேண்டும்' என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்து, அனை வரையும் ஆச்சரியப்படுத்தினார். இப்படி இந்த இருவருக்கும் இடையில் அழுத்தம் கொடுத்து, சமாதானக் கொடியைப் பறக்கவிட்டதாம் பா.ஜ.க.''”
"ரொம்ப நாளைக்குப் பிறகு பா.ம.க. மாமல்லபுரத்தில் சித்திரைத் திருவிழாவை எடுக்கப்போகிறதே?''”
"மாமல்லபுரத்தில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் சித்திரைத் திருவிழாவை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நடத்துவது வழக்கம். 2013-ல் பா.ம.க. நடத்திய சித்திரை திருவிழாவைத் தொடர்ந்து மரக்காணத்தில் ஏற்பட்ட பெரும் கலவரம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக, அன்றைக்கு இருந்த ஜெ.’ தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் மீது பா.ம.க. கடுமையாகக் குற்றம்சாட்ட... ஜெ.வும், பா.ம.க.வைக் கடுமையாக அப்போது விமர்சனம் செய்தார். அனைவரையும் பதறவைத்த இந்தக் கலவரத்திற் குப் பிறகு, கடந்த 12 ஆண்டுகளாக சித்திரைத் திருவிழாவை நடத்தாமல் இருந்த ராமதாஸ், இந்த வருடம் நடத்தத் தீர்மானித்திருக்கிறார். இதற்கு ஏறத்தாழ 25 லட்சம் பேரைத் திரட்டுவதென ராமதாசும் அன்புமணியும் திட்டமிட்டுள்ளனர். இந்த சித்திரை விழாவில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட முக்கிய வட இந்திய தலைவர்களை அழைக்கவும் தைலாபுரத் தரப்பு முடிவுசெய்திருக்கிறது. "இந்த விழா, வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்குச் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்' என்கிறார்கள் பா.ம.க.வினர்.''”
"ஒன்றிய நிதியமைச்சருக்கு எதிரான சூறாவளி கிளம்பியிருக்கிறதே?''”
’"தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாதான். நாடு முழுவதும் உள்ள இந்த வங்கிக் கிளைகளுக்குத் தேவையான ஸ்டேச னரி பொருட்கள் தொடங்கி எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வரை, இதன் மும்பைத் தலைமை யகமே காண்ட்ராக்ட் மூலம் கொள்முதல் செய்கிறது. இதில், பத்தாயிரத்துக்கும் அதிகமான சிறு குறு தொழில் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன.''
"கடந்த ஜனவரி மாதம் மும்பை தலைமையக பர்ச்சேசிங் பிரிவின் கணினி சர்வர், செயலிழந்துவிட்டது. இதைக் கடந்த 3 மாதங்களாக வங்கி அதிகாரிகள் சரிசெய்யாமல் விட்டுவிட்டார்கள். இதனால், வங்கிக் கிளைகளுக்குப் பொருட்களை சப்ளை செய்தது தொடர்பான கணக்கு வழங்க்களுக்கு தீர்வுகாண முடியவில்லை. அதனால் அவற்றுக்கு தரவேண்டிய பல லட்ச ரூபாயைப் பட்டுவாடா செய்யாமல் வங்கி அதிகாரிகள் இழுத்தடித்து வருகிறார்கள். எனவே பாதிக்கப்பட்ட நிறுவனத்தினர் ஒன்றிய நிதி அமைச்சகத்துக்கு இது தொடர்பாகப் புகார் அனுப்பினர். இருந்தும் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட இதில் அக்கறை காட்டவில்லையாம். அதனால், எஸ்.பி.ஐ. நிர்வாகத்துக்கு எதிராகவும், நிதி அமைச்சகத்துக்கு எதிராகவும் போராட்டம் நடத்த, சம்மந்தப்பட்ட சிறுகுறு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.''
"சரிப்பா, சாலையோரங்களில் உள்ள தி.மு.க. கொடிக்கம்பங்களை அகற்றும்படி, தொண்டர் களுக்கு அறிவாலயம் உத்தரவிட்டிருக்கிறதே?''”
"பொது இடங்களில் உள்ள தி.மு.க. கொடிக் கம்பங்களை அகற்றும்படி உடன்பிறப்புகளுக்கு கறாராகச் சொல்லியிருக்கிறது தி.மு.க. தலைமை. இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கும் தி.மு.க.வின் பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன், அகற்றப்பட்ட கொடிக்கம்பங்களைப் புகைப்படம் எடுத்துத் தலைமைக்கு அனுப்பவேண் டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். காரணம், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை மூன்று மாதங்களுக்குள் அகற்றவேண் டும் என்று, கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடுமை காட்டியது. இப்படிப்பட்ட கொடிக்கம்பங்களால் விபத்துகள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டுதான் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது கோர்ட். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வும், அந்த உத்தர வை உறுதி செய்தது. இதை முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு அரசின் தலைமை வழக்கறிஞர்கள், எடுத்துச் சென்றபோது, மற்ற கட்சிகளுக்கு முன்னோடியாக தி.மு.க. இருக்க வேண்டும் என்று சொன்ன ஸ்டாலின், இது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட வைத்திருக்கிறார்.''”
"ம.தி.மு.க. தலைவர் வைகோ, நாடாளு மன்றத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராகக் கடுமையாகப் பேசி அதிரவைத்திருக்கிறாராமே?''
"ஆமாங்க தலைவரே, மணிப்பூர் பற்றி தீவிர விவாதம் சென்றுகொண்டிருக்கிறது. இந்த நாட்டின் பிரதமருக்கு வெளிநாட்டில் என்ன வேலை? அவர் ஏன் மணிப்பூருக்குச் செல்ல வில்லை? மணிப்பூர் இந்தியாவில் இல்லையா? "பி.எம் என்றால் பிரைம் மினிஸ்டர். ஆனால், நம்முடைய பி.எம் பிக்னிக் மினிஸ் டர்!' என விளாசிய வரை, பிரதமர் குறித்து பேசக்கூடா தென்று துணை சபாநாயகர் கட்டுப் படுத்த முயல, "நான் திரும்பத் திரும்பக் கூறுவேன். எது நாடாளுமன்றத்துக்குப் புறம் பானது? நான் வைகோ... இந்த நாடாளுமன்றத் தில் 24 வருட அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் அண்ணா இயக்கத்திலிருந்து வந்தவன். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி? எத்தனை பட்டாளம் கூட்டிவரும்? கன்னங் கிழிபட நேரும், கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்' என்று ஆவேசமாக முழங்கியபோது, "பாராளுமன்றப் புலி' என்று புகழப்பட்ட இளமைக்கால வைகோ வை மீண்டும் பார்த்ததுபோல இருந்தது.''”
"நானும் ஒரு மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துக்கறேன். அரசுப் பணி, சமூகப் பணி ஆகிய இரண்டிலும் சிறந்த சேவை செய்தமைக் காக, முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புக்கு சிறந்த சேவை விருதை வழங்கியிருக்கிறது இங்குள்ள ராஜஸ்தானி அசோசியேசன். இதற்கான விழா கடந்த 16ஆம் தேதி சென்னையில் நடந்தது. விழாவில் இறையன்புக்கு விருதும், அதனுடன் 2 லட்சம் ரூபாய் பணப் பரிசும் வழங்கி கௌரவிக்கப் பட்டது. தனக்கு வழங்கப்பட்ட 2 லட்சத்தை, சென்னை கண்ணகி நகர் மக்களின் வாழ்வா தாரத்திற்காகப் பாடுபடும் ’முதல் தலைமுறை அறக்கட்டளைக்கு வழங்கு வதாக மேடையிலேயே அறிவித்தார் இறையன்பு. சொன்னதோடு, விழா முடிந்ததும் நேராக கண்ணகி நகருக்கே சென்று, அந்த 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அந்த அறக்கட்டளையிடமே வழங்கினார். இதைக்கண்டு கண்ணகி நகர் மக்கள் நெகிழ்ச்சியுடன் அவரை வாழ்த்தினர்.''”