Skip to main content

கஸ்டம்ஸ் கஸ்டடியில் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர்!

Published on 28/10/2020 | Edited on 28/10/2020

 

Sivasankaran, former secretary of pinarayi Vijayan case

 

 

கேரளாவில் கரோனாவுக்கு மத்தியிலும் பெரும்  பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒடி கொண்டிருக்கும் சம்பவம் ஸ்வப்னா சுரேஷின் தங்க கடத்தல் விவகாரம். இந்த விவகாரத்தின் முக்கிய புள்ளியாக செயல்பட்ட கேரளா முதல்வரின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன் 2 மாதத்துக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் சுங்கத்துறை மற்றும் அமலாக்கதுறையின் விசாரணை வளையத்தில் இருந்த சிவசங்கரன் தன்னை கைது செய்யாமல் இருக்க கேரளா உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமின் பெற்று தனது மனைவி கீதா டாக்டராக பணிபுரியும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து பிறகு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

 

தொடா்ந்து அங்கிருந்து வஞ்சியூரில் ஆயூா்வேத சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார். இந்த நிலையில் உயர்நீதிமன்றம் 23ஆம் தேதி வரை சிவசங்கரனை கைது செய்ய தடை விதித்திருந்தது. அதன் பிறகு 23ஆம் தேதி மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அப்போது 28ஆம் தேதி வரை  கோர்ட் தடை விதித்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் முன்ஜாமீன்  கேட்டு மனு தாக்கல் செய்தார். அப்போது நீதிபதிகள் கஸ்டம்ஸ் தரப்பில் தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் அவா் மீது குற்றச்சாட்டுகள் ஆணித்தரமாக உள்ளது, அவரை விசாரிக்க வேண்டும். மீண்டும் முன்ஜாமீன் கொடுத்தால் அவர் மீதான விசாரணைக்கு தடையாக இருக்கும். இதனால் இந்த வழக்கும் நீண்டு கொண்டே தான் செல்லும். இதை தொடர்ந்து தான் சிவசங்கரனின் முன்ஜாமீன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

 

இதனை தொடர்ந்து கஸ்டம்ஸ் அதிகாரிகள் சிவசங்கரனை ஆயூர்வேத மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்ய வைத்து அவரை கொச்சியில் இருக்கும் கஸ்டம்ஸ் மண்டல அலுவலகத்துக்கு காரில் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் 13 கேள்விகள் கேட்க இருக்கின்றனர். அந்த கேள்விகளுக்கு அவர் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் சிவசங்கரன் கைது செய்யப்படாலம் என்கிறது கஸ்டம்ஸ் வட்டாரம்.

 

இதற்கிடையில் கேரளா சட்டமன்ற எதிர்கட்சி தலைவா் ரமேஷ் சென்னிதலா பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோர் தங்கக் கடத்தல் வழக்கில் முதல் குற்றவாளியான முதல்வர் பினராயி விஜயன் முதல்வர் பதவியை ராஜினமா செய்துவிட்டு அதை வேறொருவரிடம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனா். சிவசங்கரன் கைது செய்யப்பட்டால் கேரளாவில் துறை செயலாளா்களில் கைது செய்யபட்ட முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி இவா் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.