Skip to main content

18 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை! - உ.பி.யில் பயங்கரம்

Published on 23/02/2018 | Edited on 23/02/2018

கடைக்குச் சென்று வருவதாக வெளியே சென்ற 18 வயது சிறுமி, உயிருடன் எரிக்கப்பட்டு பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Bur

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் உள்ளது பாரா சாகர் பகுதி. இங்கு நேற்று மாலை தேரா பஜாருக்குச் சென்று காய்கறி வாங்கி வருவதற்காகச் சென்ற சிறுமி, உடல் முழுவதும் கருகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

வீட்டிற்கு மிக அருகாமையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் அளித்த புகாரை அடுத்து, சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர். முதல்கட்ட விசாரணையில் சிறுமி உயிருடன் எரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

 

ஆனால், இந்த சம்பவம் கொலைதானா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏனெனில், சிறுமி உயிரிழந்த நேரம், வீட்டிலிருந்து கிளம்பிய நேரம் என அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, அவர் தற்கொலை செய்திருப்பதற்கான வாய்ப்பிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இருப்பினும், முழுமையான விசாரணைக்குப் பிறகே கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக பாஜக அலுவலகத்தில் கு.க.செல்வம் (படங்கள்)

Published on 05/08/2020 | Edited on 05/08/2020

 

 

தி.மு.க. தலைமை மீது ஆயிரம் விளக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க. செல்வம் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாகவும் தகவல் வந்த நிலையில் நேற்று டெல்லியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுடன் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். 

 

இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் அவர்கள், அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து இன்று முதல் (05.08.2020) விடுவிக்கப்படுகிறார்'' என குறிப்பிட்டுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் அவர்கள், கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதையொட்டி, அவரை தற்காலிகமாக கழகத்தில் இருந்து நீக்கி வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என அதில் கூறப்பட்டிருந்தது.

 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கு.க.செல்வம், தமிழக பாஜக அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவரை பாஜகவினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். பாஜக அலுவலகத்தில் திறக்கப்பட்ட ராமர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் கு.க.செல்வம். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுகவை விட்டு என்னை நீக்கினாலும் கவலை இல்லை” என தெரிவித்தார்.

 

 

Next Story

ஒரு லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 மாணவர்களுக்கு வழங்கிய உ.பி. அரசின் கொடுமை!

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேச பள்ளிக்கூடத்தில் மதிய உணவுக்காக ரொட்டியும் உப்பும் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பாகியது. இப்போது, ஒரு பள்ளியில் மதிய உணவுக்காக ஒரு லிட்டர் பாலில் தண்ணீரைக் கலந்து 81 மாணவர்களுக்கு கொடுத்த கொடுமை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

were given 81 students a liter of water milk ;The cruelty of the UP state!

 

பாலில் தண்ணீர் கலப்பதை கேள்விப்பட்ட நமக்கு, தண்ணீரில் பாலைக் கலந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்துவது சகஜம்தான். ஏழை எளிய குழந்தைகளுக்கு சத்துணவு அளிப்பதற்காக ஏற்படுத்திய திட்டங்களிலும், மருத்துவ வசதி ஏற்படுத்தும் திட்டங்களிலும் உத்தரப்பிரதேச ஆதித்திய நாத் அரசு செய்யும் முறைகேடுகள் அடிக்கடி வெளியாவது குறிப்பிடத்தக்கது.