Skip to main content

உள்ளூர், வெளியூர் மல்லுக்கட்டு! -திருச்சி எம்.பி. வேட்பாளர்?

Published on 14/02/2019 | Edited on 04/03/2019

மே மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், தமிழகத்தின் பெரிய கட்சிகள், கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிட்டன. எம்.பி. சீட்டைக் கைப்பற்ற, கோதாவில் குதித்துள்ளனர் கட்சிப் புள்ளிகள். யாருக்கு எந்த தொகுதி என்ற பரபரப்பிற்கிடையே, தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் உள்ளூர் வேட்பாளரா, வெளியூர் வேட்பாளரா என பட்டிமன்றம் நடக்கிறது.
 

vaiko

திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், திருவரங்கம், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதுதான் இப்போதைய திருச்சி எம்.பி.தொகுதி. இத்தொகுதியில் இந்து, கிறிஸ்தவ பிள்ளைமார் ஓட்டுகள் பெரும்பான்மையாகவும் அதற்கடுத்து முறையே தலித், இஸ்லாமியர்கள், கள்ளர், முத்துராஜா, உடையார், பிராமணர் ஓட்டுகளும் இருக்கின்றன.

1980-ல் வெற்றி பெற்ற தி.மு.க.வின் என்.செல்வராஜ், 84, 89, 91, 96-தேர்தல்களில் வெற்றி பெற்ற காங்கிரசின் அடைக்கலராஜ், இந்த இருவரும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 98, 99-ல் சேலத்தைச் சேர்ந்த ரங்கராஜன் குமாரமங்கலம் பா.ஜ.க. சார்பிலும், 2004-ல் தஞ்சையைச் சேர்ந்த எல். கணேசன் ம.தி.மு.க. சார்பிலும் எம்.பி.யானார்கள். 2009, 2014 தேர்தல்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்த பி.குமாருக்கு சொந்த ஊர்... இத்தொகுதிக்குட்பட்டதும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்ததுமான கந்தர்வக்கோட்டை என்றாலும் தற்போது திருச்சியிலேயே செட்டிலாகிவிட்டார். இந்தமுறையும் தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். அவருடன் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், புதுக்கோட்டை கார்த்திக் தொண்டைமான், அருள்செந்தில் ராம், ராமலிங்கம் உள்ளிட்ட 10 பேர் அ.தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

வருகிற தேர்தலில் பல கட்சிகளிலும் வெளியூர் வி.ஐ.பி.க்கள் திருச்சியை நோக்கி தங்களது பார்வையைத் திருப்பியுள்ளதால், உள்ளூர் வி.ஐ.பி.க்கள், இப்போதே உஷார் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டனர். இந்த முறை விருதுநகர் தனக்கு தோதுப்படாது என நினைத்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தூத்துக்குடியில் களம் இறங்கலாமா என நினைத்தபோது, அங்கே தி.மு.க.வின் கனிமொழி, இப்போதே களப்பணிகளை ஆரம்பித்துவிட்டார். தமக்கு திருச்சி தான் தோதுப்படும் என்ற எண்ணத்துடன், தி.மு.க. தலைமையுடன் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையும் நடத்தி முடித்து, தொகுதி முழுவதும் ஒரு மாதமாக தொடர்ச்சியாக கூட்டங்களையும் நடத்தி முடித்துவிட்டார் வைகோ. 2004-ல் தி.மு.க., ம.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வின் எல்.கணேசன் திருச்சியில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையெல்லாம் கணக்குப் போட்டு, தி.மு.க. மா.செ. கே.என்.நேருவிடம், லோக்கல் ம.தி.மு.க. புள்ளிகள் தெரிவித்தபோது, “""வைகோ எவ்வளவு பெரிய தலைவர், அவருக்கு எதுக்கு அலைச்சல். அதனால எங்க தலைவரிடம் பேசி ராஜ்யசபா சீட்டை வாங்கச் சொல்லுங்க''’என நேரு சொன்னதும் லேசாக ஜெர்க்காகிவிட்டனர் ம.தி.மு.க. புள்ளிகள். அவர்களை சமாதானப்படுத்தி வழியனுப்பும்போது, ""ம.தி.மு.க.வைச் சேர்ந்த நம்மூரு டாக்டரம்மா ரொக்கையாவுக்கு சீட் கொடுத்தா, இஸ்லாமியர்கள் ஓட்டுக்களை மொத்தமா வாங்கி ஜெயிக்க வைக்கலாம்''’’என சொல்லியுள்ளார் நேரு.

தி.மு.க. நின்றாலும் கூட்டணிக் கட்சிகள் நின்றாலும் உள்ளூர் வேட்பாளர்தான் என்பது கே.என்.நேருவின் கணக்கு.

congressநேருவின் எண்ண ஓட்டம் இப்படி இருக்க, தனது மாவட்டமான புதுக்கோட்டை, திருச்சி தொகுதிக்குள் வருவதால், தமிழக காங்கிரசின் மாஜி தலைவரான திருநாவுக்கரசருக்கும் திருச்சி மீது ஆசை வந்துவிட்டது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவி இல்லாவிட்டாலும் எம்.பி. சீட் வாங்கிவிடும் நம்பிக்கையில் உள்ள திருநாவுக்கரசர், கடந்த வாரம் நேருவிடம் பேசியிருக்கிறார். "மொதல்ல சீட்டை வாங்குங்க, அப்புறம் பார்த்துக்கலாம்'’என்றிருக்கிறார் நேரு.

1999 எம்.பி. தேர்தலில் லோக்கல் காங்கிரஸ் வேட்பாளர் அடைக்கலராஜை வீழ்த்தி தி.மு.க. கூட்டணியில் நின்ற பா.ஜ.க. வேட்பாளர் ரங்கராஜன் குமாரமங்கலத்தை ஜெயிக்க வைத்தார் நேரு. அதற்குப் பரிகாரமாக இந்தமுறை அடைக்கலராஜின் மகன் ஜோசப்லூயியை காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கினால், ஜெயிக்க வைக்கலாம் என்பது நேருவின் வியூகம். எந்த சர்ச்சையிலும் சிக்காத ஜோசப்லூயியை திருச்சியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், ஸ்டாலினிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார் நேரு. ஏற்கனவே ஸ்டாலின் குடும்பத்திற்கு அறிமுகமானவர், ராகுல்காந்தியை தலைவராக முன்மொழிந்த, தமிழகத்தைச் சேர்ந்த 11 பேரில் ஒருவர். இதெல்லாமே ஜோசப்லூயிக்கு சீட் கிடைக்க வாய்ப்பு பிரகாசமா இருக்கு என்கிறார்கள் திருச்சி காங்கிரஸ் புள்ளிகள். வேறு கட்சிகளின் நிலைமை இப்படி இருக்க, எம்.பி.வேட்பாளர்களுக்கு கட்சித் தலைமையிலிருந்து 15 சி தரப்போவதாக தகவல் வெளியானதால், தி.மு.க.வைச் சேர்ந்த அன்பழகனும் இன்னும் சிலரும் வேட்பாளர் ரேஸில் குதித்திருக்கிறார்கள்.

இதற்கிடையே திருச்சியை குறிவைக்கும் வைகோ எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளது பா.ஜ.க. தி.மு.க. பற்றியும் கலைஞர், ஸ்டாலின், கி.வீரமணி குறித்தும் வைகோ பேசிய பழைய பேச்சுக்கள் அடங்கிய மீம்ஸ்களை ரெடியாக வைத்துள்ளனராம் பா.ஜ.க.வினர்.



 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது. 

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.