Skip to main content

"ஒரு ஐஏஎஸ் ஆபீஸரை இப்படியா அவமானப்படுத்துவது... குப்பைத் தொட்டியில்தான் இதை தூக்கிப் போட வேண்டும்..." - ராமசுப்பிரமணியன் வேதனை

Published on 25/10/2022 | Edited on 27/10/2022

 

தச

 

நீண்ட வருடங்களாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்வரிடம் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி வழங்கியிருந்தார். கிட்டத்தட்ட சில நாட்களாகவே பரபரப்பைக் கிளப்பி வந்த அந்த அறிக்கை கடந்த வாரம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவையில் வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை தரப்பட்டிருந்தால் அவர் பிழைத்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும், அவர் இறப்புக்கு சசிகலாவை குற்றம் சாட்டுவதைத் தவிர ஆணையத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை என்று தெரிவித்திருந்த நிலையில் இது தொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் ராம சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் சில கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு: 

 

மிக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஆறுமுகசாமி அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா இறப்புக்கு சசிகலாவை குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என்று தெரிவித்துள்ளார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

 

சார், நான் எந்த அரசியில் கட்சியிலும் இல்லை. அதனால் இந்த விஷயத்தில் மனசாட்சியோடு தான் பேச விரும்புகிறேன். நேற்று கூட இந்த அறிக்கை தொடர்பாக ஆங்கில நாளேடு ஒன்று கருத்து தெரிவித்து எடிட்டோரியல் பகுதியில் செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த கட்டுரையின் முடிவில் இது குப்பைத் தொட்டி அறிக்கை என்ற தொனியில் கருத்து தெரிவித்து, கடைசியாக இதை அங்கே தான் போட வேண்டும் என்று கூறியிருந்தது. அந்த நாளேடு கூறிய அந்த கருத்தோடு நான் முற்றிலும் உடன்படுகிறேன். இது அரசியலுக்கு வேண்டுமானால் அவரின் அறிக்கை பயன்படலாம். அதைத்தாண்டி அவரின் அறிக்கையில் எந்த முக்கியத்துவமும் இருப்பதாக நான் கருதவில்லை. 

 

ஜெயலலிதாவுக்கு எப்போதிலிருந்தே உடல்நலப் பிரச்சனை இருப்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே. நீண்ட நாட்களாக அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுதான் இருந்தார்கள். குறிப்பாக பெங்களூர் சிறையிலிருந்து அவர்கள் வந்த பிறகு அவர்கள் உடல்நலன் மிகவும் பாதிக்கப்பட்டது. அவர்களின் செயல்பாடுகளிலேயே அதனை நாம் அறிந்துகொள்ளும் வகையில் அவர்கள் உடல் நலிவுற்றுக் காணப்பட்டார்கள். நீழிரிவு, நுரையீரல், சுவாச பிரச்சனை எனப் பலவற்றோடு அவர்கள் தொடர்ந்து போராடி வந்தார்கள் என்பது உண்மை. இதை எதையும் பற்றி கவனத்தில் கொள்ளாமல் முடிவெடுக்கும் இடத்தில் சசிகலா இருந்தார்கள் என்பது எல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றா? நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. 

 

வெளிநாட்டுச் சிகிச்சை, ஆஞ்சியோ சிகிச்சை பற்றியெல்லாம் அதில் தெரிவித்துள்ளார்கள். ஆனால் அதை ஏன் செய்யவில்லை என்று தற்போது பலர் கேள்வி எழுப்புகிறார்கள். இது எல்லாம் அவர்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களுக்குத் தெரியாதா என்ன? இல்லை வேண்டும் என்றே அவர்கள் செய்யவில்லை என இவர்கள் கூற வருகிறார்களா என்று தெரியவில்லை. ஜெயலலிதாவை பொறுத்தவரையில் அவர்கள் உடல்நிலை சமச்சீராக இல்லை. பிபி லெவல் என்பது கண்ணாபின்னா என்று இருந்துள்ளது. இந்த நிலையை வைத்துக்கொண்டு அவருக்கு ஆஞ்சியோ எப்படி மருத்துவர்கள் கொடுக்கவில்லை என்று இவர்கள் கூறுகிறார்கள் என எனக்குப் புரியவில்லை.

 

நாம் நினைக்கும் சிகிச்சை எல்லாம் எல்லோருக்கும் அளித்துவிட இயலாது. பாதிக்கப்பட்டவரின் உடல் நலத்தை நாம் தீவிரமாக ஆராய வேண்டும். மேற்கொள்ளப்படும் சிகிச்சை அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற உத்தரவாதம் நமக்கு ஏற்படும் நிலையில்தான் மேல் சிகிச்சையை மருத்துவர்கள் அளிக்க முன்வருவார்கள். எனக்கே சொந்த அனுபவம் ஒன்று உண்டு. என் தாயாருக்கு இதேபோன்று உடல்நல பாதிப்பு வந்தபோது மிகச் சிறந்த மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்தோம். மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முன்வரும்போது அவரின் உடல்நிலை சமச்சீரற்ற  நிலைக்கு திடீரென சென்றுவிட்டது. உடனடியாக இந்த நிலையில் அவருக்கு மேல் சிகிச்சை அளிப்பது உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். எனவே அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று பார்த்துக் கொள்ளுங்கள். நாங்களும் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றினோம். 

 

ஜெயலலிதாவுக்கும் இதேபோன்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே அவர்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் சிகிச்சை அளிக்காமல் தவிர்த்திருக்கலாம். அவர்களின் உடல்நிலை ஏற்கனவே சீராக இல்லாத நிலையில் இறப்பு நடந்திருக்கலாம் என்பதே என்னுடைய கணிப்பு. தனிப்பட்ட நபரை இந்த ஆணையம் குற்றம் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். 2012ம் ஆண்டே சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் சண்டை. இணைந்தாலும் இருவருக்குள்ளும் வருத்தம் இருந்தது என்று இவர் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

 

இதையும் தாண்டி இந்த அறிக்கை முழுவதுமே அடுத்தவர்களைக் குறை சொல்லுவதை மையமாகக் கொண்டே செயல்பட்டிருக்கிறது. ஐஏஎஸ் ஆபீசர் ராதாகிருஷ்ணனை இந்த அறிக்கையில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் மிக திறமையான அதிகாரி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவர் ஒரு வெட்னரி டாக்டர் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் இந்த மருத்துவர்கள் பற்றி ஏதோ கூறியதாகவும், அதற்கு இவர் கடுமையான வரிகளில் கண்டனம் தெரிவித்துள்ளதும் வியப்பாக உள்ளது. மருத்துவர் என்று அவரை அழைக்காமல் இருப்பதே சிறந்தது என்ற சொல் பதத்தை எல்லாம் ஆணைய அறிக்கையில் கூறாமல் விட்டிருக்கலாம். தவறான முன் உதாரணமாக இது உருவாகிவிடும்.

 

 

 

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.