Skip to main content

கொடநாடு! சிக்கிய சாட்சியம்! கைதாகப்போகும் முக்கிய புள்ளி?

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

Kodanadu estate case police investigate to edappadi special security

 

“கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதற்கட்டமாக ஒரு பெரிய கைதினை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் செய்யப்போகிறார்கள்” என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

 

கோவை ஐ.ஜி. சுதாகர் தலைமையில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, தற்பொழுது சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளையும் அவர்களது வாக்குமூலங்களையும் ஊட்டி கோர்ட்டில் ரகசிய ஆவணமாகச் சமர்ப்பித்தார் ஐ.ஜி. சுதாகர். தற்பொழுது சி.பி.சி.ஐ.டி. போலீசார் எடுத்துவரும் நடவடிக்கைகள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலங்களில் என்ன இருந்தது என்பதை நிரூபித்து வருகிறது என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

 

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலகட்டம் முதல் இன்றுவரை அவருக்கு மூன்று செக்யூரிட்டி ஆபீசர்கள் இருக்கிறார்கள். ஒருவர் பெயர் ரெட்டி. இரண்டாவது நபர் கிருஷ்ணராஜ். மூன்றாவது நபர் தர்மராஜ். இதில் ரெட்டி என்பவர் வழுக்கைத் தலையோடு இருப்பார். இரண்டாவது நபரான கிருஷ்ணராஜ் சேலத்தைச் சேர்ந்தவர். மூன்றாவது நபர் தர்மராஜ் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். எடப்பாடி எங்குச் சென்றாலும் இந்த மூவரும் உடன் செல்வார்கள். ரெட்டியும் தர்மராஜும் முறையே எடப்பாடிக்கு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் மூன்று அடி தொலைவில் நிற்பார்கள். கிருஷ்ணராஜ் அருகில் நிற்பார்.

 

Kodanadu estate case police investigate to edappadi special security

 

விழாக்களில் கலந்துகொள்ளும் எடப்பாடி, யார் எதைக் கொடுத்தாலும் சாப்பிடமாட்டார். அவர் சாப்பிடும் தண்ணீரைக் கூட கிருஷ்ணராஜ் கொடுத்தால்தான் எடப்பாடி வாங்குவார். எடப்பாடிக்கு கிருஷ்ணராஜ் மீது அவ்வளவு நம்பிக்கை என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். சேலத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜின் குடும்பம், எடப்பாடிக்கு மிக நெருங்கிய குடும்பம். அவரிடம் எடப்பாடி மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரும் மிகவும் நெருங்கிப் பழகுவார்கள். எடப்பாடி மகன் மிதுன் மற்றும் உறவினரான சம்பந்தி ராமலிங்கம் ஆகியோருடன் நெருங்கிப் பழகுவார் கிருஷ்ணராஜ். சேலம் இளங்கோவன், கிருஷ்ணராஜ் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வார். ஆறுகுட்டி எம்.எல்.ஏ., அனுபவ் ரவி போன்றவர்களும் கிருஷ்ணராஜுவுடன் நன்றாகப் பழகுவார்கள். இந்த கிருஷ்ணராஜைக் குறிவைத்து தமிழக போலீஸ் நகர்ந்து கொண்டிருக்கிறது. “இவருக்கும் கொடநாடு வழக்கிற்கும் தொடர்பு இருக்கிறது. விரைவில் இவர் சிக்குவார்” என்கின்றது தமிழக காவல்துறை வட்டாரம்.

 

எடப்பாடி முதல்வராக இருந்தபோது, முக்கியமான விஷயங்களைப் பேசும்போது தனது செல்போனை உபயோகிக்கமாட்டார். அதேபோல் கொடநாடு கொள்ளை சம்பவத்தின்போது அந்தக் கொள்ளையை நடத்திய கனகராஜ் மற்றும் அந்தக் கொள்ளைக்கு பேருதவியாக இருந்த அனுபவ் ரவி, ஆறுகுட்டி ஆகியோரிடம் பேச, தனது பாதுகாவல் அதிகாரிகளாக இருந்தவர்களின் செல்போனை எடப்பாடி உபயோகித்துள்ளார். அதில் ரெட்டி, தர்மராஜ், கிருஷ்ணராஜ் ஆகியோரது செல்போன்களை உபயோகித்துத்தான் எடப்பாடி பேசியிருப்பார். அதில் கிருஷ்ணராஜின் செல்போன் எண்ணை எடப்பாடி உபயோகித்தார் என ஆறுகுட்டியும், அனுபவ் ரவியும் போலீசில் போட்டுக் கொடுத்துள்ளனர்.

 

Kodanadu estate case police investigate to edappadi special security

 

கொடநாடு கொலை வழக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களையாவது பெறவேண்டும் என, கோர்ட்டிலேயே சி.பி.சி.ஐ.டி. சமீபத்தில் நடந்த வாய்தாவின்போது வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறது. அதில் எடப்பாடிக்கு செக்யூரிட்டி ஆபீஸராக இருந்தவர்களின் செல்போனும் ஒன்று என்கிறது காவல்துறை வட்டாரம்.

 

முதல்வரின் செக்யூரிடிகள், முதல்வரின் நடவடிக்கை குறித்து உளவுத்துறை தலைவரிடம் சொல்ல வேண்டும். அமைச்சர்களின் செக்யூரிட்டிகளை வைத்துதான் அமைச்சர்களின் நடவடிக்கைகளை உளவுத்துறை கண்காணிக்கும். அவர்களது செக்யூரிட்டி ஆபீசர்களை முதல்வருக்கு நெருக்கமானவர்கள்தான் தேர்ந்தெடுத்து அமைச்சர்களுக்கு நியமிப்பார்கள்.

 

எடப்பாடி முதல்வராக இருந்தபோது, உளவுத்துறை தலைவராக இருந்தவர் சத்தியமூர்த்தி. அவரும் முதல்வர் எடப்பாடியிடம் சொல்லவேண்டிய சில விஷயங்களை அவரது செக்யூரிட்டி ஆபீசர்கள் மூலமாகத்தான் சொல்வார். முதல்வர் பேசுவதை யார் டேப் செய்வார்கள்? டேப் செய்யும் பொறுப்பிலுள்ள சத்தியமூர்த்தியே நம்மிடம் பேசுகிறார் என்கிற தைரியத்தில் செக்யூரிட்டி ஆபீசர்கள் அலட்சியமாக இருந்தனர். ஆனால், எடப்பாடி கொடநாடு கொலை, கொள்ளை பற்றி முழுவதும் செக்யூரிட்டி ஆபீசர்களின் செல்போனை உபயோகித்துப் பேசியுள்ளார். எனவே, எடப்பாடியின் செக்யூரிட்டி ஆபீசர்கள் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிக்கியுள்ளனர்.

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த ஐ.ஜி. சுதாகர் டீம் இந்த உண்மை பற்றி ஸ்மெல் செய்து கண்டுபிடித்துவிட்ட நிலையில், விசாரணை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவில் எடப்பாடியின் செக்யூரிட்டி ஆபீசர்கள் போலீஸ் விசாரணைக்கு உள்ளாவார்கள். அவர்கள் கைது செய்யப்படலாம் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

 

செக்யூரிட்டி ஆபீசர்கள் கைது செய்யப்பட்டால், எடப்பாடி மீதான பிடி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இறுகும். இது அரசியல் ரீதியான பழி வாங்கல் என எடப்பாடி பிதற்றுவார் என்பதால், அரசின் அனுமதி வேண்டிக் காத்திருப்பதாகக் கூறுகிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.