Skip to main content

குளத்தை தூர்வாருவது நாங்கள் பணத்தை ஆட்டைய போடுவது அதிகாரிகளா? கோபத்தில் மக்கள்

Published on 02/07/2018 | Edited on 03/07/2018

திருச்சி புதுக்கோட்டை பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள பெரிய குளத்தில் திருச்சி - குண்டூர் பெரியகுளம் ‘காப்புக் குழு’ மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் இணைந்து கடந்த ஆண்டு ஒரு மாதம் வரை தூர்வாரப்பட்ட குளத்தில் ஊராட்சி சார்பில் ரூ.19 லட்சத்தில் தூர்வாரப்பட்டதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
 

திருச்சி அடுத்த திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூரில் 376 ஏக்கரில் பெரியகுளம் உள்ளது. இதன் மூலம் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பாசனம் நடைபெறுகிறது. குண்டூரில் உள்ள பெரியகுளம் ஆழம் குறைந்து மேடுகள் நிரம்பியுள்ளன. பெரிய குளத்தை உரிய காலத்தில் தூர்வாருதல், மேடுகளை அகற்றிக் குளத்தை ஆழப்படுத்துதல், நான்கு பக்கங்களிலும் கரைகளை வலிமைப்படுத்துதல் மூலம் நம் பகுதிக்கான நீர் ஆதாரங்களைச் சேமிக்கமுடியும். பெரிய குளத்தைச் சீர்படுத்தினால் நம் பகுதி வேளாண்மையில் முப்போகம் விளைச்சல் பெறலாம். நிலத்தடி நீர் வளம் பெருகும். கால்நடைகளின் வளமும் வளர்ச்சியும் பெருகும். என இந்த குளத்தை தூர்வாருவதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை அதிகாரிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளாதால் திருச்சி குண்டூர் பெரியகுளம் ‘காப்புக் குழு’ மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் தண்ணீர் என்கிற அமைப்பு பங்களிப்புடன் சுமார் ரூ.8 லட்சம் செலவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் குளம் தூர்வாரும் பணி 1 மாதமாக நடந்தது. அப்போது மழை தொடங்கியதால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் தூர்வாரும் பணி நடைபெறவில்லை. அதன் பிறகு தற்போது வரை எந்த முன்னேற்றமும் தூர்வாறும் பணியும் நடைபெறவில்லை.

 

இந்நிலையில் குளத்தின் கரையில் சில நாட்களுக்கு முன் குண்டூர் ஊராட்சி சார்பில் ஒரு விளம்பர கல் வைக்கப்பட்டுள்ளது. அதில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.19 லட்சம் செலவில் கடந்த பிப்ரவரி மாதம் இக்குளம் தூர் வாரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்பார்த்த விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 
 

இது குறித்து விவசாய சங்க தலைவர் திரிசங்கு பேசுகையில், குண்டூர் பெரியகுளத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருச்சி - குண்டூர் பெரியகுளம் ‘காப்புக் குழு’ மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் தண்ணீர் என்கிற அமைப்பு சார்பில் கொட்டை செடி அகற்றப்பட்டு குளம் தூர்வாரும் பணி நடைபெற்றது. அதன்பிறகு நேற்று வரை குளத்தில் இருந்து ஒருபிடி மண்கூட அள்ளப்படவில்லை.

ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி ரூ. 19 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு முடிவடைந்த நிலையில் மீதி ரூ. 5 ஆயிரம் இருப்பதாக கூறுவது அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது வெட்ட வெளிச்சமாக உள்ளது. தொடர்புடைய அதிகாரிகள் இது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்றார்.

 

பொதுமக்கள் தன்னார்வலர்கள் இணைந்து தூர்வாரிய வைத்து கணக்கு காண்பித்து அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்து பணத்தை ஆட்டைய போடுகிறார்கள் என்று மக்கள் கொதிப்படைந்தனர். 
 

குண்டூர் பெரியகுளம் தூர்வாரப்பட்டு கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது குறித்து ஊராட்சி செயலாளர் விக்னேஷிடம் கேட்டபோது, குண்டூர் குளத்தில் கடந்த வருடம் நடைபெற்ற பணிக்கு முடிந்த வேலைக்கு கல்வெட்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்றார். 
 

கடந்த ஜூன் மாதம் திருச்சி - குண்டூர் பெரியகுளம் ’காப்புக் குழு’ மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் தண்ணீர் என்கிற அமைப்பு தூர்வாரும் பணியை துவக்கி வைக்க திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி துவக்கி வைத்தார். அப்போது குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தண்ணீர் அமைப்பின் தலைவர் திரு.சேகரன் தலைமையில் செயலாளர் திரு.கே.சி.நீலமேகம் மற்றும் இணைச்செயலர் கி.சதீஷ் குமார் உடன் குண்டூர் பெரிய குளம் காப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தூயவளனார் கல்லூரியின் தமிழாய்வுத்துறை பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் மற்றும் பெல் மகேந்திரன், திருமதி ரம்யாசதீஷ்குமார் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அப்போது கலெக்டர் ராஜாமணி ஆக்கிரமிப்புகள் அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சாலையோர பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இன்றைக்கு வரை இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபாடாத நிலையில் ஊராட்சி அலுவலரின் இந்த நடவடிக்கையினால் பொதுமக்கள் முதல் தன்னார்வலர்கள் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.