Published on 11/07/2018 | Edited on 11/07/2018

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. நாளை வியாழக்கிழமை 12.07.2018 சென்னையில் முதல்வரிடம் பெருந்திரள் முறையீடு நடைபெறுகிறது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் இன்றே சென்னைக்கு செல்கின்றனர். அரசின் அடக்குமுறைகளையும், தடைகளையும் முறியடித்து சென்னை நோக்கி செல்வோம் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.