Skip to main content

கத்தி முனையில் நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் - இருவர் கைது

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

tamil actress jewels theft issue case

 

சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசிக்கும் துணை நடிகை ஒருவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் இருவர் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அத்துடன் அந்த நடிகையின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க நகையையும் பறித்து சென்றுள்ளனர். மேலும் அவரை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நடிகை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவரான  ராமாபுரம் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டாவது நபர் அய்யப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பது தெரியவந்தது.

 

இதனை தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் துணை நடிகையின் வீட்டிற்கு சென்று பணம் மற்றும் நகைகள் கொள்ளையடித்ததுடன் கத்தியை காட்டி அவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் பின்பு இருவரையும் கைது செய்த காவல்துறையினர்  அவர்கள் மீது ஐ.பி.சி. சட்ட பிரிவு 376 மற்றும் 397 ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர். இதையடுத்து கொள்ளையடிக்கப்பட்ட  நகை மற்றும் பணம் மீட்கப்பட்டு துணை நடிகையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தற்போது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

Next Story

புடவைகளை விற்று உதவி செய்த பிரபல நடிகை

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
navya nair helped charity people with his saree sold

மலையாள திரையுலகில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை நவ்யா நாயர். மேலும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளியான 'அழகிய தீயே', சேரனின் 'மாயக்கண்ணாடி', முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய 'பாசக்கிளிகள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இப்போது மலையாளத்தில் மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்த நிலையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில், தான் ஒரு முறை அணிந்த மற்றும் புதிதாக வாங்கி அணிய முடியாத புடவைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதாக அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் கைத்தறி, காஞ்சிபுரம், பனாரஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான புடைவைகள் இருப்பதாகவும் நியாயமான விலையில் அவை கிடைக்குமெனவும் கூறியிருந்தார். இது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர். 

navya nair helped charity people with his saree sold

இதையடுத்து நவ்யா நாயர் விற்பனையை தொடங்கினார். அதன் மூலம் கிடைத்த லாபத்தை கேரள பத்தனாபுரத்தில் உள்ள காந்திபவனுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். அங்கு வசிப்பவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் பயனுள்ள பொருட்களை வாங்கிக் கொடுத்து அருகில் இருக்கும் காந்தி பவன் சிறப்பு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையையும் கொடுத்துள்ளார். இவரது செயல் தற்போது பாராட்டை பெற்று வருகிறது.