Skip to main content

அர்னவ் விவகாரத்தில் புதிய திருப்பம்; நடிகை திவ்யா பரபரப்பு பேட்டி

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

serial actor arnav issue divya press meet

 

சின்னத்திரை தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். கடந்த 2017ம் ஆண்டு முதல் உடன் நடித்த சீரில் நடிகர் அர்னவை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக வாழ்ந்துவந்துள்ளனர். பிறகு திவ்யா இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது காதலன் அர்னவை சில மாதங்களுக்கு முன்பு எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே, "தான் மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் கணவர் அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், வயிறு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்ததாக கூறினார். கணவர் அடித்ததில் எப்போது வேண்டுமானாலும் கருகலையும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். 

 

இதனையடுத்து அர்னவ், ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அர்னவ், "தான் திவ்யாவை அடித்து துன்புறுத்தவில்லை, அதற்கான சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக இருக்கின்றது. தன்னுடைய குழந்தையை கருக்கலைப்பு செய்யும் எண்ணத்துடன் திவ்யா செயல்படுகிறார். இதற்கு பின்னால் ஆர்ட்டிஸ்ட் ஈஸ்வரன் என்ற நபர் இருக்கிறார். திவ்யாவிற்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருப்பது தெரியும். ஆனால் அவர் ஒரு குழந்தையை வீட்டிற்கு அழைத்து வருவார் நான் பார்த்திருக்கிறேன். யார் குழந்தை என கேட்ட போது தன் அக்கா குழுந்தை என சொன்னார். அது பொய் என்று இப்போதுதான் தெரியவந்தது." என பேசியிருந்தார். 

 

இந்நிலையில் திவ்யா சென்னை பெருநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அர்னவ் மீது புகாரளித்துளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் திவ்யா பேசினார். அப்போது கூறுகையில், "இந்து மதத்திலிருந்து மதம் மாறினால் திருமணம் செய்துகொள்ளலாம் என அர்னவ் சொன்னார். அவர் மேல் உள்ள அன்பினால் அர்னவ் மட்டும் போதும் என்று நினைத்து மதம் மாறினேன். பின்பு என் ஆசைப்படி காஞ்சிபுரத்தில் இந்து முறைபடியும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதன் பிறகு ஜூன் 29ஆம் தேதி முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்தோம். அதே நாளில் பதிவு திருமணமும் செய்து கொண்டோம். பின்பு நான் கர்ப்பமானதில் இருந்தது என்னை தவிர்க்க ஆரம்பித்தார். அர்னவ், அவருடன் சீரியலில் நடித்து வரும் ஒரு நடிகையுடன் நெருங்கி பழகி வருவதாக எனக்கு தெரியவந்தது. நான் ஒரு நாள் படப்பிடிப்பு தளத்திற்க்கு போனேன். அப்போது இருவரும் நெருக்கமாக இருந்தனர். பின்பு அவர்களிடம் கேட்டபோது நடிகை அன்ஷித்தா என் வயிற்றில் தண்ணீர் பாட்டில் மூலம் அடித்தார். 

 

அதன் பிறகு எங்களுடைய திருமண புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டேன். உடனே அதனை நீக்க சொல்லி அர்னவ் உடன்பிறந்தவர்கள் என்னை டார்ச்சர் செய்தனர். நான் அனைத்தையும் நீக்கினேன், ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையினால் ஒரு வீடியோ மட்டும் நீக்கவில்லை. இதன் காரணமாக நீ வீடியோவை நீக்க வில்லை, நான் விவாகரத்து செய்து விடுகிறேன் என அர்னவ் சொன்னார். பின்பு அந்த வீடியோவையும் நீக்கிவிட்டேன். அடுத்த நாள் அர்னவ் இந்த புகைப்படங்களை பகிர்ந்து இது வெறும் விளம்பர படம் மட்டும் தான், இது நிஜ திருமணம் கிடையாது என குறிப்பிட்டிருந்தார். பின்பு அந்த நடிகை என்னிடம், 'நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணுவேன் நீ என்ன இங்க பண்ற' என பேசி ஒரு ஆடியோ அனுப்பியிருந்தார். அவளும் ஒரு முஸ்லீம் தான், என் முன்னிலையில் தொலைபேசியில் அசிங்க அசிங்கமாக பேசினார், அர்னவிடம் என் முன்னாள் ப்ரொபோஸ் செய்து முத்தம் கொடுக்கிறார். இதற்கு அர்னவும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதற்கு எல்லாம் அந்த நடிகை தான் காரணம்" என குற்றம் சாட்டியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“காலரைப் பிடித்து கேட்க வேண்டும்” - கிஷோர் கடும் விமர்சனம் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
kishore against pm modi speech regards mutton in sawan

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் பிரதமர் மோடி, கடந்த 12ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் தேர்தல் பேரணியில், இந்தியா கூட்டணி தலைவர்கள், ஆட்டிறைச்சி சாப்பிட்டதன் மூலம் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் பெயரை குறிப்பிடாமல் முகலாயர்களுடன் ஒப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளைப் பற்றி காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி மக்கள் கவலைப்படுவதில்லை. மக்களின் உணர்வுகளுடன் விளையாடி மகிழ்கிறார்கள்.

நீதிமன்றத்தால் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் ஒருவர், அப்படிப்பட்ட குற்றவாளியின் வீட்டுக்குச் சென்று, சாவான் மாதத்தில் ஆட்டிறைச்சி சமைத்து மகிழ்ந்து, நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய வீடியோ எடுக்கிறார்கள். சட்டம் யாரையும் எதையும் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை ஆனால் இவர்களின் எண்ணம் வேறு. முகலாயர்கள் இங்கு தாக்கிய போது, கோயில்களை இடிக்கும் வரை அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால் முகலாயர்களைப் போலவே சாவான் மாத வீடியோவைக் காட்டி நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய நினைக்கிறார்கள்” என்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் ராகுல் காந்தியும் லாலு பிரசாத் யாதவும் ஒன்றாக ஆட்டிறைச்சி சமைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கிஷோர் பதிவிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ரஃபேல் முதல் தேர்தல் பத்திரம் வரை, மோடியும் அவரது கட்சியினரும், நம்முடைய பணத்தில் சாப்பிட்டுவிட்டு, யாரோ சாப்பிட்ட இறைச்சி குறித்து கேள்வி கேட்கின்றனர். மதவெறியையும், வெறுப்பையும் மட்டுமே பரப்பி, தேர்தல் நடத்தை விதிகளை மீண்டும் மீறியுள்ளனர். தேர்தலில் போட்டியிட அவருக்கும் அவரது கட்சிக்கும் என்ன தகுதி இருக்கிறது?

முதுகெலும்பில்லாத தேர்தல் கமிஷன், கைப்பாவை அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஐ.டி அவருக்கு ஆதரவாக இருக்கின்றன. அவரின் காலரைப் பிடித்து நாம் கேட்காத வரை, அவர் எளிதில் மதவெறியையும், வெறுப்பையும் பரப்புவார்” என கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கெனவே விவசாயிகளின் போராட்டத்தின் போது, அவர்களுக்கு ஆதரவாக கிஷோர் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.