Skip to main content

"உங்கள் மேல் மிகப்பெரிய மரியாதை சார்" -இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி 

Published on 14/09/2020 | Edited on 14/09/2020
jfjfj

 

 

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுகள் நேற்று இந்தியா முழுவதும் நடந்து முடிந்தது. இதற்கிடையே இந்த தேர்வுக்காக தயாராகி வந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, மாணவர் ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீட் தேர்வை எதிர்த்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வரும் நிலையில் இதுகுறித்து இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்...

 

"நடிகர் திரு.சூர்யா அவர்களின் நீட் பற்றிய அறிக்கை அதிகார மையங்களிலிருந்து எதிர்வினைகள் மற்றும் கடுமையான எதிர்ப்புகள் வருமென்று தெரிந்தும் அறத்தின் பக்கம் நிற்பவனே கலைஞன். அவனே மாமனிதன். உங்கள் மேல் மிகப்பெரிய மரியாதை சார். #BanNEET" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்