Skip to main content

"'அசுரன்', 'கர்ணன்' வரிசையில் பிரம்மாண்ட படைப்பு" - ரசிகர்களை குஷிப்படுத்திய தயாரிப்பாளர் தாணு 

Published on 14/02/2022 | Edited on 14/02/2022

 

producer kalaipuli thanu tweet about naane varuven film

 

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில்  உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்துவருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில், கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவந்தது. இதனிடையே, தனுஷ் ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்திலும், செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்திலும் நடித்துவந்ததால், ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு படங்களின் பணிகளை முடித்துள்ளதால், தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். 

 

இந்நிலையில், 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, 'அசுரன்', 'கர்ணன்' வரிசையில் 'நானே வருவேன்', நீங்கள் கொண்டாடும் வகையில் திரையரங்கில்... தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பு, விரைவில் வெள்ளித்திரையில்.." எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்