![prabhas -prasanth kneel](http://image.nakkheeran.in/cdn/farfuture/omPsgNezJG27_s_9ZlM8iBGQT3i-zE3FhjhUrre3jKI/1606731492/sites/default/files/inline-images/prabhas-neel-im.jpg)
தெலுங்கு திரைப்படத்துறையில் முன்னணி நடிகரான பிரபாஸ், பாகுபலி 1 மற்றும் 2 ஆம் பாகங்களின் வெற்றிக்கு பிறகு இந்திய அளவில் பெரிய நட்சத்திரமாக உயர்ந்தார். அதனைத்தொடர்ந்து, 350 கோடி ரூபாய் செலவில் உருவான, சாஹோ படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
சாஹோ படத்திற்கு அடுத்ததாக, பிரபாஸ் தற்போது ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன்பிறகு, ஆதி புருஷ் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட இருக்கிறது. இந்தநிலையில், கன்னடம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி, ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 'கே.ஜி.எப்' படத்தின் இயக்குனர், பிரசாந்த் நீல்லோடு, பிரபாஸ் இணைவதாக, தகவல் வெளியானது.
இந்தநிலையில், இவர்கள் இருவரும் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகிவுள்ளது. இப்படம், தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் வெளியாகும் அனைத்திந்திய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாபெரும் வெற்றிப்படங்களை தந்த கூட்டணி, ஒன்றாக இணைவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்திருக்கிறது. பிரஷாந்த் நீல், தற்போது கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.