Skip to main content

"இவைகள்தான் எஸ்.பி.பி. கரோனாவிலிருந்து விடுபடும் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளன" - தயாரிப்பாளர் தனஞ்செயன் மகிழ்ச்சி!

Published on 24/08/2020 | Edited on 24/08/2020
gagfa

 

 

பிரபல பாடகர் எஸ்.பி.பி. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் மக்கள் அவரது உடல்நலன் சரியாக வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்தினார்கள். இதனிடையே தினசரி எஸ்.பி.பி. உடல்நலன் குறித்து அவரது மகன் சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் எஸ்.பி.பி.க்கு கரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டதில் நெகட்டிவ் என்று வந்துள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...   

 

"எஸ்.பி.பாலசுப்பிராணியம் சார் கரோனாவிலிருந்து மீண்டு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பிரார்த்தனைகளும், அவரின் உத்வேகமும்தான் இந்நோயிலிருந்து விடுபடும் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளன. நீங்கள் எல்லா நோய்களிலிருந்தும் விரைவாக மீண்டு வர விரும்புகிறேன் எஸ்.பி.பி சார்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்