Skip to main content

ஸ்ரீதேவியின் பயோஃகிராபி - இந்தாண்டுக்குள் வெளியிடத் திட்டம்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

actress sridevi  biography to be published as book

 

திரைத்துறையில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'கந்தன் கருணை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் ஸ்ரீதேவி. பின்பு பல படங்களில் நடித்து கதாநாயகியாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார். 1996 இல் போனி கபூரை மணந்தவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

 

2018 இல் துபாயில் இருந்த போது ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்றபோது குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். இது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

இவரது கணவர் போனி கபூர் தயாரிப்பாளராகவும் மகள் ஜான்வி கபூர் நடிகையாகவும் திரைத்துறையில் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், ஸ்ரீதேவியின் வாழ்க்கை கதை புத்தகமாக வெளியாகவுள்ளது. இந்தப் புத்தகத்தை தீரஜ் குமார் எழுத வெஸ்ட்லேண்ட் புக்ஸ் நிறுவனம் இந்தப் புத்தகத்தை வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த போனி கபூர் இந்த ஆண்டு இப்புத்தகம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உயிரோடு இருக்கும் வரை அனுமதிக்க மாட்டேன்” - போனி கபூர் உறுதி

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
boney kapoor about sri devi biopic

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'கந்தன் கருணை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் ஸ்ரீ தேவி. பின்பு பல படங்களில் நடித்து கதாநாயகியாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார். 1996இல் போனி கபூரை மணந்தவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

2018இல் துபாயில் இருந்தபோது ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்ற ஸ்ரீ தேவி குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். குளியல் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் பல்வேறு பேச்சுக்கள் இருந்து வந்தது.  

இந்த சூழலில் ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாறு கடந்த ஆண்டு புத்தகமாக வெளியானது. இந்த நிலையில் ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகாது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த போனி கபூர், “அவர் எப்போதும் தனிப்பட்ட நபராகவே இருப்பார். அவரது வாழ்க்கையும் தனிப்பட்டதாகவே இருக்கட்டும். அதனால் அவரது பையோ பிக் உருவாகாது. நான் உயிரோடு இருக்கும் வரை அதை அனுமதிக்க மாட்டேன்” என்றுள்ளார். 

Next Story

ஸ்ரீதேவி மரணம் தொடர்பான குற்றச்சாட்டு - சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
pinniti statement regards sridevi passed away issue CBI submit the charge sheet

பிரபல நடிகை ஸ்ரீதேவி, 2018ஆம் ஆண்டில், துபாயில் ஒரு ஓட்டல் அறையில் குளியல் தொட்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். குளியல் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் பல்வேறு பேச்சுக்கள் இருந்து வந்தது. அந்த வகையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தை சேர்ந் தீப்தி பின்னிதி என்பவர், ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இரு அரசுகளும் அதை மூடி மறைப்பதாகவும் குற்றம் சாட்டினார். 

மேலும் அவரது யூட்யூப்பில், உச்சநீதிமன்ற ஆவணங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆவணங்கள் என கூறி பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுதிய கடிதங்கள் என வெளியிட்டிருந்தார். இதையடுத்து தீப்தி பின்னிதி மீது மும்பையை சேர்ந்த சாந்தினி ஷா என்ற வழக்கறிஞர் பிரதமர் அலுவலகத்தில் புகாரளித்திருந்தார். இந்த புகார் குறித்து தீப்தி பின்னிதி மற்றும் அவரது வழக்கறிஞர் பரத் சுரேஷ் காமத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது. மேலும் தீப்தி பின்னிதி வீட்டில் ஆய்வு மேற்கொண்டு, செல்போன், லேப்டாப் உள்ளிட்ட ஆதாரங்களை கைப்பற்றியது. 

இந்த நிலையில் தீப்தி பின்னிதி மற்றும் அவரது வழக்கறிஞர் பரத் சுரேஷ் காமத் ஆகியோருக்கு எதிராக டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத்சிங் கடிதங்கள் உட்பட தீப்தி தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என விசாரணையில் தெரிய வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.